2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆஜென்ரின அணியை வெற்றி கொண்டதன் மூலம், நான்காவது தடவையாக ஜேர்மனி அணி சம்பியனாக மகுடம் சூடியது. றியோ டி ஜெனீரோவிலுள்ள மரக்கானா விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் தென் அமெரிக்க நாடொன்றில் உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்த முதலாவது ஐரோப்பிய அணியாக ஜேர்மனி வரலாற்றில்...
திடீரென செல்வந்தர்களாக மாறிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு பொலிஸ் அதிகாரிகள் திடீரென கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் 10, 15 மற்றும் 50 லட்ச ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவியளிக்கிறது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலும் செய்து கொள்ளப்பட்டது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹாää உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த உடன்படிக்கையின் கீழ் இந்;திய அரசாங்கம் இரண்டு பீடங்களுக்குமான செயன்முறை உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக்...
ஒபாமாவும் டேவிட் கமரூனும் பதவிக்கு வர தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை தக்கவைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். அமெரிக்காவில் விடுதலைப் புலிகளின் லட்சக்கணக்கான வாக்குகள் இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் வாக்குகள் மூலமே அங்குள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது...
மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் இராணுவ அதிகாரியான ஜீ.ஏ.சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் நியமித்துள்ளதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளானது, இனங்களுக்கிடையில் ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக, மேலும் மேலும் குரோதத்தையும், இன முரண்பாடுகளையுமே தோற்றுவிக்கும் என்று கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் குறிப்பிட்டுள்ளார். மங்கள சமரவீர...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டு;ம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடு என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது அதனை வலுவிழக்கச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க எதிர்க்கட்சிகள் எடுத்து வரும் முயற்சிக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவான நோக்கமொன்றுக்காக அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதில் தமிழ்த் தேசியக்...
பொதுமக்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோர் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விளக்கமளிக்க அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த மூவருக்கும் எதிராக காணாமல் போனோர் ஆணைக்குழுவின் முன்னால் பலரும் சாட்சியமளித்துள்ளனர். இதன்போது டக்ளஸ், கருணா மற்றும் பிள்ளையானுக்கு தமது பிள்ளைகளின் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சாட்சியங்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்தே...
“இந்தியாவுக்கு எதிராக இலங்கை முஸ்லீம்கள் செயற்படமாட்டார்கள்” இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கீம் இலங்கை முஸ்லீம்கள் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்கு எதிராகவோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எதிராகவோ பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை ஒருநாளும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசில் இருக்கும் ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் (ரவுப் ஹக்கீம், ஏ எச் எம் ஃபௌசி, ரிஷாத்பதியுதீன், பஷீர்...
தென்னிந்திய சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் மற்ற விருது விழாக்கள் போல் இல்லாமல், திறமைக்கு மதிப்பளித்து விருது வழங்கியுள்ளனர். அதன் விபரங்கள் பின் வருமாறு..... சிறந்த நடிகர்-அதர்வா(பரதேசி) சிறந்த நடிகை- நயன்தாரா(ராஜா ராணி) சிறந்த இயக்குனர்- பாலா(பரதேசி) சிறந்த படம்- தங்கமீன்கள் சிறந்த இசையமைப்பாளர்-ஏ.ஆர்.ரகுமான்(கடல்) சிறந்த நடிகர்(critics)-தனுஷ்(மரியான்) சிறந்த பாடலாசிரியர்- நா. முத்துக்குமார்(தங்கமீன்கள்) சிறந்த பின்னணி பாடகர்- ஸ்ரீ ராம் பாரத்தசாரதி(ஆனந்த யாழை) சிறந்த பின்னணி பாடகி- ஷக்தி ஸ்ரீ( நெஞ்சுக்குள்ள) சிறந்த ஒளிப்பதிவாளர்-...
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டையே கலக்கியவர் பிரகதி. இதை தொடர்ந்து இவர் பரதேசி, வணக்கம் சென்னை போன்ற படங்களில் பாடினார். மணிரத்னம், கௌதம் மேனன் போன்ற இயக்குனர்கள் சொல்லியும் நடிக்க மறுத்த இவர், இயக்குனர் பாலா தன் படத்தில் நடிக்க அழைத்தாராம். முதலில் யோசித்த இவர் பின்பு பாலாவின் மீது கொண்ட நம்பிக்கையால் நடிக்க சம்மதித்துவிட்டாராம். தாரை தப்பட்டை படத்தில் நாதஸ்வர கலைஞராக வரும் சசிகுமாரின் தங்கை ஒரு நாட்டுப்புற...