கொழும்பில் இருந்து தலைமன்னார் ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப் தெரிவித்தார். நேற்று(18.08.14) திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தலைமன்னார் கிராமப்பகுதியில் இருந்து கஞ்சா கடத்த நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக தலைமன்னார் பொலிஸாருக்கு புலனாய்வுத் துறையினர் தகவல் வழங்கினர். இந்த...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் பிரபல இடது கை துடுப்பாட்டாக்காரரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிற்கு எதிராக மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் தெரிவிய வருவதாவது, எனது பெயர் கசுன் தனுஷ்க வேலாரத்ன எனது மனைவியின் பெயர் ரதீஷா வேலாரத்ன இலங்கை விமான சேவையில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகின்றார். சனத் ஜயசூரிய எனது மனைவியுடன் இரகசியமாக தொடர்பை பேணி எனது...
போதைப் பொருள் வர்த்தகத்தில் கோத்தபாய? ஆதாரம் அம்பலம். போதைப் பொருள் வர்த்தகத்தில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முக்கிய தொடர்பு இருப்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. பிரபல சிங்கள புலனாய்வு செய்தி இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் உள்ளிட்ட சிங்கள இணையத்தளங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அண்மையில் கண்டியில் சுமார் 59 கிலோ கிராம் எடையுள்ள போதைப் பொருள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. அதனை பதுக்கி வைத்திருந்த அஹமட் சப்ரி என்ற...
தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஆண்களை மிகவும் கவலை அடைய செய்கிறது. குறிப்பாக இளைஞர்களை அது பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. வழுக்கையை போக்க பல விதமான எண்ணைய்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தும் அதற்கு முழுயைமான தீர்வு காண முடியவில்லை. அனால் தற்போது வழுக்கை தலையில் முடி வளரக்கூடிய வகையில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் சென்டர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர்....
அது என்னமோ தெரியவில்லை... இந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை... நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை... ஓஎம்ஆரில் ஆடம்பர ஹோட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!)  சரி மேட்டருக்கு வருவோம்... இந்த நாமல் ராஜபக்சவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக...
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை வாங்கியுள்ளது பிரபலமான சிங்கள நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்துக்குள் நேரடியாக வர முடியாத ராஜபக்ச, அரசியல், சினிமா, தொழில் முதலீடுகள் என சகல வகையிலும் இப்போது தன் பினாமிகள் மூலம் கால்பதிக்க ஆரம்பித்துள்ளதன் அடையாளம் இதெல்லாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள்...
போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு இலங்கை வர வீசா வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களை இன்று தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்த கருத்தை வெளியிட்டு வந்தபோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு வீசா வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். எனினும் தமது அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து...
இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கடந்த 18ம் திகதி புலனாய்வுப் பிரிவினரால்,திணைக்களகத்தின் அபகீர்த்தி வாய்ந்த நான்காவது மாடியில் வைத்து மூன்று மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வடக்கில் கிளிநொச்சியில் சிறிதரனின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வெடிபொருட்களும் இராணுவத்துக்கு எதிரான இருவட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியே சிறிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஜனவரி நடுப்பகுதியில், சிறிதரன் அலுவலகத்தில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டரீதியான அனுமதி எதுவும் இன்றி, அங்கு இரண்டு முறை 35 பேருக்கும் மேற்பட்ட இராணுவத்தினராலும், பயங்கரவாத புலனாய்வுப்...
மகேலஜெயவர்த்தன இன்று தனது டெஸ்போட்டியிலிருந்து ஒய்வு பெறுகிறார் நாட்டின் ஜெனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடைகொடுத்து அனுப்பும் காட்சி TPN NEWS
 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கையை தண்டிக்கும் நோக்கத்துடனேயே செயற்படுகிறது என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் யுத்தத்தின் இறுதி கட்டங்களில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்நாட்டிலேயே நாம் ஆரம்பித்துள்ளோம். எமக்கு பொறுத்தமான வேகத்தில் அதனை முன்னெடுக்கிறோம். உளளுர் நடவடிக்கைகள் முழுமை பெறுவதற்கு முன்னர் அதற்கான கால அவகாசத்தை வழங்காமல்...