தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் மற்றும் புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்று இராணுவத்திடம் சரணடைந்த நிலையில், அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்-எரிக் சொல்கைம்
Thinappuyal News -0
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் மற்றும் புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்று இராணுவத்திடம் சரணடைந்த நிலையில், அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை அனைவரும் அறிவோம். இருப்பினும் இராணுவம் இதனை முற்றாக மறுத்து வருகிறது. இவர்கள் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சென்று சரணடைய முற்பட்டவேளை, இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், எரிக் சொல்கைம், ஊடகவியலாளர் மரியா கொல்வின், மற்றும் விஜய் நம்பியார் ஆகியோருடன் தொடர்புகளை மேற்கொண்டனர்....
தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
Thinappuyal News -
தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள், டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, 13வது அரசியல் சட்ட திருத்தம் குறித்து...
வடமாகாணசபை பொறுப்பேற்று ஆசனத்தில் அமர்ந்த சி.வி விக்னேஸ்வரன் இவ்வளவு காலமாக என்ன செய்கின்றார் என்ற கேள்வியை மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். 89 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று யாழ்.மாவட்டத்தில் வெற்றிவாகை சூடிய அனந்தி சசிதரன், வடமாகாணசபைக்கு சைக்கிளில் வந்துள்ளமையானது ஏனைய வடமாகாணசபை உறுப்பினர்கள் மீது வட மாகாண ஆளுநரும், முதலமைச்சரும் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது.
அரசாங்கத்துடன் சேர்ந்து கூத்தாடும் முதலமைச்சராகவே மக்கள் பார்க்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிகாரங்களை கையில் எடுத்து...
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பணத்தைக் கொண்டு ஆரம்பத்தில் இலங்கையில் செயற்பட்ட அப்பலோ ஹொஸ்பிட்டல் நிறுவனத்தை கோத்தபாய விலைக்கு வாங்கினார்.
Thinappuyal News -
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு சர்வதேச ரீதியாக பெரும் வர்த்தக முயற்சிகளில் கோத்தபாய ராஜபக்ச இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிக்கட்ட யுத்தவெற்றியினை அடுத்து விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகைப் பணம் மற்றும் தங்கம் என்பன இராணுத்தினரால் கைப்பற்றப்பட்டன. உள்நாட்டில் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் மட்டுமே ஆயிரக்கணக்கணக்கான கோடி ரூபாய் பெறுமதியைக் கொண்டிருந்தன.
இதற்கு மேலதிகமாக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கே.பி.யின் கைது மூலம் சர்வதேச ரீதியாகவும்...
முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்
Thinappuyal News -
யாழ்ப்பாணத்தில் முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் மீது இனம் தெரியாத நபர்கள் நேற்று இரவு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது நல்லூர் செட்டிதெரு வீதியில் வைத்து இரவு இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் முகத்தில் காயம் அடைந்த நிலையில் விஜயகாந் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இத்தாக்குதல்...
இராணுவத்தினர் வவுனியா மெனிக்பாம் நலன் புரி நிலையம் என வெளித் தோற்றத்திற்கு ஓர் பெயரினை வைத்து தமது சித்திரவதை கூடங்களுக்கான ஆட்களைத் தெரிவு செய்து கொண்டிருந்தார்கள்.
Thinappuyal News -
போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக்...
. விடுதலைப்புலிகள் இயக்கத்தை தமது நாடுகளில் தடைசெய்து அதன் நடவடிக்கைகளை முறியடிக்க உதவிய இந்நாடுகள் தற்போது மகிந்த இராஜபக்சவை எதிர்த்து வருகிறது
Thinappuyal News -
ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில், இலங்கைத்தீவின் இனமுரண்பாடு என்பது ஒரு பேசுபொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி நிற்கிறது. அதே சமயம் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவிரும்பும் வல்லாதிக்க நாடுகள் இப்பிரச்சனையை பயன்படுத்த விரும்புவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
துரதிர்ஸ்டவசமாக இந்த ஆதிக்கச்சமரில் தமது விருப்பத்திற்கு மாறாக இலங்கைத் தீவில் வாழும் மக்களும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்....
வட மாகாண சபை அமர்வுக்காக அனந்தி சசிதரன் இன்று சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Thinappuyal News -
வட மாகாண சபை அமர்வுக்காக அனந்தி சசிதரன் இன்று சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனந்திக்கான வாகன வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்காத பட்சத்தில் இதனை வெளிக்காட்டவே அனந்தி சைக்கிளில் அமர்வுக்குச் சென்றதாக தெரிய வருகின்றது. வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண சபையில் ஐ.நா விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு 3 பிரேரணைகள் முன்மொழிவு
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழர் தாயகத்தில்...
படப்பிடிப்பாளர் Spencer Tunick உலகெங்கிலுமுள்ள மொடல்கள் மற்றும் நிர்வாண விரும்பிகளை அழைத்து மிகப்பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது வரவழைக்கப் பட்டவர்கள் தமது உடைகளை களையுமாறு பணிக்கப்பட்ட பின் ஓட்டுமொத்தமாக நிர்வாண உலகுக்குள் பிரவேசித்தனர்.
அதன் பின்னர் ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டு நிற்க வேண்டிய நிலைகள் சொல்லப்பட்டன. பால்வேறு பாடின்றி அனைவரும் கலந்து கொண்ட இந்த படப்பிடிப்பின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு….
Posted in: செய்திகள்
- See...
இவ்வருடத்தில் நடந்த உண்மை சம்பவங்கள் பலவீனமாணவர்கள் பார்க்கவேண்டாம்