சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகளில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வியாழன் மாலையில் இருந்தே சுமார் 800 வரையான காவல்துறையினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய பின்னர், பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கொழும்பு நகரின் வேறு...
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சக்திக்கு முன்னால் அரசாங்கத்தின் சகல திட்டங்களும் தவிடு பெடியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மக்கள் சக்தி இப்படி எழுச்சி பெற்று எழும் என்று அரசாங்கம் எந்த விததிலும் எதிர்ப்பார்த்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். இம்முறை தேர்தலிலும் அரச வளங்களை அதிகளவில் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சித்தது. அதற்காக சில் துணிகள், புத்தர்...
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவை தேர்தல் ஆணையாளர் அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும் என முன்னாள் பிரதமர் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விடும். இதன் பின்னர் அரசியலமைப்புக்கு அமைய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நபர் இரண்டு வாரங்களுக்குள் பிரதம நீதியரசர் அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர்...
தோல்வியை ஒப்புக்கொள்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிற்காக வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. 13 மாவட்டங்களில் எமது கட்சிக்கு வெற்றி கிட்டியுள்ளது. 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பீடு செய்யும் போது கொழும்பு, கண்டி மற்றும் பொலனறுவை...
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியே தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மைத்திரி இன்று ஜனாதிபதியாக பதவியேற்பார் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த...
எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளனர். சட்டம் ஒழுங்கை மீறிச் செயற்படும் தரப்பினருக்கு தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இலக்கத் தகடற்ற வாகனங்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.  
  கண்டி மாவட்டம் - உடுநுவர தொகுதி உத்தியோக பூா்வ முடிவுகள்.    
  கம்பஹா மாவட்டம் - திவுலபிட்டிய தொகுதி உத்தியோக பூா்வ முடிவுகள்.
கொழும்பு மாவட்டம் கொழும்பு கிழக்கு மைத்திரிபால பெற்ற மொத்த வாக்குகள் 35167 மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 16601 கொழும்பு மேற்கு மைத்திரிபால பெற்ற மொத்த வாக்குகள் 23915 மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 6164 கொழும்பு வடக்கு மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 51537 மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 16423  களுத்துறை மாவட்டம் பண்டாரகம மகிந்த ராஜபக்ச பெற்ற மொத்த வாக்குகள் 61199 மைத்திரிபால சிறிசேன  பெற்ற மொத்த வாக்குகள் 48469 களுத்துறை மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 48851 மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 44804 பாணந்துறை மைத்திரிபால சிறிசேன...