நோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கியா 6 எனும் 3GB RAM கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது 4GB RAM உடைய நோக்கியா 6.1 எனும் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளில் இக்கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது Android 8.1...
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் அங்கமானஇ சதுரங்கப் போட்டியில் ஆண்களுக்கான 17 மற்றும் 20 வயதுப்பிரிவூகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியனாகியது.
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் ஆண்களுக்காக சதுரங்கப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
17 வயதுப்பிரிவூ ஆண்களுக்கான சதுரங்க போட்டியில்இ 28 பாடசாலைகளைச் சேர்ந்த சதுரங்க அணிகள் பங்குபற்றின.
இதில் பருத்தித்துறை...
(09-06-2018) 60ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பாலா ஐயா அவர்களின் நிதி பங்களிப்புடன் மடு பிரதேசத்தில் உள்ள பூசாரியார் குளம், முள்ளிக்குளம் போன்ற பிரதேசங்களில் மிகவும் வறிய நிலையில் உள்ள விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு தேவையான உணவு பொதி இன்றைய தினம் வெளிச்சம் அறக்கட்டளை ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு. பா.லம்போதரன், செயலாளர் திரு.தி.கார்த்திக், பொருளாளர் திரு. செ.மேனதாஸ் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர் திரு.றஜுவ் அவர்களும்...
-மன்னார் நகர் நிருபர்-
மன்னார் நகர மத்தியஸ்தர் சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் நேற்று (12) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டதோடு, மன்னார் நகர புதிய மத்தியஸ்தர் சபை அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் புதிய மத்தியஸ்தர் சபை அங்குரார்ப்பணமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர மத்தியஸ்தர் சபைக்கு 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன்...
உடல் தகுதி தேர்வில் தோற்றதால் இந்திய ‘ஏ’ அணியில் இருந்து சஞ்சு சாம்சனின் வாய்ப்பு பறிபோனது.
இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் நேற்று முன்தினம் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. இந்த போட்டி தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இருந்த...
மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளில் இரண்டாவது நாளாக களனி பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு
Thinappuyal News -
-மன்னார் நகர் நிருபர்-
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று(12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை மேற்கொள்வதற்காக களனி பல்கலைக்கழக தொல்பொருள் அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும், பயிற்சி நிலை நான்கு வைத்திய அதிகாரிகளும், பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் இரண்டாவது நாளாக இணைந்துகொண்டனர்.
...
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை கேலிக்குரியதாகும் – இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிருப்தி
Thinappuyal News -
.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை கேலிக்குரியதாகும் என ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை கேலிக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது’ என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (ஜூலை) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி...
செங்காலன் கதிர்வேலர் சித்திரத்தேரில் சனியன்று பவனி ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இன்று சனிக்கிழமை கதிர்வேலர் சித்திரத்தேரிலேறி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.
கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வரும் மகோற்சவத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கதிர்வேலர் சப்பறத்தில் வெளிவீதி வலம் வந்து காட்சியளித்தார்.
இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு அபிசேகம், வசந்தமண்டபப்பூசைகள் இடம்பெற்று...
முள்ளிவாய்க்காலை குத்தகை எடுத்தவர்களால் மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அவமதிக்கப்பட்டனரா ?
Thinappuyal News -
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு யார் உரித்துடையவர்கள் என்ற சர்ச்சைகளின் மத்தியில் அந்நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்று முடிந்த போதிலும் நடந்து முடிந்த நிகழ்வு பற்றியும் அதனை நடத்தியவர்களின் நடத்தைகள் பற்றியும் பாரதூரமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் நிகழ்வை தாமே நடத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்ட போது இறுதிக்கட்ட போரில் உறவுகளை இழந்தவர்களும், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில்...
வடமராட்சி கிழக்கு மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் கடற்படை புலனாய்வாளர்கள்
Thinappuyal News -
இந்திய மீனவர்களின் றோளர் படகுளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடியும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளன.
இந்திய மீனவர்கள் றோளர் படகுகள் மூலம் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பாவித்து வடபகுதி கடற்பரப்பில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடிப்பதால் மீன் உற்பத்தியாகும் பவளப்பாறைகளும் நீருக்கு அடியில் இருக்கும் தாவரங்களும் அழிவடைவதால் இப்பிரதேசத்தில் மீன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் உள்ளுர் மீனவர்களின் வலைகளை றோளர்...