சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்த போது காலையில் களையிழந்த அ.தி.மு.க ஆண்டு விழா, நண்பகல் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கட்சியினர் கொண்டாடியதால் களைகட்டியது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு...
ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ  விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை இரத்து செய்து லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பில் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இத் தீர்ப்பு தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை கொடுத்த மாவீரர்களுக்கும் , மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் இந்த நிலையில்ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலை...
  வடமாகாணசபையின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று இன்று (17.10.2014) புளியங்குளம் இந்துக்கல்லூரியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். வியாழன் அன்று இச்சேவையை செய்வது நல்லது. அதற்கு நானும் ஒத்துழைப்பு வழங்குகின்றேன் எனக் கூறிய அரச...
நீண்டகால போராட்ட வரலாற்றில் விடுதலைப்புலிகளின் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் இந்தத் தடையானது நீக்கப்பட்டுள்ள இந்நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் சந்தோஷப்படும் அதேவேளை இதைவைத்துக்கொண்டு அடுத்தகட்ட தமிழ்மக்களுக்கான விடுதலை நகர்வுகளை நகர்த்திச் செல்லவேண்டும். அமெரிக்கா உட்பட 57 நாடுகளும், 22 சர்வதேச அமைப்புக்களும் சமாதான ஒப்பந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் நெருங்கி நட்புறவுகளை வைத்திருந்தது மாத்திரமல்ல. யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து சமாதானப்பேச்சுக்களில் ஈடுபட்டு நிரந்தர சமாதானத்தினை இலங்கையில்...
  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு தபால் அட்டை அனுப்புமாறு முற்போக்கு தமிழ் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அந்தக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - கடந்த சில தினங்களுக்கு முன்பாக வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட...
பலர் சொல்கிறார்கள் கருணா துரோகி, பயத்தில் யுத்தத்தை நிறுத்தினார் என. ஆனால் உண்மை அதுவல்ல. நான் பயத்தில் யுத்தத்தை நிறுத்தவில்லை. எனது மக்கள் வாழவேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை நிறுத்தினேன் என்கிறார் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். மட்டக்களப்பு போரதீவுப்பற்று மாதர் கிராமஅபிவிருத்திசங்கங்களிற்கு உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றம் போது, இன்று இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்தவர்கள் எலியாகப் பயந்து பொந்திற்குள் புகுந்து கொண்டபோது, மட்டக்களப்பிலிருந்து நான் சென்றுதான் அவர்களை புலியாக்கினேன். அந்தப்பெரிய...
இலங்கையின் வடபகுதிக்கு பயணிக்கும் வெளிநாட்டு பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன் அனுமதியைப்பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் பணிப்பாளரும், இராணுவ பேச்சாளருமாகிய பிரிகேடியர் ருவன் வணிகசூரிய 15.10.2014 அன்று விடுத்துள்ள அறிவிப்புக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும்...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களாக ஜெயிலில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்க பெங்களூரில் உள்ள கர்நாடகா ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதையடுத்து ஜெயலலிதா தன்னை ‘‘ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தனக்கு 66 வயது ஆகிவிட்டது என்றும், நீரிழிவு நோயால் அவதிப்படுவதாகவும் எனவே இவற்றை...
  யுத்தம் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது என கூறிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருடக்கணக்காக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டும் என வடமாகாண சபை அனந்தி சசிதரன் கேட்டுக்கொண்டுள்ளார் அனந்தி சசிதரனால் வியாழக்கிழமை (16) அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியும்...
ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் மற்றும் அறிவித்தலை சட்டமா அதிபர் அலுவலகம் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் குறித்து ஜனநாயகக் கட்சியின் செயலாளர் சுனில் மானவடுவுக்கு சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் தெரியப்படுத்தியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பான வழக்கு மற்றும் இராணுவ...