மகிந்த தானாக விரும்பி அறிவித்த தேர்தலைப் பயன்படுத்தி அவரை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியாவே முன்னிலை வகித்தது. சீனாவின் நீர்மூழ்கி கொழும்பிற்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தமை இந்தியாவின் இறையாண்மையை பாதித்ததே அதற்கான காரணம் என நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். ஆனால் தற்போதைய அரசு சீனாவின் இலங்கையில் முன்னெடுக்கப்படும் எந்தத் திட்டத்தையும் நிறுத்தாது. அவை தொடரும். ஆனால் இராணுவ நோக்கங்களிற்கு இந்தியாவைச் சார்ந்து இலங்கை செயற்படும். அமெரிக்கா...
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்காக அதற்கான மாதிரி யாப்பு ஒன்றைத் தயாரித்து தமிழரசுக் கட்சியிடம் வழங்கிவிட்டு தற்போது அவர்களின் முடிவுக்காக காத்திருக்கின்றோம். இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 'ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்' என்ற தொனிப்பொருளில் வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்களுடனான சந்திப்பின் போது அவர்...
  இரட்டைக் குடியுரிமை உடைய எவரும் தேர்தல்களில் போட்டியிட போட்டியிட அனுமதியளிக்கப்பட மாட்டாது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றபப்ட உள்ளது. இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டி தங்களுக்கு விருப்பமான வகையில் நடந்து கொள்கின்றனர் என ஆளும் கட்சியின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பின்னர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விடுகின்றனர்.  இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. ஒருவர் இலங்கையில் தேர்தல்களில் போட்டியிட வேண்டுமாயின்...
  அரசியலில் மானம் ரோசம் எல்லாம் கிடையாது  இந்த வீடியோவை பார்த்தால் புரியும்   // Post by Mohamed Sanas.
  ஐ.நாவின் யுத்தக்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு – ரணில் அறிவிப்பு சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்தியாவின் என்.டி.ரீ.வி இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைத்து செயற்படும். ஆனால் சர்வதேச சட்டங்களின் கீழ் சிறிலங்காவிற்குள் யாரையும் தண்டிக்க இடமளிக்கப்படமாட்டாது என்று அவர் கூறியுள்ளார். குற்றவாளிகள்...
  கிரிஸ் பூதம் இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் புதுசு புதுசா பலது முளைத்தது அது மட்டுமன்றி அது உலகையை கலக்கியது . உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம நபர்கள் பெண்களுடன் சில்மிஷம் செய்ததுடன் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களிலும் ஈடுபட்டனர் . அத்துடன் நின்று விடாது கூரிய ஆயுதங்களினால் பெண்களின் அங்கங்களை வெட்டி விட்டும் தப்பி சென்றனர்.. பெண்களை பாலியல் வல்லுறவும் புரிந்தனர் நாடே கொதித்து போனது யார் இவர்கள்...
  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை வத்தளைப்பகுதியில் தீ பற்றி எரிந்துள்ளது. கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக பஸ் தீப்பற்றிக்கொண்டுள்ளது. இதனையடுத்து பஸ்ஸிலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸில் 36 பயணிகள் இருந்தனர் என்றும் அவர்கள் எவருக்கும் ஆபத்து ஏற்றபடவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும். தமிழ் மக்களினுடைய அரசியல் இருப்பையும் பாதுகாத்திருக்க முடியும். ஐ.நா செயலாளர் தனக்குள்ள அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தியிருக்க முடியும். போருடன் மக்களின் உயிர் அழிவு, சொத்தழிவு மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. தமிழ் மக்களின் கூட்டிருப்பும், கூட்டுரிமையும்கூட அதில் அடங்கியிருந்தது. ஐ.நா உட்பட சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் மட்டும் அழிக்கவில்லை, அதனுடன் சேர்த்து தமிழ் மக்களின் கூட்டிருப்பையும்,...
மகிந்தராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவருக்கு சொந்தமான லம்போகினி கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து இந்த கார் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது கார் தொடர்பில் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க குறித்த இராணுவ அதிகாரி தவறியுள்ளார். தேர்தலின் போது பாதுகாப்பு கருதி இந்த கார் குறித்த இராணுவ அதிகாரியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவினால் எட்டு கார்கள் இறக்குமதி...
  புதிய அரசாங்கத்தின் 100 வேலைத்திடத்தில் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான எந்த வியடங்களும் உள்ளடக்கப்படவில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் என்ற தொணிப்பொருளில் வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது மக்களுடனான் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துதெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச...