மோட்டோ ஜிபி பந்தயத்தின், ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும். அந்த வகையில் ஆண்டின் 16ஆவது சுற்றான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று டுவின் ரிங் மோடிகி  ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 4,801 கிலோ மீற்றர்கள், பந்தய தூரத்தை நோக்கி, 27 வீரர்கள் மோட்டார்...
தாய்வான் ரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை அந்நாட்டு ஜனாதிபதி டிசை இன்ங் வென் இன்று (திங்கட்கிழமை) சந்தித்துள்ளார். வடகிழக்குத்தாய்வானில் நேற்றைய தினம் ரயில் தடம்புரண்டு இடம்பெற்ற பாரிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 175 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். கடந்த மூன்று தசாப்தங்களில் இடம்பெற்ற பாரிய அனர்த்தம் இதுவெனக் குறிப்பிடப்படுகிறது. குறித்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூடியிருக்கும் இலன் நகரத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டிசை இன்ங் வென் விஜயம் செய்து...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துவதில், பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்து பல்கலைக்கழக சமூத்தினால் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். தென்கிழக்குப் பல்கலைக்ககழக நிருவாகக் கட்டடிடத் தொகுதியை ஆக்கிரமித்து பல்கலைக்கழகத்தின் நிருவாக செயற்பாட்டிற்கு தடையாக...
மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரச அலுவலர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது. பஸ்கொட பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கடமையாற்றும் 44 வயதுடைய ஈ.எச்.சமிந்த தயாரத்ன என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார். இவர் இன்று காலை 9.25 மணியளவில் அகுரஸ்ஸ தோட்டம் வலஸ்முல்ல பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணமாகியுள்ளார். இவ்வாறு சென்றவர்...
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி பயிற்சி வழங்கும் முச்சக்கர வண்டியும், காரும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியா நொச்சிமோட்டையில் இருந்து தாண்டிக்குளம் நோக்கிச் சென்ற சாரதி பயிற்சி நிறுவனமொன்றுக்கு சொந்தமான முச்சக்கரவண்டியும் தாண்டிக்குளம் பகுதியில் வவுனியா நகரில் இருந்து சென்ற காரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியில் பயிற்சியில் ஈடுபட்ட பூனாவையை சேர்ந்த பிரேமவங்ச (வயது 40),...
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியில் 15 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை முச்சக்கரவண்டியொன்றில் எடுத்துச் சென்று கொண்டிருந்த வேளையில் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்துவந்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசாரணைகளூடாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்  30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், பிரதான சந்தேகநபர் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்...
வவுனியா கனகராஜன்குளம் பகுதியிலிருந்து நேற்று இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 7 மணியளவில் கனகராஜன்குளம், மன்னகுளம் பகுதியில் வீதி ஓரத்தில் கைக்குண்டு, மகசீன் அதற்குரிய ரவைகள் 30 என்பன இருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அதனைப்பார்வையிட்டுள்ளதுடன் எவ்வாறு எங்கிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அப்பகுதியில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பெண்கள் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு. ஆனால் சில பெண்களுக்கு இளம் வயதிலே முக அழகினை கெடுக்கும் கரும்புள்ளிகள் ஏற்பட்டு அழகை கெடுக்கும். எனவே இப்பிரச்சனைக்கு உரிய தீர்வை இங்கு காண்போம். எலுமிச்சை சாறு எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றறிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரிக்கும். தேன் தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து...
ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகை கெடுப்பதை போன்று தோற்றமளிக்கும். இன்னும் சிலருக்கு கன்னத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். இது போன்ற பாதிப்புகளை தடுத்து, அற்புத பலனை பெறுவதற்கு, இயற்கையில் உள்ள சில வழிகளை பின்பற்றி வந்தாலே போதும். கன்னங்களின் அழகை அதிகரிக்க என்ன செய்யலாம்? தினமும் அதிகாலையில் எழுந்து இயற்கையாக சுத்தமான காற்றை சுவாசித்தாலே, முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி மற்றும் பொலிவுகள் மின்னும். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு...
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் ரஜினி, அஜித் ஆகியோர். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். இந்த நிலையில் விஸ்வாசம் படம் பொங்கல் ரிலிஸ் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டனர், ஆனால், திடீரென்று தற்போது அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் தலையிலும் இடி விழுந்துள்ளது. ஆம், விஸ்வாசம் படத்துடன் ரஜினி நடித்த பேட்ட படமும் வரவுள்ளதாம், இதனால், பல திரையரங்கங்கள் வசூல் பாதிப்பு அடையும் என அச்சத்தில்...