ஜெனிவா ஐ.நா முன்றலில் சம்பந்தரின் கொடும்பாவி எரித்த சம்பவம்! மகிந்த அரசுக்கு மகிழ்ச்சியான விடயம்!
Thinappuyal News -0
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவமதிக்கும் விதத்தில், எமது புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலரினால் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவமானது இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியான விடயம் மட்டுமல்ல, இலங்கை அரசை காப்பாற்றும் விடயமாகவும் அமைந்துவிடும். என பா. அரியநேத்திரன் பா.உ. தெரிவித்துள்ளார்.
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனிவா ஐ.நா முன்றலில் பல்லாயிரக்கணக்கான எமது புலம்பெயர் மக்களால் மேற்கொள்ளப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் காலத்தின் தேவையான விடயம்.
ஆனால் அங்குள்ள ஒருசிலரினால் தமிழ்...
இதயம் துடிக்கும் சாலை விபத்து 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்-விசேடசெய்தி
Thinappuyal News -
இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம், சாலை விபத்து...
1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்...
இதனால் தனி மனித இழப்பு, அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு, பொருளாதார இழப்பு போன்றவைகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்...
இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...
நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால் இதை மாற்றியமைக்க முடியும்...
* மிக அதிக வேகம்.....
* தலைக்கவசம் அணியாமல் செல்வது....
* மது...
‘மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம்’
Thinappuyal News -
சுமார் மூன்று தசாப்தங்களாக எம் இனத்தை அழித்து வந்த யுத்தத்தை முள்ளி வாய்க்காலுக்குள் முடிவுகண்ட நாளே
இது எம் இனத்தின் வாழ்வியலிலிருந்து மறைக்கவோ மறுக்கப்படவோ முடியாத ஒரு நாள். நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு அமைதியாக வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலை, இலக்கை அடைய முடியாத, வழி தவறிய போராட்டத்தின் மூலம் உறை நிலைக்குக் கொண்டு சென்ற மறக்க முடியாத நாள் இது.
வழிதவறி தடம்புரண்டுபோன எமது போராட்டமானது சொல்லொணா துன்பங்களையும் வாழ்வியலின்...
இராணுவப் புலனாய்வு ஊடகவிலாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர், அரசியல்வாதிகளே அவதானமாக இருங்கள்! (ஆசிரியர் பார்வை)
Thinappuyal News -
பேருக்குப் பின்னர் வடக்கில் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்களின் பாதுகாப்புக் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கிற்கு விஜயம் செய்கின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளும் அப்பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருவதால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இதனை வடக்கின் முதலமைச்சர் ஜேர்மன் தூதுவரிடம் யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரியப்படுத்திய பொழுது பதிலுக்கு அவரும் தனக்கும் வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்தாகவும் தன்னுடைய நகர்வுகளையும் பாதுகாப்புத்...
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த அவர், இலங்கையில் தங்கியிருக்கும் போது பல்வேறு அபிவிருத்தி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. சீன ஜனாதிபதியுடன் அவரது...
பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்கக் கண்ணோட்டத்தைச் சாதகமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை அழித்து, தமிழ் மக்கள் மீதான் இனப் படுகொலையை நடாத்தியும் முடித்தது.
Thinappuyal News -
வன்முறை அரசியல் ஊடாக அல்லது அரச பயங்கரவாதம் ஊடாக தமிழ் மக்களை அடிபணிய வைக்கும் பேரினவாத சிந்தனையுடன் மகிந்த அரசு இப்போது புதியதொரு அறிவிப்பை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 தமிழ் அமைப்புக்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக, ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்திற்கான...
நிபுணர் குழு அறிக்கை! மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு பக்க சார்பற்ற நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
Thinappuyal News -
நிபுணர் குழு அறிக்கை!
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக என்னால் எந்த விசாரணைக்கும் உத்தரவிட முடியாது. இப்படி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீனமூன் தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
அறிக்கை வெளியிட்ட பின்னர் பான் கீ ன மூனின் பேச்சாளர் மார்டின் கொஸ்க்கி நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் கூறியவை வருமாறு: இலங்கை அரசு இணங்கினால்...
மன்னார், சவுத்பார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்களட்கிழமை கரை ஒதுங்கியுள்ளது. சவுத்பார் கடற்படை முகாமிலிருந்து வங்காலை பகுதியை நோக்கிய சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் உருக்குலைந்த நிலையில் ஆடைகள் அற்ற நிலையில் காணப்படுகிறது. இதேவேளை பிரேத பரிசோதனை அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை, சடலத்தை நேரில் சென்று...
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் வணக்க ஸ்தலங்களை இடிக்கும் அரசை நாம் இடித்து எறியும் சந்தர்ப்பம் இதுவாகும்- மனோ கணேசன்
Thinappuyal News -
சிங்கள மக்களின் மனமாற்றம் இந்த அரசுக்கு எதிராக இப்போது ஊவாவில் நிகழ்ந்து விட்டது. இங்கு வாழும் முஸ்லிம் சகோதரர்களும் எம்மோடு கரங்கோர்த்து கொண்டுள்ளார்கள். பதுளை மாவட்ட மலைநாட்டு தமிழ் மக்கள் மத்தியிலும் இப்போது இந்த அரசுக்கு எதிரான அலை அடிக்க தொடங்கிவிட்டது
இங்கே நகரங்களில் வாழும் மலையக தமிழர்கள் இந்த கொடுங்கோல் அரசை எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்து விட்டார்கள். சிங்கள, முஸ்லிம் மற்றும் நகர வாழ் தமிழ் மக்கள் மத்தியில்...
தேர்தலின் போது பொதுக் கூட்டணி மற்றும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாறு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர், ரணிலுக்கு அழுத்தம்
Thinappuyal News -
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலின் போது பொதுக் கூட்டணி மற்றும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாறு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர், ரணிலுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் உள்ள ராஜபக்ஷவினருக்கு எதிரான அமைச்சர்களுடன் எதிரணி அரசியல்கட்சிகள், வெகுஜன அமைப்புகள் சிலவும் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சஜித் பிரேமதாசவை பிரதித் தலைவராக நியமிக்கும் யோசனை முன்வைக்கப்படும் எதிர்வரும் 23 ஆம்...