சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை இலங்கை வீரர்கள் பிடித்து அசத்தியுள்ளனர்.இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட டில்ஷான், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார்.
இதன் மூலம் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஷாகிப்-அல்-ஹசன் மற்றும் ஹபீஸ் ஆகியவர்களை பின்னுக்குத் தள்ளி, டில்ஷான் 4வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
38 வயதான டில்ஷான் கடைசி 10 ஒருநாள்...
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட கால காதலி இரினா ஷாயிக்கை பிரிந்தார்.மொடல் மற்றும் நடிகையான இரினா ஷாயிக்கும், ரொனால்டோவும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகும்.இந்நிலையில் இரினா ஷாயிக் உடன் உள்ள நீண்ட கால உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,...
விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை என்று தான் தீருமோ, இந்த சமூக வலைத்தளங்களில். தற்போது இந்த பிரச்சனையை மீண்டும் சரத்குமார் ஆரம்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இவர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு கருத்தை கூறியுள்ளார்.
இதை அறிந்த அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் ‘அதை எப்படி நீங்கள் சொல்லலாம்’ என்று கூற, தற்போது இந்த பிரச்சனை சமூக வலைத்தளங்களில் மிகவும் உச்சத்தை...
தமிழ் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கிற எந்த கதாநாயகியும் இப்படி ஒரு வாய்ப்பை மறுக்க மாட்டார்கள். ஆனால், நயன்தாரா தன்னை தேடி வந்த ஜாக்பாட் ஒன்றை திருப்பி அனுப்பியுள்ளார்.
இயக்குனர் அட்லீ இளைய தளபதியுடன் இணையும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை தான் கமிட் செய்தாராம்.
ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை நயன்தாரா இப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்து பாலிவுட் கதாநாயகியை நடிக்க...
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் ஈகோ இருப்பது சாதரணம் தான். ஆனால், வளர்ந்து வரும் நடிகர்கள் கூட சிலரை போட்டியாக நினைப்பது தான் வருத்தம்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் இருந்து வெளிவந்து கோலிவுட்டில் வெற்றி பெற்றவர்கள் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன்.
இவர்கள் இருவருக்கும் இடையே கொஞ்சம் ஈகோ இருந்து வந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் சுந்தர்.சி இயக்கவிருக்கும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
காணியும் வீட்டுத்திட்டமும் வழங்கப்படாத நிலையில் முல்லைத்தீவு முத்தையன்கட்டு மக்கள் தொடர்ந்தும் பழுதடைந்த தற்காலிக வீடுகளிலேயே வசிப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு ஜீவநகர் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பொன்றில் காணி வீட்டுத்திட்டம் ஏற்று நீர்ப்பாசனத்துக்கான வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்களும் முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த 2015-01-21 அன்று முத்தையன்கட்டு ஜீவநகர் 90 ஏக்கர் திட்ட மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மக்கள்...
தமிழ் சினிமாவில் தைரியமாக மனதில் பட்டதை பேசும் நடிகைகள் சிலர் மட்டுமே. அந்த வகையில் சமீபத்தில் ஒரு கேள்விக்கு ஸ்ருதி மிகவும் தைரியமாக பதில் அளித்துள்ளார்.
இதில் ‘தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் வெங்கடேஷ்க்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏன் மறுத்தீர்கள்’ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘ நான் தற்போது வளர்ந்து வரும் நடிகை, அதனால் இளம் கதாநாயகர்களுடன் மட்டுமே நடிப்பேன், அவரை போல் சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க...
ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன என்று திருநங்கைகள் கொதித்தெழுந்து எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டங்களும் செய்திருந்தனர்.
இந்நிலையில் ஐ படத்தில் தன்னுடைய சொந்த பாத்திரத்திலேயே நடித்த ஓஜாஜ் தற்போது கிளம்பியுள்ள போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஒரு கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, இந்த படத்தினை பார்த்து யாரும் கோவப்பட வேண்டாம். இயக்குநர் ஷங்கர் படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தினை அழகுடனும் நேர்த்தியுடனும் வடிவமைத்திருக்கிறார்.
என் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காதல்...
ஏமனில் ஜனாதிபதி மாளிகை கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால், மீண்டும் புரட்சி ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது.ஏமனில் கடந்த 2012ம் மக்கள் புரட்சி வெடிக்கவே, சர்வாதிகார ஆட்சி புரிந்த அலி அப்துல்லா சலே பதவி விலகி, அப்தராபுக் மன்சூர் ஹாடி என்பவர் ஜனாதிபதி பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஹவுதீஸ் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஜனாதிபதி ஹாடியும், அவரது அமைச்சர்களும்...
பிரான்சில் உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகளை பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது.பிரான்சில் தலைநகர் பாரிசில் நடந்த சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்குதல் மற்றும் சூப்பர் மார்க்கெட் தாக்குதல் பிரான்ஸ் மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இனி தாக்குதல்களை ஒழிக்கும் வகையில் பிரான்சின் உள்நாட்டிலே உருவாகும் தீவிரவாதிகளை ஒழிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மானுவெல் வேல்ஸ் (Manuel Valls)கூறுகையில், இந்த நடவடிக்கையில்,...