ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் 40 பேர் அடங்கிய குழு, பிறேசில் சென்றதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி செலவில் 28 பேர் மாத்திரமே ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்றதாகம் அவர் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் குழு தொடர்பில் தான் பயப்படப் போவதில்லை. ஒலிம்பிக் குழு தவறு...
கடந்த 2008-2009 காலப்பகுதியில் தமிழீழ மக்கள் மீது சிங்கள மகிந்த ராஐபக்சே அரசாங்கம் இன அழிப்புப் போரின்போது 'போரை' நிறுத்து என்ற ஒற்றை முழக்கத்தோடு தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் உயர் நீதிமன்ற வளாகத்திலே நீண்ட போராட்டம் நடத்திக் கடும்அடக்கு முறைக்கு ஆளான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவன் என்ற உரிமையோடு 'எழுக தமிழ்' பேரணிக்கு உங்களை அழைக்கின்றேன். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் இனஅழிப்பை சந்தித்துள்ள...
கடந்த ஆட்சியில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளது. இதன்கீழ் தேசிய அரசாங்கத்தின் கழுகு கண்ணில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளார். இவர்கள் கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவராக உள்ளார். இந்நிலையில் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் கம்பஹா, மல்வானை காணி மற்றும் வீட்டை பறிமுதல் செய்யுமாறு கோரி இன்று காலை பூகொட நீதவான் நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பதற்கு பொலிஸ் நிதி மோசடி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் வாகனங்கள் பொதுமக்களின் வாகனங்களுடன் அடிக்கடி மோதிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. அதிக அளவிலான இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்டதில் நிலைகொண்டுள்ளார்கள். இதனால் தமது பொதுத் வேவைகளை பூர்த்திசெய்வதற்கு தினமும் இராணுவத்தினர் வீதிக்கு வருகின்றார்கள். இந்த நிலையில் வீதிக்கு வரும் இராணுவத்தினர் பொதுமக்களுடன் பயணங்களை மேற்கொள்ளும்போது அடிக்கடி மோதிக்கொள்வதால் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெலியின் மகன் ரமித் ரம்புக்வெல கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 6.30 அளவில் கொழும்பு சுதந்திர சதுக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மது அருந்திய நிலையில் ரமித் ரம்புக்வெல. கார் ஒன்றை செலுத்திய அவர், மரம் ஒன்றில் மோதியுள்ளார். இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ரமித், ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுலா ஒன்றின்போது விமானத்தின் அவசரக்கதவை திறக்க முயன்றார் என்ற...
இந்தியாவின் துறைமுக அபிவிருத்திகள் காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று இந்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு துறைமுக விஸ்தரிப்பின்போது இந்திய நிறுவனங்களும் அதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன என்று இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக்கரை துறைமுகங்களின் அடித்தள கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்யும் அது கொழும்பின் துறைமுகத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று இலங்கையில் இருந்து பணி ஓய்வுப்பெற்று நாடு திரும்பவுள்ள...
அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவையும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குப்பற்றிய தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தின் போதே இவர்கள் சந்தித்துக்கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் தற்போது இடம் பெற்றுவரும் மாற்றங்கள் குறித்தும் ஒபாமா தனது வாழ்த்துக்களை நேற்றை தினம் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்திருந்தார். ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை...
இலங்கை கடற்படையினருக்கு திருகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை நிபுணர்கள், பயிற்சிகளை வழங்கியுள்ளனர். அமெரிக்காவின் வெடிபொருள் செயலிழப்பு தொழில்நுட்ப நிபுணர்களே இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. நீருக்கு அடியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடிப்பொருட்களை செயலிழக்கச்செய்யும் வகையிலான பயிற்சிகளே வழங்கப்பட்டதாக அமெரிக்கத்தூதரகம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் செப்டம்பர் 6ஆம் திகதிவரையில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, அமெரிக்கா பசுபிக் கட்டளையகத்தின் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளை இலங்கையின் அதிகாரிகளுக்கு...
ஐக்கிய நாடுகள் சபையின் 33 வது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. குறித்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லங்காசிறியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டார். இதன் போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெறுதியான தீர்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உலகில் நடைபெற்ற முக்கிய போர்களில் இழைக்கப்பட்ட அநீதிகளை தடுக்க தவறவிட்டது போல் இலங்கையில் நடைபெற்ற அழிப்புகளையும் தடுக்க தவறியமை தொடர்பில் பான்...
எழுக தமிழ்!என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு, கிழக்கு இருப்பையுந் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அரசாங்கத்தின் உள்நோக்கம் பற்றி சந்தேகங்களை எழுப்புகின்றன. நாட்டில் எங்கும் புத்தர் சிலை எழுப்ப முடியும், அது எமது சுதந்திரம் என்று சில புத்த பிக்குமார் கூறித்திரிகின்றார்கள். நடைமுறையிலும் சிலைகளையும் விகாரைகளையும் எழுப்பி வருகின்றார்கள். நாடு...