யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று காலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பமானது . யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஈபிடிபியினருக்கும் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகழ்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். வடமராட்சி கிழக்கு - அம்பன்...
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில்  இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். கபினட் அமைச்சர்களாக, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ்,...
  மேடியின் சத்தியபிரமாணத்திற்கு பின்னரும் அவரின் கன்னி உரையின் பின்னருமே தமிழ் மக்கள் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கப்பட போகிறது என கூறலாம் தமிழ் நாட்டைப் பொறுத்தமடடில் தமிழ் மக்கள் பிரச்சனையில் தெளிவாக இருக்கிறார்கள் அதையும்மீறி மகிந்தவை இந்திய அரசு அழைத்தது என்பது வர்த்தகம் மற்றும் பிராந்திய நட்புறவில் விரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காய் ஆகவே இது இன்றோடு முடியப்போவதல்ல பொறுத்திருந்து பார்க்கவேன்டி உள்ளது; இருந்தும் இத்தனை எதிர்ப்புக்கள் மத்தியிலும் மகிந்த செல்கிறார் என்பது தமிழ் நாட்டு அரசியல் நமக்கு தேவை அற்ற...
  ராஜபக்ச வருகையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!தடுமாறும் தமிழக கட்சிகள்  மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப் போவது இல்லை என அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவை புறக்கணிப்பதோடு...
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இன்று காலை டெல்லி சென்றடைந்துள்ளார நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதையடுத்து நரேந்திர மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மோடியின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவுக்கு வருவதாக...
.சுற்றிலும் ராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் மனித மிருகம் தீக்கிரையாக்கப்படுவது,  வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையிலும் நம் பலமாகிறது. அதே சமயம், இன அழிப்பு – என்கிற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்துவிடத் துடிக்கும் சமந்தகர்களைப் பார்க்கும்போது, துரோகம் முற்றிலுமாகத் தொலைந்துவிடவில்லை என்கிற யதார்த்தமும் சேர்ந்து அம்பலமாகிறது. ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை - இருதரப்புப் போர் என்று அதைச் சித்தரிப்பது உண்மையைத் திரிப்பது - அது ஓர் இயக்கத்தை அழிப்பதற்கான தாக்குதல் அல்ல, ஓர் இனத்தை அழிக்கத்...
இந்தியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி அவர்களுடைய பதவியேற்பு வைபவத்தில், இலங்கையின் வடமாகாணத்தில் இருந்து யாழ் மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கலந்து கொள்ளவுள்ளார். இந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷச அவர்கள் அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியின் தலைமையில் செல்லவுள்ள குழுவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாகியஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) சார்பில் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களுக்கும்...
நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர். இவ்வாறு அரசுசாரா அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஊடகவியலுக்கான விருதுபெற்ற *Adam Matthews எழுதியுள்ளார்.மே 18, 2009 அன்று...
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆம் சரத்து விடயத்தை செயற்படுத்த, இந்தியா முனையும் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில் 13வது சரத்தை அமுல்படுத்த அவரின் அரசாங்கம் முனையும் என்று கட்சியின் பேச்சாளர் நிர்மலா சித்தாரணம் தெரிவித்துள்ளார். இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுடன் தொலைபேசியில் உரையாடிய நிர்மலா, இலங்கையுடன் அதிகாரப்பரவலாக்கம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசாரம் போன்றவை தொடர்பில் தமது அரசாங்கம், இலங்கையுடன்...
இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையியின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கொபி அனானை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திரியை விசாரணைக் குழுவின் தலைவராக நியமித்து அதன்...