இலங்கை விஜயத்தின் போது பரிசுத்த பாப்பரசர் மடு தேவாலயத்துக்கும் விஜயம் செய்வார்.
Thinappuyal News -0
உலகிலேயே முதன் முதலில் தமிழர் பிரதேசங்களுக்கு பாப்பரசர் பிரன்ஸிஸ் செல்வதால் முக்கியம் பெறுகிறார் என வத்திக்கானைத் தளமாகக்கொண்டுள்ள 'இன்சைடர்' இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 26 வருடங்களாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் போர் இடம்பெற்ற பகுதியை அவர் தனது பயணத்துக்கான இடமாகத் தெரிவு செய்திருக்கிறார் இதனால் அவர் முக்கியம் பெறுகிறார் எனவும் தெரிவித்துள்ளது.
அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அடுத்த வருடம் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான மூன்று...
போதைப் பொருள் கடத்தல்களும் பாதுகாப்பு செயலாளரின் அனுமதிடன் அரங்கேறுகின்றன-முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
Thinappuyal News -
சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் தனது அதிகாரத்தின் கீழ் எடுத்து வைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் செயற்படுவதால் சர்வாதிகாரம் மேலோங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று (25.08.14) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் உihயாற்றிய சரத் பொன்செகா தேர்தல் திணைக்களம் உட்பட அனைத்து முக்கியமான அரச நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.
ஊழல் மோசடி மலிவடைந்துள்ளது....
இன்று வவுனியாவில் நடைபெற்ற கார்த்திகேசு தங்கராஜா குலேந்திரன் {இந்திரன்}மரணச்சடங்கில் த.தே.கூ பா.உ சிவசக்திஆனந்தன் ;சிறிடெலோ தலைவர் உதயராசாவும் பெருந்திரலான வர்த்தக உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.அன்னார் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடதக்க விடையமாகும்.அன்னாரின் நல்லடக்கம் வவுனியா தச்சனா மடு மயாணத்தில் தகனம் செய்யப்பட்டது.
TPN NEWS
வாரம்தோறும் வன்னி மண்ணில் இருந்து வெளிவருகின்ற தினப்புயல் பத்திரிகை மீது இனம் தெரியாதோரால் எச்சரிக்கை
Thinappuyal News -
வாரம்தோறும் வன்னி மண்ணில் இருந்து வெளிவருகின்ற தினப்புயல் பத்திரிகை மீதுஇனம் தெரியாதோரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கடந்த ஞாயிறு ( 24-08-2014}அன்றுவெளிவர இருந்த எரிக்சொல்கெம் தழிழ்மக்களுக்கும் LTTE யினறுக்கும் செய்த வரலாற்றுதுரோகம் என்பதே அக்கட்டுரை ஆகும் இது தொடபாக ஆராயப்பட் வருவதுடன் இப் பத்திரிகைதொடர்ந்து வரும் என்பதையும் தினப்புயல் நிர்வாகம் வாசகரகளுக்கு அறியத்தருகிறது
சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய எம்.பிக்கள் நேற்றுப் புதுடில்லியிருந்து திடீரென சென்னைக்குச் சென்றுள்ளனர்.
Thinappuyal News -
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்திய சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகினர்.
சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர்.
தமிழக விஜயத்தின் போது அ.தி.மு.க....
மத அமைப்புக்களுடன் மோத வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Thinappuyal News -
மத அமைப்புக்களுடன் மோத வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மத அமைப்புக்களுடன் அமைச்சர்கள் மோதுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மோதிக் கொள்வதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக் வாய்ப்புக்கள் அதிகமாககும். மத அமைப்புக்களுடன் வேலை செய்யும் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும், மத அமைப்புக்கள் ஏதேனும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்த கருத்தை முட்டாள்தனமாக கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
Thinappuyal News -
சாட்சியாளர்களுக்கு பணக் கொடுப்பனவு: ஜீ.எல் பீரிஸின் கருத்துக்கு கிளம்பிய விமர்சனங்கள்
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், பணம் கொடுத்து சாட்சியங்களை பெறுவதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கூறிய கருத்துக்கு பலரும் தமது விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்த கருத்தை முட்டாள்தனமாக கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு நடந்திருந்தால் ஜீ.எல் பீரிஸ் அதற்கான ஆதாரத்தை...
ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு! கூட்டமைப்பினரிடம் மோடி வலியுறுத்தல்
Thinappuyal News -
இலங்கை அரசாங்கம், தமிழ் சிறுபான்மையினரின் சமவுரிமை, இறைமை மற்றும் சுயமரியாதை என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இன்று புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது மோடி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையின் தமிழ் மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமை, நீதி மற்றும் சுயமரியாதை என்ற அடிப்படையில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று இந்திய பிரதமர் இதன் போது கோரியதாக அறிக்கை ஒன்றில்...
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்! இந்திய பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பு கோரிக்கை-தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்
Thinappuyal News -
மோடியுடன் கூட்டமைப்பினர் சந்திப்பு! - மன்மோகன் சிங், அஜித் டோவல், கூட்டமைப்பினர் சந்திப்பு
இந்தியா வந்துள்ள இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் தமிழர்கள் தாயகமான வடகிழக்கு பகுதியில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மோடியிடம் வலியுறுத்தினர்.
அத்துடன், இலங்கையில் 13வது...
அமரர் பொன் சபாபதி நினைவு நிதியநிகழ்வு 2014.
கிளி ஃகிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய(மத்திய கல்லூரி) மண்டபத்தில் இடம்பெற்ற
நிகழ்வில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்புடனும், அமரர்
பொன் சபாபதி அவர்களின் மாணவர்களது நிதிப்பங்களிப்புடனும் பெற்றோரை இழந்த
300 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இம் மாணவர்களுக்காக
மாதந்தோறும் கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வில் வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராஜ மற்றும் த.தே .கூ பாஉ. சிறிதரன்
மற்றும் மாணவர்களையும் படத்தில் காணலாம்
...