தொழலாளர்களின் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் 80 ஆவது தொழிலாளர் தினம் நாடாளவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை, கிண்ணியா, வவுனியா, திருக்கோவில், கிளிநொச்சி, கண்டி, கல்முனை, தலவாக்கலை ஆகிய இடங்களில் இடம் பெற்ற நிகழ்வுகளின் தொகுப்புக்கள் இங்கே இணைக்கப்படுகின்றது.
செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கண்ணாட்டிக் கணேசபுரத்தில் நேற்று முன்தினம் (29.04.2014) அன்று கடும் மழை காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டமையினால் 150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 57 குடும்பங்களினது வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. வீடுகளின் தகரங்கள் சூறாவளியினால் சேதமாகியதுடன், மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்துள்ளதுடன் இவற்றை சரிசெய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு 20000 ரூபாய்கள் வரைதேவைப்படுகின்றது. தற்பொழுது அனர்த்தமுகாமைத்துவ பிரிவினால் மூன்று நாட்களுக்கு தேவையான...
உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேருங்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெணிணிசக்கட்சி தொழிலாளர்கள் தினமான மே 01 இனை முன்னிட்டு வவுனியாவில் (01.05.2014) இன்று காலை 9.30 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெணிணிசக்கட்சியினரினால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. இப்பேரணியானது வவுனியா அரச பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது. அத்தோடு வவுனியா நகரசபை மண்டபத்தில் நா.தேவகிருஸ்ணன் (சமூக நீதிக்கான வெதுஜன அமைப்பாளர்) தலைமையில் சிறப்புரை நடைபெற்றது. ஐக்கியப்பட்ட தொழிலாளர்கள்...
ராஜபக்ஷக்களின் அசுத்த ஆட்சியிலிருந்து மக்களை மீட்டெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உழைக்கும் மக்களுக்கு நிவாரங்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். உழைக்கும் மக்களுக்கு விடிவினை ஏற்படுத்த சகல முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்லாயிரக் கணக்கான துன்பியல் அனுபவங்களினால் உழைக்கும் மக்கள் உழலுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்....
சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து தொழிலாளர் தோழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உழைக்கும் வர்க்கத்தினரின் மிக முக்கியமான தினமான மே தினத்தில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். மிகவும் சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமான முறையில் மே தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கக் கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் நிலையான அபிவிருத்தியை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த...
ஆண்டான்டு காலங்கலாக வாழ்ந்துவருகின்ற மக்களின் சுயநிர்ணயங்களில் ஒன்றான தொழில் தர்மத்தை உலக அரங்கிற்கு காட்டும் ஒன்றாக இந்த உழைப்பாளர் தினம் அமைகின்றது. உலகெங்கிலும் நெற்றி வியர்வைசிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தினப்புயல் பத்திரிகை சிரம்தாழ்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. போரின் அடிமைவிலங்கினை உடைத்து சுதந்திரக்காற்றை சுவாசிக்காத போதிலும் மனித வாழ்க்கையில் உழைப்பு என்பது இன்றியமையாததொன்று. நாட்டின் சுதந்திரம் இறையாண்மை பேணப்பட்டு வராதபோதிலும் தொழிலாளர்களின் முயற்சிகளின் மூலமே இன்று ஒவ்வொரு நாடும்...
1,50,000 க்கு மேற்பட்ட பௌத்த, இந்து மக்கள் மதமாற்றம்: முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள்மீது பொதுபலசேனா பாய்ச்சல்:- முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆயர்களுக்கும் எதிராகவே எமது எதிர்ப்பு: பொதுபல சேனா:- அப்பாவி இந்துக்களை மதமாற்றும் நடவடிக்கையில் முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். அப்பாவி பௌத்த மற்றும் இந்துக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டினையும் நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்தது. பௌத்த நாட்டில் முஸ்லிம்களுக்கு அடிபணிய...
இலங்கைப் பிரச்சினையில், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு மற்றும் அதனை அணுகும் முறை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது என அக்கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் வலியுறுத்தி கூறியிருக்கின்றார். இன்று புதன்கிழமை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தொடர்புடைய விடயங்கள்தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய...
விடுதலைப்புலிகளின் கடற்புலி விசேட புலனாய்வுப்பரிவினர் தென்னாபிரிக்காவின் கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் இயங்கிவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்பொழுது இவர்கள் மீண்டும் இலங்கைக்குள் எவ்வாறு கடற்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவருவது தொடர்பான பயிற்சிகள் அங்கு அளிக்கப்பட்டுவருவதாவும், அமெரிக்க அரசின் உதவியுடன் இவர்களுக்கான சிறப்புப்பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுவருகின்றது. 2009 ஆம் ஆண்டு 5ம் மாதமளவில் கடற்புலிகளின் விசேட புலனாய்வுப்பிரிவினர்களுக்கு தென்னாபிரிக்க அரசின் உத்தரவுடன் அடைக்கலம் வழங்கப்பட்டதாகவும் அச்செய்திகளில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை...
2007 – 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற பெண்கள் மீதான 119 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 125 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவற்றில் 5 சம்பவங்களுடன் இராணுவ சிப்பாய்கள் 7 பேர் தொடர்புபட்டுள்ளனர். இதேபோல் 200-2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற 256 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 307 பேர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற...