நூறுவருடங்களுக்கும் மேலாக தமிழரின் காணிகளாக இருந்துவந்த பல ஏக்கர் நிலப்பரப்பானது வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலையீட்டில் மீள மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட மணவாளன்பட்ட முறிப்பு, கரிப்பட்ட முறிப்பு போன்ற கிராமங்களிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வறுமைநிலையில், ஒட்டுசுட்டான் வாழ் தமிழ் மக்கள் தமது சொந்த காணிகளை துப்பரவு செய்யாத நிலையில், அவற்றை வன இலாகவினர் எல்லையிட்டு தம் எல்லைக்குள் கொண்டுவர முயன்ற நிலையே...
ஈழத்து உறவுகளுடன் புகழிடம் தேடி இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா நோக்கி சென்றவேளை படகில் ஏற்பட்ட பாதிப்பால் குறித்த படகு கடலில் மூழ்கும் அபாயநிலை ஏற்பட்டு தத்தளித்தபோது, அவுஸ்திரேலிய அரசு துரிதமாக செயல்பட்டு பிலிப்பெயின்ஸ் நாட்டு கப்பலில் அவர்களை ஏற்றி துபாய் அரசிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தது. அப்படகில் பயணித்திருந்த அகதிகள் அனைவருக்கும், அகதிகளுக்கான ஐ.நாவின் தொண்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் ஒவ்வொரு நாட்டில் அடைக்கலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் மீதமாகவிருந்த...
மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இல்லையென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவது உறுதியாகியுள்ளது. தேர்தலுக்கான உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு எல்லா மாவட்டத் தேர்தல்கள் உதவி ஆணையாளர்களுக்கும் தேர்தல் திணைக்களத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல்வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  மஹிந்தவை ஹிட்லருடன் ஒப்பிட முடியாது யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்பில் சுமார் 11 இலட்சம் குழந்தைகள் உட்பட 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர் எச்சரிக்கை: சிறுவர்கள், மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்பில் சுமார் 11 இலட்சம் குழந்தைகள் உட்பட 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்   (Hitler guiding a lost child through the forest)        (Der Fuehrer squeezes...
  ஏ9 வீதியின் முறிகண்டி பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார். ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு செல்வதற்காக குறித்த இருவரும் வீதியை கடக்க முற்பட்டபோது யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் அவர்கள் மீது இன்று முற்பகல் 9.45 மணிக்கு மோதியுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.காயமடைந்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். விபத்துடன் தொடர்படைய டிப்பர்...
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53வது படைப்பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவின் நேரடி ஆலோசனைக்கமைய 53வது படைப் பிரிவின் கட்டளைத்...
  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அடுத்தவருடம் நடைபெறவிருக்கின்றது. இதனை முன்னிட்டு அதற்கான சகல ஏற்பாடுகளும் நடத்தப்பட்டுவருகின்ற அதேநேரம், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று இறுதிமுடிவு எடுக்கப்போகின்றார்கள் என்பதில் இழுபறிகள் தோன்றியுள்ளன. இதற்கு முன்னர் ஆட்சியாளர்களாகவிருந்தவர்களை பார்க்குமிடத்து டட்லி சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, ரணசிங்க பிரேமதாஸ, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்பொழுது இருக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ இவ்வாட்சியாளர்கள் அனைவருமே தமிழ் இனத்தினை ஏமாற்றியே அரசியல் நடவடிக்கைகளை...
   வட மாகாணத்தில் 55 பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.   கட்டடத்திணைக்களத்தின் ஊடாக வட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களிலும் 55 பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி 10 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட 20 பஸ் நிலையங்களும், 8 அடி நீளமும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினுடைய வவுனியா மாவட்ட அமைப்பாளரும்இ ஜனாதிபதியின் இணைப்பாளர் சுமதிபால அவர்களேஇ ஜனாதிபதியின் இணைப்பாளர் கிஷோர் அவர்களேஇ அமைச்சின் இணைப்புச்செயலாளர் ஜனாப்.முத்து முஹம்மட் அவர்களேஇ ஆளுநருடைய ஆணையாளர் ஜனாப்.முஹைதீன் அவர்களேஇ நகரசபை உறுப்பினர் பாரி அவர்களேஇ நலின்இ லலித் அவர்களேஇ பிரதேச சபை உறுப்பினர்களான சரூக் உட்பட ஜோர்ஜ் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்களேஇ ஹசன் அவர்களே இன்னும் இங்கு வருகை தந்திருக்கின்ற இணைப்பாளர்களான ஹாரிஸ் உட்பட ஏனைய...
இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடைய 12 வயதான மகன் பாலச்சந்திரன் எனும் சிறுவனுக்கு, இடக்கையால் பிஸ்க்கட்டை காட்டி வலது கையால் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.   நேற்று பாராளுமன்றத்தில் சிறுவர், பெண்கள் தொடர்பான பாராளுமன்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.   அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.   எமது பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் நினைவு நாள் நேற்று மூன்று வருடங்களில் மூன்று தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதனடிப்படையில் எமது கட்சி பாராளுமன்றஉறுப்பினர்களான யோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன்ஆகியோரே படுகொலை செய்யப்பட்வர்களாவர்.   2014.3.15ஆம் திகதி வன்னியிலே தங்களுடைய அண்ணாவை தாருங்கள் என்று கேட்டதற்காக, விபூசிக்காவையும்அவரது தாயாரையும் இராணுவத்தினர் கைது செய்து இன்று வரை விடுதலை செய்யாமல், தாயை பூசாமுகாமிலும், பிள்ளையை அனாதை இல்லத்திலும் வைத்திருக்கின்றார்கள். இதுதான் இவர்கள் கூறும் சிறுவர்உரிமை.   ஒரு தாயும் மகளும் இணைந்து வாழ்ந்த ஒரு குடும்பத்தில் தாயை வேறாகவும் குழந்தையை வேறாகவும் பிரித்துவைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்.   இந்த நிலமை இந்த நாட்டின் ஜனாதிபதிக்கோ இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாகவோ, பாராளுமன்றஉறுப்பினர்களாகவோ இருப்பவர்களுக்கு ஏற்பட்டால் அவர்களது மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதனை ஒருகனம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.   இங்கு உரையாற்றும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமைவழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எம்மைப்பொருத்த வரையில் வட, கிழக்கில் உள்ள பெண்களுக்குசிறைச்சாலைகளைத் தான் வழங்கியிருக்கின்றார்கள்.   போரினால் பாதிக்கப்பட்டு வட,கிழக்கு பகுதியில் 89000 ஆயிரம் விதவைகள் இன்றும் எந்த அடிப்படைவசதிகளும் இன்றி தங்களது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். எந்த சுயதொழிலும் செய்ய முடியாதஅளவிற்கு அவர்கள் மிகுந்த கஷ்ரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.   அது மாத்திரமல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக வட,கிழக்குப் பகுதியில் 40000 ஆயிரம் பேர்இருக்கின்றார்கள். அதில் கணிசமானோருக்கு குழந்தைகள் இருப்பதும் அவர்களை பராமரிப்பதற்குக்கூடஇவர்களால் முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 12770அங்கவீனர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.   இவர்களை இந்த நாட்டு ஜனாதிபதி உட்பட ஏனைய அமைச்சர்கள் எவரும் இதுவரை கண்டு கொள்ளவும்இல்லை. இந்த வரவு செலவுத்திட்டத்தில் இவர்களுக்கு எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.   இலங்கை அரசாங்கம் கூறும் சமாதானகாலப் பகுதியில் அதிகளவான சிறுவர் துஸ்பிரயோகங்கள்இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 546 சிறுவர்துஸ்பிரயோகங்கள் நடைபெற்றிருப்பதுடன் ஒழுக்க சீர்கேடுகளும் அதிகரித்தே காணப்பட்டிருக்கின்றது. ஆனால்யுத்தம் நடைபெற்றகாலத்தில் இவ்வாறான சிறுவர் துஸ்பிரயோகங்கள் குறைவாகவே இருந்தது.   1925ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஒரு நாட்டில் போர்இடம்பெறுமாக இருந்தால் போருக்கு பிற்பட்ட காலத்தில் போர்க்கைதிகளும் போர் செய்த பிரதேசங்களையும்மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என்று இத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கின்றது.   ஆனால் இலங்கை இத்தீர்மானத்தினை முழுமையாக உதாசீனம் செய்திருக்கின்றது. இவ்வாறான விடயங்களைதெளிவுபடுத்துவதற்காக தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றம் சென்று எமது மக்களின்பிரச்சனைகளை எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது எனவும் கூறினார்.   (தில்லை)