வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ற அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயாரில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். சிரச சிங்களத் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியி்ட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தத் தீர்வு அனைவருக்கும் ஏற்புடையதான தீர்வாகவே இருக்கும். எனவே அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். வடக்கு-கிழக்கில் வாழும்...
  மன்னார் பிரதேசச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10.08) காலை இடம் பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரனைகள் இடம் பெற்ற போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டு சாட்சியம் அழிக்க மறுத்து விட்டதோடு அறிக்கை சமர்ப்பித்தார். இன்று (10.08.14) ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர் பிரதேசச் செயலக கட்டிடத்தில் 3 ஆம் நாள் அமர்வு இடம் பெற்ற போது காலை 10.30...
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் 6 ம்ஆண்டு நினைவுதினம் இன்று. தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள்...
அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் எது செய்தாலும், எதைச் சொன்னாலும் அதன் பின்னால் மிகப் பெரும் அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. காலம் சென்ற பின்னரே சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். தலைவர் கூறியது போல...
எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி...
  பிரேசிலின் ஆபத்தான வளைவில் அதிபயங்கர விபத்துக்கள்
  கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஆகேட் இன்டர்நெஷனல் வர்த்தக தொகுதி திறப்பு விழாவிற்கு 300 மில்லியன் ரூபா பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. கொழும்பு - 07ல் அமைந்திருந்த கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் முன்னைய அலுவலகத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு ஆகேட் இன்டர்நெஷனல் என்ற பெயரில் வர்த்தகத் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் மறுசீரமைப்புக்கு 5000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வர்த்தகத் தொகுதியின் திறப்பு விழா அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக...
விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவருக்கு அவுஸ்ரேலியா புகலிடம் வழங்கியுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலைத் தலைவர் சுவர்ணராஜா பூர்ணராஜா என்பவரை மலேசிய அதிகாரிகள் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தத் தீர்மானித்திருந்தனர். எனினும், அவரை நாடு கடத்துவதற்கு அவுஸ்ரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சுவர்ணராஜாவிற்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத...
 மண்ணின் சொந்தக்காரர்களான தமிழ் மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், அந்நிய குடியேற்றங்களுக்கு தாராளமாக வழங்கப்படுகின்றன என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் ஏற்பாட்டிலும் பிரான்ஸ் t .r .t . வானொலியினுடைய பங்களிப்பிலும் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் இல்லத் திறப்பு விழாவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ‘அ’ பகுதியில் 09.08.2014 அன்று காலை 10 மணிக்கு பிரதம விருந்தினர் உரை குருர் ப்ரம்மா …………………. தலைவரவர்களே, கௌரவ அமைச்சர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே, இன்று திறக்கப்பட்ட இந்த முதியோர் இல்லம் ப்ரான்சில் உள்ள கொடையாளர் ஒருவரின் தாராள சிந்தையின் பிரதிபலிப்பாக கட்டப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அவர் தமது தாயார் ஏழாலை ப+பதி டீச்சர் ஞாபகமாகக் கட்டிக் கொடுத்துள்ளார் என்று அறிகின்றேன். அவருக்கு எனது மனமார்ந்த...