மாலைதீவில் நேற்று இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காலை 8 மணிக்கு மாலைதீவு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. இந்நிலையில் மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர் 92 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர்...
இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்ட சிக்கல்களை தீர்த்து வைத்த பின் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று ராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகி உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர்...
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த நெருக்கடி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரமர் கூறினார்.
கடந்த காலத்தில் சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னோக்கிச் சென்றதைப் போன்று டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்க இருக்கின்றுாம்.
கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட மாட்டாது. டொலரின் பெறுமதி...
அம்பாறை, உஹன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
18 க்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட சிலரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில், சி.ஐ.டி. முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதுவரை சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைப் பிரிவு முன்னெடுத்துள்ள சிறப்பு விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தி பொலிஸ் மா...
பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது, பல்வேறு நம்பகமான வழிகளினூடாக சரிபார்த்துக் கொண்டதில், இத் தகவல் உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. அதற்குப் பின்னர், எனக்கு முழுமையான எண்ணிக்கை கொண்ட பாதுகாப்பு அணியை மீளப்பெறுவது குறித்து...
வவுனியா அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டிய போராட்டம் சொல்லும் செய்தி என்ன?
EPRLF யுடன் EPDP ஆட்சி அமைத்தாலும் அதில் ஆச்சரியப்படத் தேவையில்லை
காட்டிக் கொடுப்புக்கள் காலத்துக்கு காலம் மாறுபட்டவை ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக இருதிவரை போராடியவர்கள் தமிழ்ஈழ விடுதலைப்புலிகளே தான் 2000 ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் தவிர எலல்லா ஆயுதக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள் சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக போராட வரவேண்டும் என்று ஆனால் டெலோ இயக்கத்தில் ஒரு சிலரும்...
தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எது வந்தாலும் எதிர்க்க வேண்டியதே தமிழர் அரசியல்.
Thinappuyal News -
தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எது வந்தாலும் எதிர்க்க வேண்டியதே தமிழர் அரசியல்.
?முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு பல்கலைக்கழகம் வந்த போதே எதிர்த்தவர்கள்தான் நம் முற்கால தலைவர்கள்.
? யாழ்ப்பாணத்திற்கு றெயின் வந்தால் மக்களைக்கொல்ல சிங்களவன் அனுப்புகிறான்.
?மின்சாரம் வந்தால் மக்களைக்கொல்ல சிங்களவன் அனுப்புகிறான்.
?மகாவலி வந்தால் மக்களைக்கொல்ல சிங்களவன் அனுப்புகிறான்
?காபெற் றோட் போட்டால் மக்களைக்கொல்ல சிங்கவன் போடுகிறான்.
?தொழிற்சாலைகள் வந்தால் மக்களைக்கொல்ல மகிந்த செய்கிறான்.
எதையுமே தமிழ் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகவோ அபிவிருத்தியாகவோ சிந்திக்க விடுவதில்லை.
மகாவலி இரணைமடுவுக்கு...
தன்மானமுள்ள ஆயுதக்கட்சிகளாகவிருந்தால் தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டி தனித்துநின்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் செயற்பாடுகளில் களமிறங்கவேண்டும்.
Thinappuyal News -
மக்கள் மத்தியில் ஜனநாயக நீரோட்டத்தில் பிரகாசித்துவரும் இவ்வாயுதக்கட்சிகளை ஓரங்கட்டுவதன் ஊடாக, தமிழரசுக்கட்சி தனது கட்சியைப் பலப்படுத்திக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறது.
அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின் ஆலோசனையுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மிக முக்கியமாக சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவான்...