உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விகிதாசார முறைமை அல்லது தொகுதிவாரி முறை ஆகிய ஏதாவது ஓர் முறையில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் காரியாலயத்தில் நேற்று பிரதமரை சந்தித்த போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தப்படும் முறைமை பற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரச்சினை கிடையாது என தெரிவித்துள்ளனர்.
இந்த...
தளவர்வான சுங்கச் சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய சுங்கச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் வெளிநாட்டு சுங்கச் சட்டங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது எனவும் இது இலங்கைக்கு பொருத்தமுடையத்தல்ல எனவும் சங்கத்தின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சுங்கச் சட்டம் உத்தேச திருத்தச் சட்டம் என்பனவற்றை தெளிவாக ஆராய்ந்து எதிர்வரும் மூன்று வாரங்களில்...
தனியார் வைத்தியசாலையில், நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் உடனடியாக மருத்துவர்கள் வெளியேற முடியாது என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், நோயாளிகள் அருகாமையில் மருத்துவர் குறைந்தபட்சம் ஒரு மணித்தியாலங்கள் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான உத்தரவு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சத்திரசிகிச்சையின் போது நோயாளிகள் எதிர்நோக்கக்கூடிய ஏனைய பாதிப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை பொறுப்புடன் செய்தி அறிக்கையிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டமைக்காக நன்றி பாராட்டுவதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சம்பவம் குறித்து...
மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பில்ஆராய்வதாக மலேசியாவின் உதவிப்பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான அஹமட்சாஹிட் ஹிமிடி இதனைத் நேற்று கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
வீசா இன்றி தங்கி இருந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குடிவரவு சட்டத்தின்கீழ் 50 இலங்கையர்கள் வரை மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நாடு கடத்துமாறு இலங்கை ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் உள்ள பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து தொழிலாளர்களை அனுப்பும் திட்டம் குறித்து மலேசிய அரசாங்கம் ஆராயவுள்ளது.
இந்தக்கோரிக்கையை மலேசியாவின் சிம் டேர்பி குழுமம் விடுத்துள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் இருந்து சிறப்புத்தேர்ச்சி பெற்ற மற்றும் ஓரளவு தேர்ச்சிப்பெற்ற பணியாளர்களை தொழில்களில் இணைத்துக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையை தாம் ஆராய்வதாக இலங்கை வந்துள்ள மலேசிய உதவிப்பிரதமர் தெரிவித்துள்ளார்.
டேர்பி குழுமம் இலங்கையில் இருந்து 5000 தொழிலாளர்களை தமது பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக கோரியுள்ளது.
இந்தக்கோரிக்கையை...
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர் நேற்று அவரது தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர்.
இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மூன்றடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேற்படி இரு சந்தேக நபர்களும் நேற்றுக் காலை 8.30 மணி அளவில் சிறையிலிருந்து அவர்களது தாயாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த ஓட்டுமடத்திலுள்ள மலர்சாலை ஒன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.
கடந்த ஜுன் மாதம் 17ம் திகதி சிறைச்சாலை அனுமதியுடன்...
சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வியை எழுப்பி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
போதை வஸ்து தொடர்பான வழக்கின் பிணை மனு மீதான விசாரணை ஒன்றின் போது நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ் குடாநாட்டில் போதை வஸ்து மற்றும் வாள்வெட்டு குற்றங்கள், கோஸ்டி மோதல்கள்,...
குவைத்தில் 8,000 தொழிலாளர்கள் போராட்டம்:3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் தவிப்பு:
தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து குவைத்திற்கு வேலைக்குச் சென்ற 8,000 தொழிலாளர்கள் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தொடர்ந்து 11வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றினர்.
குவைத்தில் உள்ள கராஃபி நேஷனல் என்ற எரிவாயு நிறுவனத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம்...
தாயின் கருவில் உள்ள குழந்தை தன் தாயுடன் விளையாடும் அபூர்வ காணொளி