யாழ்.மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில தினங்களில் உபகரணங்கள் அனைத்தையும் அகற்றுமாறும் படையினர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறித்த பகுதியில் சம்பில்துறை, திருவடிநிலை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் கடற்படையினராலும், விகாரை அமைப்பதற்காகவும் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் நீண்டகாலம் வாழ்ந்த நிலங்களில் குடியேற முடியாமல் காட்டுப்புலம் பகுதியில் குடியேறி...
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பச்சை விளக்கு சமிக்ஞை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்து அவர் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டவாதிகள் பலரும் வாதிடுகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி சட்டத்துறையில் அதியுயர்...
  நியூயோர்க்கில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை ஜனாதிபதியை சந்திப்பாரா என்பது குறித்து புதுடில்லியில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக பொதுநலவாய தலைவர்களின் மாநாடொன்று நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. பொதுநலவாயத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் குறித்து விவாதிக்கவுள்ள இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமை தாங்குகிறார். எனினும் இந்திய பிரதமர்...
விடுதலைப் புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளை, அவர்கள் அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை அங்கே நடத்திவந்தார்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். அவர்களிடம் நீதிமன்றங்கள் தொடக்கம் வங்கிகள் வரை இயங்கிக்கொண்டு இருந்தது. இதேவேளை புலிகளால் மிகவும் இரகசியமாக பேணப்பட்டு வந்த சிறைச்சாலைகளும் உள்ளது. இதில் அல்ஃபா- 05 மற்றும் அல்ஃபா-02 மிக முக்கியமானவை. குறிப்பாக கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் வைத்து ஒரு ஸ்ரீலங்கா புலனாய்வு அதிகாரியை புலிகள்...
  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் வருகைக்கான ஆரம்ப நடவடிக்கை இன்று இரவு அவரது வீட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கோட்டே தொகுதியின் அமைப்பாளராக மாத்திரமல்லாது, கொழும்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக அரசியலுக்குள் வருவதற்கே கோத்தபாய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளார். இதன் காரணமாக அவரது அரசியல் வருகை தொடர்பான அறிவிப்பை முதல் முறையாக வெளியிட்டு, கொழும்பு நகரின் அரசியல் குறித்த அக்கறையை கொண்டுள்ள முன்னணி வர்த்தகர்கள்,...
மனச்சாட்சிக்கு விரோதமான அரசியலை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகின்றேன் என இளைஞர் அணி செயலாளர் எஸ். சிவகரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தனது பேருரையில் கருத்து தெரிவித்ததாவது, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈழத்தமிழ் தேசிய இனமானது முற்றிலும் வேறுபட்டதும் அநிதியானதுமான இனஅழிப்பு நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. ஆயுத ரீதியிலான யுத்தத்தைவிடவும்...
யாழ் - கொழும்பு சேவையில் வழிதட அனுமதி பத்திரம் இன்றி எந்தவொரு பேருந்தும் சேவையில் ஈடுபட முடியாது. இதை நாம் அனுமதிக்கமாட்டோம் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜ.விமலசேன தெரிவித்தார். இப்பொழுது நான் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை பரிசோதிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அதேவேளை அனுமதிக்கப்பட்ட பேருந்துகளின் இலக்கங்களை ஊடகவாயிலாக அறிவிக்க இருப்பதாகவும், அதன் மூலம் பொது மக்கள் தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியுமென இன்று யாழ் பிராந்திய சிரேஸ்ட...
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சிக்கிளையின் சார்பில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் கட்சியின் மாவட்டக்கிளையின் தலைவரும் பா.உறுப்பினருமான சி.சிறீதரன் தலைமையில் இவ் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில், தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கு வடமாகாணசபை அமைச்சர் குருகுலராஜா உறுப்பினர் அரியரத்தினம் கரைச்சி பிரதேசபை உபதவிசாளர் நாவை.குகராஜா கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் உறுப்பினர்கள் கட்சியின் மாவட்டக்கிளையின்...
      வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடனான சந்திப்பு வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பல்நோக்கு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(12) காலை நடைபெற்றது. மாவட்ட ரீதியாக கிராம அபிவிருத்தி சங்கங்களின் செயற்பாடுகளை நேரில் சந்தித்து அறிந்துகொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒர் அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் நேரடியாக...
MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு அமைப்புகள் இன்று கருதப்படுகிறது. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான் ஒரு தமிழன். போர் செய்வதற்கு முன்பு எதிரிகளின் படை பலத்தை அறிந்து வருவதற்காக மட்டும் ஒற்றர்கள்...