கிழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள கிழக்கு மாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை வகிக்கும். மேலும், அமையவுள்ள கூட்டணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் முதலமைச்சர் பதவியைத் தன் வசம் வைத்துக்கொள்ள தலைமை விரும்புகிறது. எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக...
  // பொது எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­திரிபால சிறி­சேன நேற்று தனது தேர்தல் விஞ்­ஞா­பனத்­துடன் 100 நாள் வேலைத்­திட்டம் ஒன்றை முன்­வைத்­துள்ளார். அந்த 100 நாள் திட்­டத்தில் செயற்­ப­டுத்­தப்­படும் பொரு­ளா­தார சமூகம் சார் செயற்­பா­டுகளின் விபரம் வருமாறு. 1.அரச ஊழி­யர்களுக்கு 10000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­குதல் மற்றும் அதன் ஆரம்­ப­மாக உட­ன­் நடை­மு­றைக்கு வரும் வகையில் பெப்­ர­வரி மாத சம்­ப­ளத்­திற்கு 5000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல். அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளையும்...
  சென்றவாரம் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து பலரிடம் இருந்த முக்கிய கேள்வி, முன்னாள் பாதுகாப்பு செயலரும், மகிந்த ராஜபக்சவின்  சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே எங்கே என்பதுதான்.தேர்தல் முடிவு வெளியாகும் முன் மாலைதீவு பறந்தார், அமெரிக்கா, சிங்கப்பூர்  சென்றார் என ஏகபட்ட செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அவர் இலங்கையில் தான் இருக்கிறார் ஆனால் வீட்டுக் காவலில் இருக்கிறார் என நம்பத்தகுந்த ஊடகங்கள் செய்தி...
  ஜனாதிபதியின் அதிகார ருசியை மைத்திரிபாலா அனுபவிக்க தொடங்கியதன் பின் அதனை அவர் விட்டுக்கொடுப்பாரா என்பது தொடர்பில் காலம்தான் பதில் சொல்லவேண்டும்-தழிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டும் தழிழ் மக்களுடன் பின்னிப்பினைந்த ஒன்று அதை யாராலும் மாற்றி அமைக்க முடியாது தினப்புயல் இணையத்தளத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பரபரப்பு பேட்டி  
  இலங்கையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பழைய காயங்களை தூண்ட வேண்டும் என்பதனை விடவும் யுத்தம் தொடர்பான மெய்களை கண்டறிவது உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
    தொப்பி பிரட்டிய  அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மைத்திரிக்கு ஆதரவு வழங்கினார்   // Post by ரெட்பானா செய்திகள்.   
  ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசாரணை செய்யுமாறு இன்று வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பு குற்றத் தடுப்பு பணிப்பாளரிடம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளார். முறைப்பாட்டினைக் கையளித்த பின்னர் அமைச்சர் மங்கள சமரவீர தனது சட்டத்தரணிகளுடன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,   ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வாக்கும் எண்ணும் பணி ஆரம்பமாகியதும் நள்ளிரவு 1 மணிக்கு அந்த செயற்பாட்டினைக் குழப்புவதற்கு எடுத்த நடவடிக்கையில்,...
  இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடு மாதா திருத்தலத்திற்கு விஜயம் செய்தார். அங்கு திருத்தந்தையை லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். உலங்குவானூர்தி மூலம் மடுவைச் சென்றடைந்த பாப்பரசர் அங்கிருந்து மடுமாதா திருத்தலத்திற்கு வாகன பவனியாக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து பாப்பரசர் தலைமையில் மடுமாதா திருத்தலத்தில் விசேட திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டது.
  கொழும்பு நாரஹன்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலங்கு வானூர்தி தம்மால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக திரைப்பட இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார் சிங்கள திரைப்பட இயக்குநரான சந்திரன் ரட்ணம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தாமே இந்த உலங்குவானூர்திக்கு சொந்தக்காரன் என்றபோதும் கடற்படை அதிகாரியாக இருக்கும் யோசித்த ராஜபக்ச கோரியமை காரணமாக அதனை அவருக்கு விற்பனை செய்து விட்டதாக ரட்ணம் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த உலங்குவானூர்தி பயன்படுத்தலுக்கு தயார் நிலையில்...
  அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்பதில் இராணுவ புலனாய்வு பிரிவு தீவிரமாக செயற்பட்டனர். இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவராக செயற்பட்ட கி.சேயோன் இரகசியமாக இராணுவ புலனாய்வு பிரிவினருடன் தொடர்பாகி இருந்தார். இவர் முன்பு கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் போதே இராணுவ புலானய்வு பிரிவின் தொடர்பை பெற்றுக் கொண்டார். இவரது...