‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெள்ளக்கார துரை’ படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு கூறியதாவது:‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்கள் வெவ்வேறு களத்தில் அமைந்தன. ‘வெள்ளக்கார துரை’யில் முதல்முறையாக காமெடி செய்துள்ளேன். அப்பா, மகனுக்கு இடையே நடக்கும் கதையாக ‘சிகரம் தொடு’ உருவாகியுள்ளது. அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். ஆக்ஷன், காமெடி, சென்டி மெண்ட் கலந்த படம். எனக்கு போலீஸ் வேடம். கவுரவ் இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாகிறது....
 தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் இனியா கூறியதாவது:மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்ததில்லை. தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தரும் அளவுக்கு மல்லுவுட்டில் ஏற்கவில்லை. திறமையான பல நடிகைகள் இருந்தாலும், நடிப்பில் ஆர்வம் இல்லாத நடிகைகளை ஒப்பந்தம் செய்து சில மலையாள இயக்குனர்கள் நடிக்க வைக்கின்றனர். நான் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை குறை சொல்கிறார்கள். அப்படி ஆடுவதில் என்ன தவறு? நடிப்பில் எவ்வளவு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இலங்கைக்கு ஐஸ் வாளி சவால் (ice bucket challenge) என அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜய திலக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தலையில் குளிர்ந்த நீரை ஊற்றும் ஐஸ் வாளி சவால் என்றே நான் காண்கிறேன். இந்திய பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்தில் ஐஸ் வாளியில் தண்ணீர் நிரப்பியுள்ளார்.அரசாங்கத்திடம் மண்டியிட்டு பாராளுமன்ற...
ரைசிங் சன் பிலிம் சார்பில் எச்.என்.கவுடா தயாரித்துள்ள படம், ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’. வினய் கிருஷ்ணா, ஹாசிகா தத், ஸ்ரீமன், ஜீவா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கார்த்திக் நல்லமுத்து. இசை, உமேஷ். இப்படம் குறித்து இயக்குனர் வீரா கூறியதாவது: நள்ளிரவில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடக்கும் இறுதி கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பை நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கடைசி பந்து வீச தயாராகிறார் வீரர். இந்தியாவின் வெற்றிக்கு...
   ‘வத்திக்குச்சி’, ‘ரகளபுரம்’, ‘கபடம்’ ஆகிய படங்களில் நடித்தவர், அங்கனா ராய். அவர் கூறியதாவது:நான் தமிழில் தெளிவாகப் பேசுவேன் என்பதால், தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். ‘மகாபலிபுரம்’, ‘பிளாக் அண்ட் ஒயிட்’ படங்களில் நடிக்கும் நான், கன்னடத்தில் துனியா விஜய்யுடனும், மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்ஷனில் பிருத்வி ராஜுடனும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். அடிப்படையில் நான் பெங்காலி. இப்போது பெங்காலிப் படத்திலும் அறிமுகமாகிறேன். என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உதவும்...
‘சுவடுகள்’ படத்தை இயக்கி நடித்த அமெரிக்கவாழ் தமிழர் ஜெய்பாலா, அடுத்து திகில் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சுவடுகள்’ படத்தில் 12 துறைகளின் பணிகளை கவனித்தேன். அமெரிக்காவில் தமிழர்களுக்கு படத்தை திரையிட்டேன். மீண்டும் படம் இயக்கச் சொல்லி உற்சாகப் படுத்தினார்கள். அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் கற்றுள்ளதை அடிப்படையாக வைத்து, திகில் படம் இயக்குகிறேன். பேய் மற்றும் அமானுஷ்ய சக்திகள் இல்லாத திகில் படமான இதில், 10 துறைகளை கையாள்கிறேன்....
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், உலக சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பை வாய்ப்பு பெற்றார். இதனால் இன்று நடைபெற்ற  2ம் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் நடாலியா பெர்மினோவாவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த...
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 21-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான பருபள்ளி காஷ்யப் முதல் சுற்றிலேயே வெளியேறினார். சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற காஷ்யப், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மன் வீரர் டைடர் டாம்கியை எதிர்கொண்டார். டாம்கிக்கு எதிராக 5-1 என வலுவான வெற்றி கணக்கை காஷ்யப் வைத்திருந்தார். எனினும், தற்போது பார்மில் இருக்கும்...
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. மோசமாக விளையாடி இங்கிலாந்திடம் சரண்டர் ஆனதால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு ஐ.பி.எல். போட்டி தான் முக்கிய காரணம் என்று முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் பிஷன்சிங் பெடி குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் டெஸ்டில் இந்தியாவின் தோல்விக்கு...
வங்காளதேசத்துக்கு எதிரான 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது. முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்தது. ராம்தின் 121 பந்தில் 169 ரன்னும் (8 பவுண்டரி, 11 சிக்சர்), டாரன் பிராவோ 127 பந்தில் 124 ரன்னும் (7 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தனர். அமின் உசேன் 4 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் விளையாடிய வங்காளதேச அணியால்...