தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் தேர்தலை நடத்துகின்றனர். வாக்குப் பதிவு முழுவதுமாக விடியோவில் பதிவு செய்யப்படுகிறது. 29 பதவிகளுக்கு 61 பேர்...
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் உள்ள கவர் பிக்சரில் கபாலி பட புகைப்படத்தை வைத்துள்ளார். ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த கதையை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அவர் ட்விட்டரில் சேர்ந்த தினம் ட்விட்டரே அதிர்ந்தது. உலக மீடியாக்கள் அவரது கணக்கில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்ததை பற்றி செய்திகள் வெளியிட்டன. இப்படி அதிரடியாய் ட்விட்டரில் சேர்ந்த ரஜினி அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார். அவர்...
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தில் அனுஷ்கா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறாராம். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் நடிகை அனுஷ்காவும் நண்பர்கள் ஆவர். அனுஷ்கா நடிப்பில் வெளியாகியுள்ள பிரமாண்ட படமான ருத்ரமா தேவியில் அல்லு அர்ஜுன் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ருத்ரமா தேவி பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம்...
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கொலை செய்யுமாறு உத்தரவிட்ட கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் பலம்பொருந்திய முக்கியஸ்தர் ஒரவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எக்நெலிகொட தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை தொடர்பில் இராணுத்தின் மேலும் சில உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு இராணுவ கேர்ணல்கள்...
இந்திய வீடமைப்பு திட்டத்துடன் தொடர்புபட்டிருந்த இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் சிலர்  அதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்காக பெண்களிடம் பாலியல்சலுகைகளை கோரியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை பூர்த்தியாகியுள்ளன. இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த இந்த விசாரணைகள் முடிவடைந்துவிட்டன,விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி ஆராய்வதற்காக நாளை உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது,அதன்போது செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகிகள் தீர்மானமொன்றை எடுப்பார்கள், அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க...
தமிழீழ விுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியம் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி தனது கவனிக்கத் தக்க  பங்களிப்புக்களின் ஊடாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளரானார். 2009 இறுதிப்போரின் பின்னர் முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழினி 2013ஆம் ஆண்டில் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக விடுவிக்கப்பட்டார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக...
தனது பல தசாப்த கால  அலைந்த வாழ்வின் முடிவில்  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா  கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின்  எல்லையோரக்  கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன. ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக, நாடு கடந்து வாழ்பவராக முதிய வயதிலும் தேடப்படும் ஒருவராக  ஆறுதலின்றி சதா அலைந்த...
  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத், ஊடகவிளலாளர் நடேசன், தமிழர் புனர்வாழ்வு கழக உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்த பிள்ளையான் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி வாழைச்சேனை பேத்தாளையில் இரத்ததானம் இன்று இடம்பெற்றது. திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடத்தி சென்று படுகொலை செய்தது திமிலைதீவு வங்கியில் கொள்ளையிட்டது உட்பட பாரிய குற்றங்களை புரிந்த பிள்ளையான் தற்போது...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது பல அதிர்ச்சித் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்யும்...
  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று சனிக்கிழமை தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று காலை 10.30 மணிக்கு மகஸின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,...