அம்பந்தோட்டை நகர முதல்வரும், ஆளும்கட்சி ஆதரவாளருமான எராஜ் ரவீந்திர இன்றைய ஊவா தேர்தல் களத்தில் 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிரம்ப தனது குண்டர் படையுடன் காத்திருந்ததாகவும், ஏதோவொரு தேர்தல் மோசடியில் ஈடுபடவே அவர் அங்கு வந்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொனராகலை, ஒக்கம்பிடிய வாக்குச்சாவடி அருகில் LE 7447 ஆம் இலக்க பொலேரோ ரக வாகனத்தில் இவர் காலையில் இருந்து காத்திருந்ததாகவும், 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் அவரது ஆதரவாளர்கள்...
ஊவா மாகாணசபைக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவின் இணைப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளையில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். வாக்குசாவடிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோதே அவரை தென்மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஒருவரும் ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். ஏற்கனவே பண்டாரவளை மேயரும் ஆளும் கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பண்டாரவளையில் இடம்பெற்ற வாகன தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஊவா...
மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது. தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து இடம்பெற்றிருந்த உபமாநாடொன்றிலேயே இவ்விவகாரம் பேசப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையின் மதஉரிமைகளுக்கான சிறப்பாய்வறிஞர் (special rapporteur)Heiner Bielefeldt அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த உபமாநாட்டில் , சிறிலங்கா, இந்தியா , வங்கதேசம் மற்றும் நேபால் ஆகிய நாடுகளில்...
எமது சமூகத்தில் எதிர்காலம் பற்றிய தீர்க்க தரிசனக் குறைபாடு இன்றும் உறைந்து போயுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் 55வது நினைவு தினமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு முதல்வர் தனது உரையில்...
  இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். விடுதலைப் புலிகள் இலங்கையில் இருந்த காலத்தில், அவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அக்கட்சியின் தலைவராக அப்போது இருந்தவரும் இதே இரா.சம்பந்தன்தான். இலங்கையில் யுத்தம் முடிந்தபின் தேர்தல் காலங்களில் மட்டும் விடுதலைப் புலிகளை சிலாகிப்பது இக் கட்சியின் சமீபகால வழக்கம். இந்த நிலையில், சமீபத்தில் இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், “தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப்...
மாதகல் கிழக்கு, கோணாவளை பகுதியில் பொதுத்தேவைக்கு என அடையாளப்படுத்தப்பட்டு, கடற்படையினருக்காக காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்வதற்கு, பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்புடன் நில அளவையாளர்கள் மேற்கொண்ட முயற்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நில அளவீட்டு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்தும், தள்ளியும் நிலத்தை எவ்வாறேனும் அளவீடு செய்ய வேண்டும் என பொலிஸார் முயற்சி எடுத்திருந்ததுடன், கடற்படையினரும் பெருமளவில்...
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின்  புதிய ஆணையாளர் இளவசர் செய்ட் அல் ஹூசைனை நேற்று காலை சந்தித்துள்ளார். சிறார் மற்றும் பெண்கள் மரணம் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிவில் அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் ஆணையாளரை சந்தித்து பேசியுள்ளனர். முல்லைத்தீவு...
பாகிஸ்தானுக்கான உளவாளியாக செயற்பட்ட அருண் செல்வராஜா, இலங்கைக்கு திரும்பி செல்ல விருப்பமில்லாதவராக இருந்தார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவரை விசாரணை செய்துவரும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய விசாரணையின்போது இந்த விடயத்தை வெளிக்கொணர்ந்தனர். சென்னையில் முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை நடத்திவந்த அருண், தமது விசாரணையின்போது இந்த தகவலை வெளியிட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தாம் ஏன் இலங்கைக்கு செல்ல விருப்பமில்லாதவராக இருந்தார் என்பதை அருண் கூறவில்லை. இதில் இருந்து அவர் விடுதலைப்...
பதுளையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் பாடசாலை, முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் சில கடைகள் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. பதுளையின் முன்னாள் நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட தரப்பினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜன்னல்களை உடைத்தல், சொத்துக்களுக்கு சிறு சேதங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பதுளை பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை,  பதுளையில் சிங்கள முஸ்லிம் மோதல்கள் வெடிக்கக்...
சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய விஜயத்திற்கு முன்னால், இலங்கைக்கும், மாலைதீவுக்கும் அரசுமுறைப் பயணமாகச் சென்றதுகூட, ஒருவகையில், இந்தியாவை எச்சரிப்பதற்காகவும், தெற்கு ஆசியாவைப் பொருளாதார சக்தியாக மாற்ற விரும்பும் நரேந்திர மோடியின் முயற்சியை முறியடிப்பதற்காகவும்தான் என்று தோன்றுகிறது. சீனர்களுக்குப் பொருளாதார வளர்ச்சியுடன், தங்களது எல்லையையும் விஸ்தரிக்க வேண்டும் என்கிற தணியாத தாகமுண்டு. ஆசியாவின் தலைமையிடமாக பெய்ஜிங் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதும், உலக வல்லரசாகச் சீனா திகழ வேண்டும் என்பதும்தான்...