பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பொது வி‌ஷயங்கள் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்தார். இதனால் அந்த கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேரப்போவதாகவும் தகவல்கள் பரவின. அதனை பிரகாஷ்ராஜ் மறுத்தார். இந்த நிலையில் படப்பிடிப்பில் நடிகையை திட்டி காமெடி நடிகரை பிரகாஷ்ராஜ் அடித்ததாக தகவல் பரவி உள்ளது. திரிநாதராவ் இயக்கத்தில் ஹலோ குரு பிரேம கேசமே என்ற தெலுங்கு படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இதில் ராம்போத்தினேனி,...
இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். மேலும் கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும்போது முதலில் வலி அதிகரிக்கலாம். அத்தகைய மாரடைப்பில் இருந்து முன்கூட்டியே காத்துக் கொள்ள உண்ண வேண்டிய சில முக்கிய உணவுப்பொருட்களைப் பற்றி பார்ப்போம். பூண்டு பூண்டில் உள்ள ஆன்டி-சரஸினோஜெனிக் தன்மை அதிகம் நிறைந்துள்ளதால்...
மிக விரைவில் மீள அதிகாரத்திற்கு வருவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அதிகாரத்திற்கு வந்து அடுத்த 2 வருடங்களுக்குள் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு அனைவரும் ஏற்று கொள்ள கூடிய இணக்கமான தீர்வு ஒன்றைக் காண்போம் என குறிப்பிட்டுள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நேற்று காலை ஊடமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "யுத்தத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர்...
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 171.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர் நிருபர்-   வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை அதிகரிக்கும் அதேவேளையில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாறான ஹோட்டல்கள் மிகுந்த கவனத்துடன் கட்டப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபை மற்றும் மன்னார் பிரதேசசபை ஆகியவற்றின் நிதிப்பங்களிப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரைப்பூங்கா சுற்றுலா மையத்தை நேற்று புதன் கிழமை (3) மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்த...
மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புதிய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரித்வி சா தனது முதலாவது டெஸ்டிலேயே அரைசதமடித்து சாதனை புரிந்துள்ளார் பிரித்வி சா 56 பந்துகளில் ஏழு பவுண்டரிகளின் துணையுடன் தனது அரைசதத்தை பெற்றார் இதன் மூலம் மிகக்குறைந்த வயதில் டெஸ்;ட் போட்டிகளில் அரைசதம் பெற்ற ; இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரித்வி சா நிகழ்த்தியுள்ளார். விஜய் மெஹ்ரா என்ற வீரர் 1956 இல்...
விஷால் எப்போதும் சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு குரல் கொடுப்பவர். அப்படியிருக்க அவர் மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். அதன் ஒரு சில எபிசோட் முடிய, நடிகர் கார்த்தியும் இதில் கலந்துக்கொண்டார், அதன் ப்ரோமோ வீடியோக்கள் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சொல்வதெல்லாம் உண்மை போல் தெரிந்தாலும், இவை அப்படி இருக்காது. இந்நிகழ்ச்சி முற்றிலும் வித்தியாசமானது என்று விஷால் தெரிவித்து, அந்த ப்ரோமோவை ஷேர் செய்துள்ளார். இதோ... https://twitter.com/VishalKOfficial/status/1047697564206678016
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் சீமராஜா, நயன்தாராவின் இமைக்கா நொடிகள் போன்ற படங்களின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது போல தற்போது விஜய் சேதுபதியின் 96 படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேடிஎம் பிரச்சனையால் 96 படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் படத்தை பார்க்க தியேட்டர் சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்துள்ளது. பிரச்சனை முடிந்து காலை காட்சிகள் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரத்தை சேர்ந்த முத்தையா என்பவர் பிரபல சின்னத்திரை நடிகை மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். அதாவது கடந்த 29ம் தேதி இரவு இன்ஸ்பெக்டர் தாம்சன், தாம்பரத்தை சேர்ந்த சிறுத்தை பாண்டியன், அவருடைய மனைவியும், டி.வி. நடிகையுமான சஜினி மற்றும் ரவுடிகள் பலர் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, என்னை மிரட்டி, ரூ.10 லட்சம் காசோலையை வாங்கிச்சென்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார், பணம் கொடுக்கல்...
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் பயணம் செய்வதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது எது என, அமெரிக்க விண்வெளி மையமான நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நாசா உட்பட பல விண்வெளி ஆய்வு மையங்கள் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக 2039ஆம் ஆண்டுக்குள், விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்க வைக்க முடியும் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கான திட்டத்தில் நாசா நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருகிறது. ஆனால்,...