ஈரான் நாட்டில் ஷிராஸ் என்னும் பகுதியில் சால்ட் ரெஸ்டாரண்ட் என்னும் உணவகம் ஒன்று இருக்கிறது.உணவகத்தின் சுவர், பார், மேஜை, நாற்காலி என்று எல்லாமே முழுக்க முழுக்க பாறை உப்பால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இந்த உணவகத்தின் சிறப்பம்சம் ஆகும். இந்த உணவகத்தை வடிவமைத்த எமிட்டாஸ் டிசைனிங் க்ரூப் என்ற குழுவினர் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டிடங்களைக் கட்டுவதில் நிபுணர்கள். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கட்டிடங்களைக் கட்டி...
உலகிலேயே முதன் முறையாக நான்கு வயது சிறுவனுக்கு செயற்கை கணையம் பொருத்தப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த நான்கு வயது சிறுவன் சேவியர் ஹாமெஸ். முதல் வகை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த சேவியரின், உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து மாரடைப்பு, கோமா நிலைக்கு தள்ளப்படும் அபாய நிலையை எதிர்நோக்கி இருந்தான். எனவே செயற்கை கணையத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதாவது, சர்க்கரையின் அளவு அபாயகரமான நிலையில் குறையும் பட்சத்தில் அதனை கண்டறிந்து...
ஏர் ஏசியா விமான கருப்பு பெட்டியில் அபாய மணி அடித்தது பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கருப்பு பெட்டியினை மீட்ட அதிகாரிகள் விபத்து குறித்து அறிய அதை சோதனை செய்து வருவதில்...
மேற்கத்திய நாடுகளை குறிவைத்து ஓநாய் தாக்குதல் (உல்ஃப் அட்டாக்- திடீர் தாக்குதல்) நடத்த அல்கொய்தாவின் ஏமன் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக சைட் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.பாரீஸ் நகரில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திலும், கொஷார் சூப்பர் மார்க்கெட்டிலும் சமீபத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஏமன் நாட்டுப் பிரிவினர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், இன்னும் பல தாக்குதல் நடத்த திட்டமிட்டுப்பதாகவும்,...
.. சரத் பொன்சேகாவின் விடுதலையின் பின்னணி என்னவாக இருக்க முடியும்? முன்னாள் இராணுவத் தளபதியும் பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவருமான சரத் பொன்சேகாவின் விடுதலைதான், இன்றைய சூழலில் இலங்கை அரசியலில் பிரதான பேசுபொருள் ஆகும். அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் அரசியல் கைதி என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவின் விடுதலையை அமெரிக்கா வரவேற்பதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. பீரிஸ் தலைமையிலான குழு அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் நிலையில் சரத்...
தமிழீழ அமைப்பினரிடமிருந்து கடத்தப்பட்ட 350 தொன் தங்கங்களின் தொகையை பாதியை ராஜபக்ஷவினால் இரகசியமாக ஜப்பானிற்கு விற்பது தொடர்பாக கொடுக்கல் வாங்கல்களை அனைத்து சாட்சியுடன் வெளியிடுவதற்கு அக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய குழுவினர் தீர்மானித்துள்ளனர். மிக விரைவில் இது தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை நடாத்துவதற்கு தற்போது அவர்கள் தயாராகி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த தினங்களில் மஹிந்த ராஜபக்ஷவினால் இக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக தகவல் வெளியிட்ட நபரை தேடுமாறு புலனாய்வு...
  மஹிந்த அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது சரத் பொன்சேகாவை குற்றமற்றவராக நிரூபித்து அவரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் மீள ஒப்படைக்கப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இதற்கமைய அவர் குற்றமற்றவர் என அறிவித்து அவருக்கான பதவிநிலை, அந்தஸ்து என்பன மீள வழங்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி...
  அண்மையில் ஒரு ஊடகத்தின் வாயிலாக என்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தமிழ் தேசியத்தை துண்டு துண்டாக உடைப்பதற்கு முயற்சிக்கும் சில தீய சக்திகளின் சதிவேலை என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சேயோன் தெரிவித்துள்ளார். அண்மையில் இணையத்தளம் ஒன்றில் மட்டக்களப்பில் மீண்டுமொரு துரோகம் கோத்தாவுடன் இருட்டில் சேயோன் என தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்த செய்தி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே சேயோன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில் கடந்த பல...
  தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் காலை இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக தேர்தல் ஒன்றின் முடிவுகள் வந்து கொண்டிருக்கையில் இராணுவ நகர்வு ஒன்றுக்கு முயற்சிக்கப்படவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரிமாளிகையை விட்டு வெளியேறி விட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இராணுவப் புரட்சி...
    இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய விலைகளின் பட்டியல்படி: 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 117 ரூபா, 95 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 128 ரூபா, டீசல் ஒரு லீற்றர் 95 ரூபா, விசேட டீசல் 110 ரூபா, மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 65 ரூபாவாகும். புதிய தேசிய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைய எரிபொருள் விலைக்குறைப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் விரைவில் அத்தியாவசியப்பொருட்களின்...