பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இதுவரையான தேர்தலில் நிரூபித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இப்போது வாக்குகளைப் பங்கு போடுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. எப்போதுமே,...
யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு கொண்டுவந்த ஆயுத கலாசாரத்தை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பினை முழுமையாக அழிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று விஹாரமகாதேவி உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் விமல்...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஆசனம் ஒன்றை வழங்க ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிள்ளையான் தோல்வியைத் தழுவினால், தேசியப் பட்டியல் ஊடாக அவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்க இணங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலை புலிகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையில் இந்த...
ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச இணையங்கள் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்நிலையில், ஆபாச இணையங்களை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை தொடர்கிறது… இந்த மனு மீது அண்மையில்...
நிதியமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐ. தே. க. வேட்பாளருமான ரவி கருணாநாயக்கவை இலக்கு வைத்து கொழும்பு புளூமெண்டால் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மு. ப. 11.30 அளவில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு இரு சொகுசு கார்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு காரே அடையாளம் காணப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்ட தாக நம்பப்படும் இந்தக் கார் தலங்கம பிரதேசத்தைச்சேர்ந்த...
கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது. காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது. அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும், நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பாதுகாப்பு குறித்து உரிய கவனம் செலுத்துமாறு கோரிக்கை...
யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் மிகவும் முக்கியமானது. அது பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிற்கக் கூடாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பில் பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் பெட்றோல் குண்டு, வாள், பொல்லு மற்றும் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் 2 மாணவர்கள் உட்பட 10 இளைஞர்களை சுன்னாகம்...
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா,சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அண்மையில் மீரிஹானவில் இலக்கத்தகடு மாற்றப்பட்ட வெள்ளை வான் ஒன்றில், கைது செய்யப்பட்ட மூன்று சிறிலங்கா படையினரிடம் இருந்த கைத்துப்பாக்கி, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ துப்பாக்கி என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டதையடுத்தே, அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக இராணுவ...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தேவையான அரசியல் தீர்வுத் திட்டத்தை ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதிக்குப் பின் நிறுவும் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு முன்வைக்கும். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு சீனா நிதி உதவி வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு...
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மீரிஹானவில் அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இலக்கத்தகடு மாற்றப்பட்ட வெள்ளை வான் ஒன்று கைப்பற்றப்பட்டதையடுத்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்ட நடைமுறைகளின் படி, சிறிலங்கா படையினர் வாகனங்களை...