பிராந்திய செய்திகள்

ஏனைய மாகாணங்களிலுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் நிரந்தர வாழ்வாதார திட்டம், இன்று மன்னாரில் சந்திப்பு நடைபெற்றது…

ஏனைய மாகாணங்களிலுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் நிரந்தர வாழ்வாதார திட்டம், இன்று மன்னாரில் சந்திப்பு நடைபெற்றது... வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின்...

மஸ்கெலிய சமனெலிய பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூ கருத்தரங்கு

நாடளாவிய ரீதியில் போதைபொருள் ஒழிப்பை முன்னிட்டு இன்று மஸ்கெலிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரட்ணாயக்கவூம் ஏனைய  பொலிஸாரும் மஸ்கெலியா  மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பிரிவின் வைத்தியர் ர்சாட் அவர்களும் இணைந்து மஸ்கெலிய...

Supporting and Development of local sports clubs in vavuniya-by M.Royjayakumar

Supporting and Development of local sports clubs in vavuniya-by M.Royjayakumar

வெளிவரும் திடுக்கிடும் உண்மை புலிகளின் கோரிக்கையை நிராகரித்த கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறார்-சிவநாதன் கிசோர்

  2009 இறுதியுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருக்கும் போது கூட்டமைப்பினர் தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார் முன்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவநாதன் கிசோர். தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிவநாதன்...

வவுனியா சிதம்பரபுரம் அகதிகள் முகாமிலிருந்து சவுதிஅரேபியா சென்ற குடும்ப பெண் மரணம்.

வெளிநாடு சென்ற குடும்ப பெண் மரணம் வவுனியா சிதம்பரபுரம் அகதிகள் முகாமிலிருந்து சவுதிஅரேபியா சென்ற இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய சுப்பையா கமலா வயது 36 என்பவரே சவுதிஅரேபியாவில் 26-06-2015 அன்று மரணமானதாக தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது...

நடைபெற இருக்கும் பொதுத்தேர்தல் மூலம் ஈழ தமிழர்கள் புதிய தலைமையை உருவாக்க வேண்டும். – ஒபாமாவுக்கான தமிழர்...

கடந்த ஐந்து ஆண்டுகளில் எமது தற்போதய தலைமைகள் பல அரசியல் தவறுகளை செய்து விட்டார்கள். இவர்கள்தமிழர்களின் பேரம் பேசும் பலத்தினை குப்பையில் தூக்கி எறிந்தார்கள்.   1. 2009 இல் இருந்து சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சர்வதேச விசாரணையை மறுத்தார்கள்.அமெரிக்காவிடம் சர்வதேச விசாரணை அவசியமற்றது என்று அமெரிக்கா தூதுவர் பற்றிசியா பூட்டனஸ்அவர்களிடமே சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அவர்கள் நேரடியாகக் கூறினார்கள். ஆனால் 2011 இல் சம்பந்தன் மற்றும்சுமந்திரன் அவர்கள் அமெரிக்கா வந்தபோது அக்காலத்தில் அமெரிக்காவில் பல உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில்சர்வதேச விசாரணை கண்டிப்பாக நடைபெறவேண்டும் என்று கருத்தினை கொண்டிருந்தார்கள். இந்நிலையில்புலம்பெயர்ந்த மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி வேறு வழியின்றி சர்வதேச விசாரணைக்கு அதற்கு ஆதரவுகொடுத்தார்கள். ஆனால் அண்மைக்கால அவர்களின் செயற்பாடுகள் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின்முன்னைய அவர்களது மனோநிலையினையே பிரதிபலித்துள்ளது இங்கு குறிபிடத்தக்கது.   2. தற்போது சர்வதேச விசாரணை வேண்டாம் உள்ளக விசாரணையே வேண்டும் என்று சுமந்திரன் ஐரோப்பியஒன்றியம் மற்றும் ஜெனீவாவிலும் கூறி வருகின்றார்.   3. அடிக்கடி ஓன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்று கூறி தமிழீழம் என்றும் சொல்லுக்கு அந்தியேட்டி கிரியைசெய்துவிட்டார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று கூறி 77, 83, 2009 ஆண்டுகளில் நடைபெற்றஇனப்படுகொலைக்கு மீண்டும் தமிழரை  உள்ளாக்குகின்றார்கள்.   4. 43 வருடங்களாக தொடர்ந்து சுதந்திர தினத்தினை பகிஸ்கரித்து வந்த தமிழரை கடந்த சுதந்திர தினத்தில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் மக்களையும் தந்தை செல்வாயையும் அவமதித்து விட்டார்கள்.   5. சிங்கக் கொடியை எதிர்த்து பல போராட்டங்களை செய்த தமிழ் மண்ணில் சிங்களவருடன் வந்து சிங்கக்கொடியைசேர்த்து உயர்த்தி பிடித்ததன் மூலம் தமிழரின் உணர்வுகளை மழுங்கடித்தார்கள்.   6. கடந்த மே18 அன்று 2009ம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 145,000 மேற்பட்டடோருக்கான நினைவஞ்சலிநிகழ்வில் கலந்து கொள்ளாது கொழும்பில் ஒழித்துக் கொண்டமை மூலம் தமிழ் மக்களை அவமதித்தார்கள்.   7. 30 வருட ஆயுதப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில், வீரச்சாவடைந்த மாவீரர்களை ஈவு இரக்கமற்றபயங்கரவாதிகள் என்று அமெரிக்கா மற்றும் பல வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அடிக்கடி கூறி எம்மைபாதுகாக்க ஆயுதம் ஏந்தி தன்னலமற்று வீரமரணம் அடைந்த மாவீரர்கள் மற்றும் அவர்களது வீரம் செறிந்தபோராட்டம் அனைத்தையும் இழிவு படுத்தினார்கள்.   8. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலன் போது யு.என்.பி இனரிடம் பெருமளவு பணத்தினைப்பெற்று அதனை தமதுசில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 32 இலட்சத்தினை கொடுத்தன் மூலம் தமிழரின் சுய கௌரவத்தினைஇழக்கச் செய்தார்கள். தமிழ்த் தலைமைகள் பணத்திற்கு சோரம் போக்கூடியவார்கள் என்பதை காட்டினார்கள்.இப்பணத்தை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் வாங்க மறுத்தமையானது இன்னமும் பணத்திற்காக சோரம்போகாத தமிழர் இருக்கின்றார் என்பதனையும் காட்டுகின்றது.   9. இவை எல்லாற்றிக்கும் மகுடம் வைத்தமை போன்று தமிழ் மக்களால் ஏகமனதாக வாக்களித்து தெரிவுசெய்யப்பட்ட வடமாகாண சபையினால் கொண்டுவரப்பட்ட இனபடுகொலை தீர்மானத்திற்கு தமிழர் தலைவர்களாககூறிக்கொண்ளும் திரு சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.   10. இத்தீர்மனத்தின் பின்னர் முதலமைசர் விக்கினேஸ்வரன் அவர்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காகஅமெரிக்கா இராஜதந்திரிகள் முன்னனிலையில் புதிய அரசாங்கம் எமக்கான தீர்வினை பெற்றுத்தரும் ஆனால்அதனை நாமே குழப்பிடக் கூடாது என்று விக்கினேஸ்வரனை பார்த்து கேலியாக கூறி அவரை அவமதித்தார்.அமெரிக்கா இராஜாங்க செயலாளர் கெரி இன் உடனான சந்திப்பில் அவருடன் பேசுவதற்கு விக்கினேஸ்வரனைவிடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.   11. விக்கினேஸ்வரனுக்கு உரிய தேவைகளை நிதியமைசரிடம் கேட்கும் போதெல்லாம் கொழும்பில் இருந்துகொண்டு சுமந்திரன் அவர்கள் அரசாங்த்தின் ஊடாக தடைபோட்டு வருகின்றார்.   12. இறுதி யுத்தத்தில் மக்களும் புலிகளும் முழுமையாக அழிக்கப்படும் வரை தற்போதைய தமிழ் தலைமைகளாகஉள்ள தலைவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து விட்டு அனைத்து போரும் முடிவுக்கு வந்த பின்னரேநாட்டுக்கு திரும்பினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   குறிப்பு: மேற்கூறப்பட்ட கருத்துக்கள் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் இறுதியுத்தத்தினால் பாதிப்புற்று வெளியேறிஅமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களின் ஒரு கூட்டு செயற்பாட்டின் கருத்துக்களே ஆகும். இதன் நோக்கம்நடைபெற உள்ள பொதுத்தேர்தலின் மூலம் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு தமது எதிர்கால தலைமைய சரியாகதெரிவு செய்யவேண்டும் என்பதனை தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

மாபெரும் அறிவுக்கடல், மாமனிதர் டாக்டர் அப்துல் கலாமை இந்த உலகமும் இந்தியாவும் இழந்து விட்டது – வடக்கு மாகாண...

மாபெரும் அறிவுக்கடல், மாமனிதர் டாக்டர் அப்துல் கலாமை இந்த உலகமும் இந்தியாவும் இழந்து விட்டது - வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இரங்கல் செய்தி... முன்னை நாள் இந்திய ஜனாதிபதி டாக்ட்டர் அப்துல்...

இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் 50,000/= வாழ்வாதார உதவி வழங்க வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்...

இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் 50,000/= வாழ்வாதார உதவி வழங்க வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன் திட்டவட்டம்... நாளை மன்னாரில் விசேட சந்திப்பு... வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரால் உருவாக்கப்பட்ட...

கனரா முன்பள்ளி மாணவா்களினால் நடாத்தப்பட்ட சந்தை நிகழ்வில் கலந்துகொண்டபோது..றோய் ஜெயக்குமார்

25.07.2015 அன்று கனரா முன்பள்ளி மாணவா்களினால் நடாத்தப்பட்ட சந்தை முறை படிப்பினையொன்றில் கலந்து கொண்டபோது. மாணவா்களிற்குபுத்தக கல்விமட்டும் முக்கியமானதல்ல அதனுடன் சோ்ந்து அவா்கள் வெளிப்புற சுற்றாடல்களையும் அறிந்திருக்கவேண்டும் கொடுக்கல் வாங்கல் வாடிக்கையாளர்களோடு பழகும்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகனின் ஆதரவாளர்கள் மீது மாணவர்கள் சிலர் தாக்குதல்

  நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகனின் ஆதரவாளர்கள் மீது மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -...