இலங்கைவாழ் தமிழ்மக்கள் இந்தியாவை நம்பியிருந்ததொரு காலம். இந்திய ஹெலிகொப்டரில் 1987ம் ஆண்டு யூலை 24ஆம் திகதியன்று புதுடெல்;லிக்கு அழைத்துச்செல்லப்பட்ட புலிகளின் தலைவர் உள்ளிட்ட குழு வினர் இந்தியாவின் அசோகா ஹோட்டலில் உள்ள 518ம் இலக்க விடுதி யில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவ தைவிட சிறைவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறலாம். பிரபாகரன் தங்கவைக்கப்பட்டிருந்த விடுதிக்கு வெளியே இந்தியாவின் கறுப்புப்பூனைப் படையினர் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து பிர பாகரன் உள்ளிட்ட...
  தமிழ் அரசியல்வாதிகளின் குரல் வளையை அரசாங்கம் நசுக்கிய வரலாறே இன்றுவரை… தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள் வரையில் தமிழ்மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும், குரல்வளை நசுக்கல்களும் தொடர்ந்து வந்திருப்பதை வரலாறு உணர்த்தும். அந்நியர்களின் ஆட்சியின்போது இலங்கைக் குடிமக்கள் உள்நாட்டு அரசியல் தலைமைத்துவத்தையே...
  என்மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவிப்பு என் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை தமிழரசுக்கட்சியிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு 20.1.2015 திகதியிட்டு அனுப்பி வைத்துள்ள கடித்தில் தெரிவித்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, எனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலும் தமிழரசுக்கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கிலும் கட்சியின் முடிவென்ற பெயரில் கடந்த 3 ஜனவரி 2015 இல்...
  தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகம் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட கட்சியின் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  
  வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது பொறுப்புகளை செத்சிரிபாயாவில் உள்ள தனது அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் வர்த்தக வாணிப அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாத் பதியுதீன், கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண...
  சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆணையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்;ட்(Sri Lanka Sinha Regiment )இனது ஆறாவது பட்டாலியனை (6th...
  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பல இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவர். இவரின் படை நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களைப் பற்றி என்றும் இவர் சிந்தித்தாரா இல்லை காரணம் அன்றும் அவர் தமிழரை மதித்ததில்லை இன்றும் மதிக்க மாட்டார் என்பது மட்டும் உண்மை இழந்த பதவி சிங்கள மக்களால் அல்ல மாறாக தமிழ் மக்களாளே மீண்டும் பொன்சேகாவிற்கு கிடைத்தது காரணம் தமிழர்களின் வாக்குப் பலம் ஜனாதிபதியைத் தீர்மானித்தது...
  யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடத்தொகுதி திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்விலே வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் , சுகாதார அமைச்சின் அதிகாரிகள் , பொதுமக்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.   ...
  அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் கூறியது போன்று, எதிர்வரும் 29 ஆம் திகதி சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு முதல்கட்டமாக 5,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் ஜுன் மாதம் மேலும் 5,000 ரூபாய் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்குமாறு பரிந்துரை செய்யப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்காக...