ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரே ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.
  1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை இலங்கையின் புதிய அரசாங்கம் நிறுத்தினால் அதன்மூலம் சீனா பெரும் இழப்புக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்படுகின்றது. சிறிய நாடான இலங்கையில் பக்கத்து நாடுகளான இந்திய மற்றும் சீனாவின் பொருளாதார போட்டித் தன்மை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகர...
  பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை  ஆரம்பிக்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்பிரகாரம் இந்த விபரங்களை திரட்டி தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களின் கவனத்துக்கு சமர்பிக்கும்படி சபை செயலாளர் திலக்...
  நல்லாட்சி எனும் பெயரில் பழிவாங்க வேண்டாம் என பொதுபல சேனா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று காலை பொதுபல சேனா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமாச் செய்துள்ளார். தற்பொழுது பாராளுமன்றில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார். பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான மைத்ரிபால சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டு நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம்...
  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் சற்றுமுன்னர் திறந்துள்ளனர். // Post by Newsfirst.lk. குறித்த களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தததாகவும் வாழைத்தோட்ட பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.   மாநாட்டு மண்டப வளாகத்தில் றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான 23 கொள்கலன்கள்...
  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் எனவும், சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ஆள்கடத்தல்கள், தாக்குதல்கள், படுகொலைகளுக்கு கோத்தபாய ராஜபக்‌சவே பொறுப்பு என எமக்கு...
  பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டிசில்வா நியமிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக சபாநாயகருக்கு தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பங்காளிகளாக 7 கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளின் தலைவர்களான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, விமல் வீரவன்ஸ, டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர்...
  ராஜபக்சே ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதயில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் இருந்த பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அலரி மாளிகைக்குள் புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டமையும் தெரியவந்துள்ளது. புதிய அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று தனது கடமைகளை அலரி மாளிகையில் ஆரம்பித்தார். அதன்பின்னர், மாலையில் தனது கட்சி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதற்கு ஊடவியலாளர்களும்...
  தமிழ் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் இளைஞர்களை புதிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்ய உடன் உத்தரவு பிறப்பிக்குமாறு மேல்நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்ததன் பின்னர்...