இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள அமெரிக்கா, மைத்திரிபால அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிவிவகார உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கை மக்கள் புதிய அரசாங்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்கிறார்களோ அதனையே நாங்களும் எதிர்பார்க்கிறோம். இலங்கை மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஆதரவளிக்க...
தழிழ் இனத்திற்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்க புறப்பட்டுவிட்ட கஜேந்திரகுமார் பொண்னம்பலம் தலைவர் பிரபாகரனுடன் // Post by Kajan Ellalan.
  .சுற்றிலும் ராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் மனித மிருகம் தீக்கிரையாக்கப்படுவது,  வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையிலும் நம் பலமாகிறது. அதே சமயம், இன அழிப்பு – என்கிற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்துவிடத் துடிக்கும் சமந்தகர்களைப் பார்க்கும்போது, துரோகம் முற்றிலுமாகத் தொலைந்துவிடவில்லை என்கிற யதார்த்தமும் சேர்ந்து அம்பலமாகிறது. ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை - இருதரப்புப் போர் என்று அதைச் சித்தரிப்பது உண்மையைத் திரிப்பது - அது ஓர் இயக்கத்தை அழிப்பதற்கான தாக்குதல் அல்ல, ஓர் இனத்தை அழிக்கத்...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி என்ற பேரிலும் பல்வேறு திட்டங்களை செயற்படுத்துவதாகக் கூறி மோசடிமூலம் சேர்த்த சொத்துக்கள் தொடர்பான ஆவனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.   மஹிந்தாவின் இந்தனை வருட குடும்ப ஆட்சியில் மக்களை பகடக்காயாக பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து மோசடி செய்த பணமாகவும் இவை இருக்கலாம். மக்களை ஏமாற்றி சேர்த்து வைத்துள்ள இந்த சொத்துக்கள் தொடர்பில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளது?
  mment வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையை பறிப்பதாக அதன் செயலாளர் நாயகம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தரப்பும், மஹிந்த ராஜபக்ச தரப்பும் தமிழின அழிப்பாளர்கள் என்பதால் அவர்களுக்கு வாக்களிக்கவேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து அனந்தி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பத் தெரிவிக்கும் வகையில் தமிழரசுக்கட்சி அவருடைய உறுப்புரிமையை பறித்திருக்கிறது. இது தொடர்பில் அனந்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம், ...
  Sinhala Jokes - Gangnam Style - MY3 Version - Sinhala Funny Video   Mahinda Rajapaksa Gangnam Style Funny Video song.
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்pனர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்சவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பிலான ஆவணங்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு...
  பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் லட்மீர் கொள்கைகளுக்கு அமைவாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லாட்சி நடாத்த தேவையான அரசியல் சாசன திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்புடன் மிகவும் ஆரோக்கியமான உறவுகளைப் பேண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க குற்றப் பிரேணை...
  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்ஸவிற்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது. இராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிர் பலிகளுக்கும் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களுக்கும் கோதபாய ராஜபக்ஸ பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமெனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வெல இடங்களைச் சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரியும், கழிவுகள் நீரில்...
  ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் தேநீர்க் கோப்பைகள், பீங்கான்கள், கணினிகள், முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பீங்கான்கள், சிவப்பு நிற சால்வையுடன் கூடிய டி-சேர்ட்கள் அடங்கிய மூன்று கொள்கலன்களை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து மீட்ட பொலிஸார், அவற்றுக்கு சீல் வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, தங்கொட்டுவையில் அமைந்துள்ள போசிலன் நிறுவத்திடமிருந்து இந்த மூன்று கொள்கலன்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ள போதிலும், அதற்கான உரிமையாளர்கள் என்று...