மாதங்கள் என்ற அளவு நாட்களாகக் குறைந்து கொண்டு வரும் நிலையில் ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்காகப் பலரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா - பிரிட்டன், மனித உரிமை ஆணையாளர், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச ஊடகங்கள், இலங்கைக்குள்ளிருக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள், இலங்கை அரசு என்று பல தொகுதிவாரியான பகுதியினர் இக்கூடடத்தொடரை முகம்கொடுக்க தயாராகி வருகின்றனர். அவ்வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையா ளர் நவநீதம்பிள்ளையினால் பத்தாயிரம்...
    இலங்கையரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரிய படைநகர்வென்றை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் 2009 காலப்பகுதியில் மும்முனைத்திறப்புடன் வலிந்த தாக்குதலாக நடத்தியிருந்தது. மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் நிறைவுபெற்றது. ஆனால் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் அரசாங்கத்துடனும் சமரப் பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐ.நா சபை செயலாளர் நாயகம் யசூசி அக்காசி, எரிக் சொல்ஹெய்ம் உட்பட பல்வேறு நாடுகளின் ராஜதந்திரிகள் இலங்கையின் நடைபெற்றுக்கொண்டிருந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றனர். காரணம்...
  இலங்கை அரசியலில் மட்டுமல்ல இன்று சர்வதேச அரசி யலிலும் மார்ச் மாத ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் முக்கிய கவனிப்பை பெற்றிருக்கிறது. மனித உரிமை விவகாரங்களில் அதிகள வில் கரிசனை காட்டாத பல நாடுக ளின் அரசியல் விவகாரங்கள் இதில் கலந்தாலோசிக்கப்படும். அந்நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவ காரமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமான விடயம்தான். 1987 முதல் 2009 வரையிலான 22வருடகால விடுதலைப் போராட்ட வரலாறாக இருந்தாலும் சரி,...
சர்வதேச அரசியல் விளையாட்டரங்கில் ஆசியாவின் முக்கிய நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது. இந்துசமுத்திர நாடுக ளில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதி யில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் கவனிப்பை பெற்றவை. இவற்றில் ஒட்டுண்ணி நாடாக இல்லாமல் தன்மை ஆசிய பிராந்தியத்தின் வல்லரசாக மாற்றிவரும் இந்தியாவை தமது பகடைக்காயாக பயன்படுத்த முடியாத நிலையில் உலக வல்லரசுகளினதும், தாபனங்களினதும் பெரும் கவனிப்புக்குரியதாக கருதப்படுவது இலங்கை மட்டுமே. இதனால்...
உலக வல்லரசு நாடுகள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்நாட்டு புலனாய்வுக்கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்கின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, ஸ்கொட்லாந்து இப்படி பலம்மிக்க புலனாய்வுநாடுகள் இடம்பெறுகின்றன. வீட்டோ அதி காரம் கொண்ட நாடுகளும் அந்நாட்டின் புலனாய்வுக்கட்டமைப்பிலேயே தங்கி யுள்ளது. அதேபோன்று இலங்கை நாட்டையும் கூட அவ்வாறான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருவதன் ஊடாக உலகளாவிய ரீதியில் தலைசிறந்த ஒரு தீவாக காணப்படுமே ஒழிய வேறு எந்த வகையிலும் அமையப்பெறமாட்டாது. உலகநாட்டில்...
  இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவற்றுக்கான காரணம் என்ன? இந்தியா இலங்கையின் அண்மைய நாடு மட்டுமன்றி பண்டமாற்று வியாபார காலம் தொடக்கம் நல்லதொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்த நாடா கும். அமெரிக்க அரசின் திட்;டத்தின் படியே இறுதிக்கட்டத்தில் இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இலங்கைக்கெதிராக...
கிளிநொச்சி விவசாயிகளினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை தொடக்கம் கரைச்சி பிரதேச சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் உறுதிமொழிகளினையடுத்து கைவிடப்பட்டது. இந்நிலையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் தமிழ்த் தேசிய மக்கன் முன்னணியின்...
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என பிரித்தானியாவின் சிங்களப் பேரவைத் தலைவர் டக்ளஸ் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக பொரளாதாரத் தடைகளை விதிக்கும் முனைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் பிரித்தானிய அரசாஙகத்தை கோரத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களை கொள்வனவு செய்வதனை தடுக்க முயற்சிகள்...
  கடனை திருப்பி கொடுக்காத வெங்கட்பிரபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார் சோனா. குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்கள¤ல் நடித்திருப்பவர் சோனா. இவர் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன் டைரக்டர் வெங்கட்பிரபுவும், நானும் நட்புடன் இருந்தோம். எனக்கு ஒரு படம் இயக்குவதாக கூறி இருந்தார். இதற்காக என்னிடம் பணம் பெற்றிருந்தார். சில காரணங்களால் அப்படம் டிராப் ஆனது. ஆனால் என்னிடம்...
இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் தனது செல்லப்பிராணியாக முயலை வளர்த்து வருகிறார்.டேரியஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த முயல், உலகிலேயே மிகப்பெரியது என்று கருதப்படுகிறது. இது சுமார் 4 அடி 4 அங்குலம் நீளம் கொண்டதாகும். குறித்த முயல் உணவாக தினமும் 12 கேரட்டுகளை சாப்பிடுகிறது. அப்படியெனில் இது வருடத்திற்கு சுமார் 4000 கேரட்டுகளை சாப்பிட்டு வருகிறது. இது குறித்து அதன் உரிமையாளர் கூறுகையில் "டேரியஸை பராமரிப்பதற்கு மட்டும்...