சினிமாவில் வழிகாட்ட எனக்கு காட் பாதர் கிடையாது. எனவே டாப் இடத்தை அடைய முடியவில்லை என்றார் சதா. சதாவை ஞாபகம் இருக்கிறதா? ஜெயம் படத்தில் அறிமுகமானவரேதான். பாவாடை, தாவணியில் அறிமுகமாகி இளவட்டங்களை கவர்ந்தவர் அடுத்த படத்திலேயே அதிரடி கவர்ச்சி வேடத்தில் நடித்து ஷாக் கொடுத்தார். அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே என அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல்போனார். தெலுங்கு, மலையாளத்துக்கு போனார்....
தென் கொரியாவில் கோசியாங் நகரம் வட கொரியா எல்லையில் உள்ளது. இங்கு இரு நாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளளர். இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த தென்கொரிய ராணுவ வீரர் ஒருவர் உடன் பணிபுரியும் மற்ற வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 5 ராணுவ வீரர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர். எதற்காக அவர் மற்ற வீரர்களை...
ஈராக்கில் அமெரிக்கா படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சதாம் உசேனின் சன்னி பிரிவு முஸ்லிம் ஆட்சி வீழ்ச்சி அடைந்து ஷியா பிரிவு முஸ்லிம் ஆட்சி அமைந்தது. புதிய அரசு சதாம் உசேன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி தூக்கில் போட்டது. இதனால் சதாம் உசேன் ஆதரவாளர்களும், அவரது படையில் இருந்தவர்களும் தீவிரவாதிகளாக மாறி ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈராக் தீவிரவாதிகளுக்கு சிரியா தீவிரவாதிகளும் ஆதரவு அளித்து ஐ.எஸ்.ஐ.எஸ்....
ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள மொசூல் நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 40 இந்திய தொழிலாளர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். 40 தொழிலாளர்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மொசூல் புறநகரில் உள்ள பஞ்சாலை மற்றும் அரசு கட்டிடங்களில் 40...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சைதமா என்ற இடத்தில் உள்ள ‘ரோபோ’ (எந்திர மனிதன்) தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் அபே பார்வையிட்டார். அங்கு உருவாக்கப்படும் பலதரப்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை ரசித்தார். பின்னர் அங்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வருகிற 2020–ம் ஆண்டில் டோக்கியோவில் 32–வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் அறிவியல் வளர்ச்சி சார்ந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன். அந்த வகையில் முதன்...
பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்) அடித்து உள்ளார். அவரது சாதனையை ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ் சமன் செய்தார். கானாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 71–வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் 2002, 2006, 2010 ஆகிய 3 உலக...
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சியினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட்டக்குழுவில் இடம் பிடித்திருந்த மாணவன் குண்டு காயங்களுடன் பிணமாக காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குற்றவியல் நடைமுறை சட்டம் கருத்துக்களக் குழுவின் தலைவரான அல்ப்ரெடோ ரோமெரோ கூறுகையில், ஜோசு பாரியஸ் என்பவர் மரகைபோ நகரின் மேற்கு பகுதியில் கடந்த மே 29ந் தேதியன்று அரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொண்டபோது குண்டு...
பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் இன்று பாகிஸ்தான் அரசு நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 30 பேருடன் சேர்த்து இதுவரை 260 தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மாலை 5 மணியளவில் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஹஸ்சு கேல் பகுதியில் மூன்று தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவ தளபதியான...
புகழ்பெற்ற இணையதளமான கூகுள் நிறுனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது.  இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை கையெழுத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அச்சிறுமி கீழ்க்கணடவாறு எழுதியிருந்தாள். “எனது தந்தைக்கு வருகிற புதன் கிழமை பிறந்த நாள். அவருடன் இணைந்து அவரது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் அவருக்கு வார...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா-போஸ்னியா அணிகள் மோதின. மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து நைஜீரியா வெற்றி பெற்றது. இரு அணிகளும் முதல் பாதியில் விறுவிறுப்பாக ஆடின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நைஜீரியாவின் ஓடம்விங்கி அதிரடியான கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார். முதல் பாதியில் போஸ்னிய வீரர்கள் கட்டுப்பாட்டில் 55 சதவிகித நேரம் பந்து...