சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 7402 என்ற கைதி எண் வழங்கப்பட்டது பெண்கள் சிறைக்கு அருகில் இவரது அறை இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் கொண்ட அறையில் தனி கழிவறை வசதிகள் அதற்குள் உள்ளன. குற்றவாளிகளுக்கான வெள்ளை உடை அவருக்கும் அளிக்கப்பட்டது. அவருக்கு இரவு உணவாக ராகி உருண்டை, 200...
உலகில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தொடர சர்வதேசச் சட்டங்களில் இடமுண்டு. அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையிலேயே அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் பிடியாணை அனுப்பியுள்ளது. குஜராத்தில் நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையை நரேந்திர மோடி தலைமை தாங்கினார் எனக் கருதப்படுகின்றது. ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்ட குஜராத் படுகொலைகளின் பின்னர் அமெரிக்கா மோடிக்கு விசா...
''சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஏறத்தாழ 1,000 பக்கங்களை நெருங்கி வரும் தீர்ப்பை எழுதி முடித்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். 1,000 பக்கங்கள் என்றால், அரசுத் தரப்பு வாதம் மற்றும் எதிர்தரப்பு வாதத்தை அப்படியே எடுத்துக்கொண்டு அதற்குக் கீழ், நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எழுதுவார். இதைத்தான் 'ஆபரேஷன் போர்ஷன்’ என்பார்கள். தன்னுடைய லேப்டாப்பில் தானே அவற்றை டைப் செய்துள்ள நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா இதற்காக ஸ்டெனோவைக்கூட அமர்த்திக் கொள்ளவில்லை....
  கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் கடந்த 30.08.2014 அன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டதும், அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக சென்று அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்க மேற்கொண்ட முயற்சியை பொலிஸார் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதும் நீங்கள் யாவரும் அறிந்ததே. வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காலை, ஆத்மசாந்தி பிரார்த்தனை மற்றும் உணர்வுப்பகிர்வினை முடித்துக்கொண்டு, நண்பகல் மகஜர் கையளிப்பதற்காக புறப்பட்டுச்சென்றவர்களை, மண்டபத்தின் பிரதான...
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவரது முதல்வர் பதவி இரண்டாவது முறையாக பறிபோய்விட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் ஓ. பன்னீர்செல்வமே நியமிக்கப்படுவாரா அல்லது வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. 2001ஆம் ஆண்டு டான்சி ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அப்போது ஜெயலலிதாவின் முதல்வர் பதவி...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவி்ல் இலங்கைக்கு ஆதரவாக 22 நாடுகள் குரல் கொடுத்துள்ளன. இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும், இலங்கையின் அனுமதியின்றி அவ்வாறான ஒரு விசாரணையை மேற்கொள்ள முடியாது என்றும் அந்த நாடுகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் இலங்கை கூட்டாக செயற்பட்டு வரும் நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும்...
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது. ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அதிமுகவினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. சிறிய அளவில் உள்ள காவலர்களும் அதிமுகவினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோவையில்...
   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, மற்றும் செயலாளர் ஆகியோரை வரவேற்றும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள துளசி மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கைத் தழிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தநிகழ்வுக்கு அதன் தலைவர் கி.சேயோன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தழிழரசுக்...
  வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும்...
சண்டே லீடர் ஆசிரியர் கொல்லப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவருடைய படுகொலை தொடர்பான விசாரணை ஒரு அடிகூட முன்னகரவில்லை என்று இலங்கைப் பொலிஸாரினதும் நீதித்துறையினதும் செயலற்ற தன்மையை ஊடக அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், லசந்தவின் படுகொலையுடன் தொடர்புபட்ட இரண்டு தகவல்கள் அண்மையில் வெளிவந்திருக்கின்றன.முதலாவது, உலகிலேயே மிகப் பெரிய அமைச்சரவையைக் கொண்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய அமைச்சர்களுள் ஒருவரான தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா...