கடந்த காலங்களில், ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளை வெள்ளை வான்களில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவங்கள் தொடர்பில், வெள்ளை வானில் கடத்தப்பட்டு நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “தலைநகரிலிருந்து முக்கிய அமைச்சரொருவர் இவ்விடயம் தொடர்பில் என்னிடம் வினவினார். 2009ஆம் ஆண்டு பெப்ரவரியில் வெள்ளை வானில் வந்தவர்களால் நான் கடத்தப்பட்டேன். அதன் பின்னர், இந்த கடத்தல் தொடர்பில்...
  நல்லாட்சி பற்றி பேசும் சந்தர்ப்பத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்து கூறி தனக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த சம்பவம் பற்றி புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் வீ்ட்டுக்கு சென்றதாகவும் ஜனாதிபதியை சந்திக்கவே தான் அலரி மாளிகைக்கு சென்றதாகவும் வேறு...
  "தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் - அதிக உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நாம் இன்று தெளிவாக எடுத்துரைத்தோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தார். நாம் முன்வைத்த கருத்துகள் நியாயமானது...
  யாழ்.சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயில் கசிவினால் உருவாகியிருக்கும் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் நோக்கிலும், பாதிப்புக்களுக்கு உடனடித் தீர்வினை வழங்கக்கோரியும் சுன்னாகம் சிவன் ஆலயத்திற்கு முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் 3ம் நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைய தினம் குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பிரிவினரும் கலந்து கொண்டு உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர்.
LG நிறுவனம் கடந்த வருடம் LG Flex எனும் வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.இக்கைப்பேசியானது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் LG G Flex 2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. 5.5 அங்குல அளவு 1920 x 1080 Pixel Resolution உடைய வளையக்கூடிய Plastic OLED திரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Eight Core 64-bit Snapdragon 810...
இணையத்தளங்களில் பல்வேறு கணக்குகளை பேணுபவர்கள் தமது கடவுச்சொற்களை மிகவும் உறுதியானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல தடைவைகள் வெவ்வேறு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.எனினும் இவற்றினை சற்றும் பொருட்படுத்தாது தொடர்ந்தும் வலுவற்ற கடவுச்சொற்களை பாவிப்போர் தற்போது வரை இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு கடந்த வருடம் அதிக தடைவைகள் பயன்படுத்தப்பட்ட கடவுச்சொற்களே சான்று பகிர்கின்றன 2014ம் ஆண்டில் அதிக தடைவைகள் பயன்படுத்தப்பட்ட 25 கடவுச்சொற்களை SplashData நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை வருமாறு, 1. 123456 (Unchanged) 2....
பிரபலமான சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் இந்தியாவின் Zip Dial நிறுவனத்தை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கர்நாடக மாநிலம் பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் குறுஞ்செய்தி, குரல்வழி அழைப்பு, மொபைல் வெப் போன்ற சேவைகளை மக்களுக்கு வழங்கிவருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக Zip Dial நிறுவனமும் டுவிட்டர் நிறுவனமும் பங்காளிகளாக செயற்பட்டு வந்தன. இந்நிலையிலேயே தற்போது Zip Dial நிறுவனத்தை டுவிட்டர் வாங்க முன்வந்துள்ளது.
பல் போனாலே சொல் போச்சு என்று சொல்வார்கள். அது மட்டுமா அழகு, இளமைத் தோற்றம் என அனைத்தும் தொலைந்து போய்விடும்.இக்கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று தான் பல். பல் வலி, மஞ்சள் நிற பற்கள், ஈறுகளில் பிரச்னை என அடுக்கிக் கொண்டே போகலாம். பல் வலி பல்லில் துவாரம், தொற்றுக்கள், பற்களை ஒழுங்காக சுத்தம் செய்யாமை போன்ற காரணங்களினால் தான் பல் வலி ஏற்படுகிறது....
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது.அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து...
ஒருநாள் போட்டியில் அதிவேக சதத்தை விளாசிய டிவில்லியர்ஸ் சாதனையை முறியடிப்பேன் என பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.ஒருநாள் போட்டியில் 31 பந்துகளில் சதமடித்து தென் ஆப்பிரிக்க வீரரான ஏ.பி டிவில்லியர்ஸ் உலக சாதனையை ஏற்படுத்தியிருந்தார். இந்த சாதனை முறியடிக்க முயற்சி செய்யப் போவதாக அப்ரிடி தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண போட்டிகளிலோ அல்லது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலோ டிவில்லியர்ஸின் சாதனையை முறியடிக்க முயற்சி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். முதலில் 37 பந்துகளில்...