இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த 29.10.2014 அன்று பதுளை கொஸ்லந்த மிரியபெத்த  பெருந்தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுடன் இன்று (31.10.2014) அவரது காரியாலயத்தில் நடைபெற்றது. இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வகைகள், உடுதுணிகள், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், பிஸ்கட்-பால்மா  வகைகள், சவர்க்கார வகைகள், பற்பசை-பற்தூரிகைகள்...
வணக்கம் 1.11.2014 அன்று புதுக்குடியிருப்பில் நடைபெறவுள்ள மாபெரும் முன்பள்ளி / அறநெறி பாடசாலை ஆசிரியர் திருவிழாவின் நிகழ்வினை செய்தி மற்றும் ஊடகங்களில் பதிவு செய்வதற்கு உங்கள் ஊடகத்தின் சார்பில் உங்கள் செய்தியாளரை அன்புடன் அழைக்கிறோம். இந் நிகழ்விற்கான அழைப்பிதழும் இணைக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களால் இழப்புகளை சந்தித்த மலையக உறவுகளின் துயரத்தில் பங்கெடுக்கின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா ஆகியோர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸின் அனுதாபச் செய்தி பதுளை மாவட்டம் கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் நடந்த இயற்கை அனர்த்தங்களால் இடர்பட்டு, இழப்புகளை சந்தித்த மலையக மக்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த பிரிவில் உள்ள ஹல்துமுல்ல- மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் பல உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் உண்டாகியுள்ளமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேற்படி அனர்த்தம் தொடர்பில் முதலமைச்சர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி அனர்த்தச் சம்பவத்தில் இதுவரையில் 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்ற பத்திரிகை செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முன்னதாகவே பல இன்னல்களின் மத்தியில் வாழ்கின்ற...
இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார். நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில், இந்த சூரிய...
கொஸ்லாந்த பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் அமெரிக்கா தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு உதவிக் கரம் நீட்டுவதற்கும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கொஸ்லாந்த மண்சரிவு தொடர்பில் ஐக்கிய அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை: அரசாங்கம் இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினதோ அல்லது வேறு தரப்பினரது உதவியோ அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு...
புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வர தயாராகி வரும் நிலையில், அவரது விஜயத்தை எப்படியாவது தவிர்க்க செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. பாப்பரசர் வருகை தரும் காலப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதால், பாப்பரசரின் விஜயம் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு...
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர். இந்த அனர்த்தத்தினால் 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் 300இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை, மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, இராணுவத்தினர் மற்றும் கடற்படை வீரர்கள் 500 பேர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்திலிருந்து...
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று (29.10.2014) நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரையின் முழுவிவரம்.  வணக்கம்! ஜனாதிபதியும், நிதி அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்ஸ அவர்கள், பத்தாவது தடவையாக வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். நானும் பத்து வருடங்களுக்கு மேலாக இந்த கௌரவமிக்க சபையில் அங்கம் வகிக்கின்றேன்.   உண்மையில் எந்த மக்களின் பிரதிநிதியாக இந்த சபைக்கு வருகை தந்துள்ளேனோ, அந்த மக்களுக்கு இந்த வரவு செலவு...
அண்மைக்காலமாக மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா சபைக்கு பிரேரணைகள் சமர்ப்பிப்பவர்கள் மீது இலங்கையரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அண்மையில் பிரஜைகள் குழுவின் தலைவர் நெடுங்கேணிப் பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டதையடுத்து கிளிநொச்சியில் மனிதவுரிமை செயற்பாட்டாளர் சின்னத்துரை கிருஸ்ணராஜா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். இன்னும் 14 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடிவருகின்றனர். ஐ.நா சபையில் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக அடுத்தடுத்த இறுதி அமர்வுகள் நடைபெறவிருப்பதனால் அதில் இலங்கையரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...