அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மாடிசன் கார்டன் வளாக திடலில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச இருப்பதாக அந்த...
வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு நேற்று (2.8.14) இரவு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரான நவரத்தினம் கபிலநாத்துக்கு இரவு இரு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இதன் போது குறித்த ஊடகவியலாளர் தான் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்வதாக தெரிவித்த போது, தம்மை...
  தனிப்பட்ட பயணமாக யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு இன்று நல்லூர்க் கந்தனை தரிசிக்கச் சென்றார் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா. அவருக்கு அங்கு பெரு வரவேற்பு வழங்கப்பட்டதுடன் அமைச்சரின் வாகனம் ஆலயத்தின் உட்பகுதிவரை செல்ல அனுமதிக்கப்பட்டது. அமைச்சரும் அவரது மெய்ப் பாதுகாவலர்களும் ஆலய வாயில் வரை பாதணிகளுடன் சென்று அவற்றைக் கழற்றாது வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கலாசார உடை அணிந்து வரவேண்டும் என்பதுடன் இந்து ஒழுக்கநெறிகளையும்...
  ஜப்பானை சேர்ந்த பள்ளி சிறுமிகள் வீட்டன் கூறை, சுவர் என அனைத்தையும் தாவி துள்ளிக்குதித்து செல்லும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் நிகழ்த்தியுள்ளது.ஜப்பானின் பள்ளிக்கூட பெண்கள் இராணுவ பயிற்சியில் செய்யப்படும் சாகசமான பார்கர் போட்டியை போல் பெரிய சுவர்கள், மற்றும் வீட்டின் கூறை ஆகியவற்றின் மீது துள்ளி குதிக்கும் சாகசத்தை, கைபேசியில் உள்ள கமெராவின் மூலம் காணொளியாக எடுத்துள்ளனர். அதில், இரு பெண்கள் துள்ளி குதித்து ஒருவரை ஒருவர் விரட்டி...
ஐக்கிய நாடுகள் அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். பிரதான உரை நிகழ்த்தும் பட்டியலின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இரண்டாவது நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பாகிஸ்தான், கனடா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் ஆகியோர் அமர்வின் ஆரம்ப நாளான செப்டம்பர் 24 ஆம்...
  All guns silenced: Sri Lanka Army disproves worldwide concept on terrorism  20th May 2009 Army elites spearhead the final assault; Sri Lanka awaits total liberation from terror  17th May 2009 The final rescue mission on the way; LTTE continue to fire at escaping civilians 14th May 2009 LTTE's Multi Barrel Rocket Launcher found - Karyalaimullivaikkal 13th...
குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அமெரிக்கத் தூதரகம், அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மறுப்பு விவேகமற்ற செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு மறுக்கக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சுக் கருதும் பட்சத்தில், இன்னொரு அமைச்சு அத்தகைய மறுப்பை அதிகாரபூர்வமாக...
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் புகலிட விண்ணம் செய்திருந்த போதிலும் பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை வேறும் நாடுகளில் பாதுகாப்பாக...
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் உதவ முடியாது: சம்பந்தன் கூறியதாக லக்பிம தகவல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் உதவ முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதா, இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க...
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனையற்ற மன்னிப்பினை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கட்டுரையின் தலைப்பும், அதற்கான படமும் உள்ளடக்ககமும் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரையை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்திலிருந்து உடனடியாக நீக்கிக் கொண்டதுடன், பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுளள்ளது. தனது மன்னிப்புக் கடிதத்தினையும் இலங்கை...