ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் காணாமல் போனமையால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவத்தை அடுத்து அண்மையில் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 9ஆம் திகதி பதகிரிய நெல் களஞ்சியசாலையில் இருந்து 80 மூட்டைகள் நெல்லினை திருடியமை தொடர்பிலேயே...
‘காக்காமுட்டை’ படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். இந்தி படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு இயக்குனர் தனது படத்தில் ஒரு குத்து டான்ஸ் ஆடும்படி கேட்டுள்ளார். இதற்கு பெரிய தொகை கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஐஸ்வர்யா இதற்கு சம்மதிக்கவில்லை. இயக்குனரை திருப்பி அனுப்பிவிட்டார் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிகம, மிரிஸ்ஸ பகுதியில் அவுஸ்திரேலிய பெண்ணொருவரின் காலில் கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த கைப் பையை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த அவுஸ்திரேலிய பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில், 23 வயதான அவுஸ்திரேலிய பெண்ணொருவர் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மேட்டார் சைக்கிளில் வந்த நபர்,...
நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், விமல் வீரவன்ச ரொஹான் ரத்வத்தேயின் சகோதரர் ஆகியோர் நாட்டுக்கு செய்த சேவை மறக்கப்பட்டுள்ளது. மேலும், அனுருத்த ரத்வத்தே மற்றும் விமல் வீரவன்ச போன்றோர் நாட்டுக்கு...
வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள மிகப் பெரிய பிரச்சினை ஜாதி, பேதம் என ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த நிலைமை மிகவும் பாரதூரமாக மாறியுள்ளதாகவும் ஜாதி, பேதம் காரணமாக ஆதரவற்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் விதம் மிலேச்சத்தனமாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் காணப்படும் ஜாதி, பேதங்கள் பற்றி பலர் பேசுவதில்லை. வடக்கில் தற்போது மீண்டும் ஜாதி, பேதம் தலைத்தூக்கியுள்ளது. கிணற்றில் தண்ணீர் அள்ளவும் மாயானத்தில்தமது சடலங்களை புதைப்பதற்கும் தற்போது ஜாதி தடையாகியுள்ளது...
யார் இந்த பேரறிவாளன்? எங்கிருந்து வந்தார்? ஏன் சிறைவாசம் அனுபவிக்கின்றார்? அப்படி என்ன குற்றம் செய்தார்? எப்போது விடுதலையாவார்? இவருடைய விடுதலையைப் போன்றே இவர் பற்றிய கேள்விகளும் நீண்டு கொண்டே செல்கின்றன. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரே இந்த தமிழ் மகன். விசாரணைக்காக 1991ஆம் ஆண்டு அழைத்துச் சென்ற பேரறிவாளனின் வாழ்வு அன்றுடன் அஸ்தமனமானது. அன்றிலிருந்த இன்றுவரை அவர் வாழ்வில் சந்தித்த...
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று காலை மக்கள் பேருந்தினை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா - ஆசிகுளம் வழியில் குறித்த பேருந்து போக்குவரத்தானது தமது கிராமத்தினூடாக சரியான நேரத்தில் பயணிப்பது இல்லை. இதன் காரணமாக அவ்வழியூடாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் காலையில் பணிகளுக்கு செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆச்சிபுரம் மக்கள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் பாடசாலை நிறைவடைந்து மாணவர்கள் வீடு திரும்பும் போது தங்கள் கிராமத்தினுள்...
போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நான் அல்ல என மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கமல் குணரட்ன போர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… அண்மையில் வெளியிடப்பட்ட நூலின் ஊடாக எந்தவொரு போர் இரகசியங்களும் அம்பலப்படுத்தப்படவில்லை. நான் போர் இரகசியங்ளை வெளியிடும் படைவீரனல்ல. போர் இரகசியங்கள்...
பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து மதுகம நோக்கி பயணித்த பேருந்துடன் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் வாகனம் வழித்தடம் மாறிச் சென்று பேருந்துடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் 4...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. செஞ்சிலுவை சங்கத்தால் 'சிரிலிய சவிய' வேலைத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட டிபென்டர் ரக வாகனத்தின் நிறத்தை மாற்றி அதனைத் தனிபட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை இரகசியப் பொலிஸார் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நிசாந்த பீரிஸிடம் கோரியுள்ளனர். WPKA-0642 என்ற இலக்க தகட்டினை கொண்ட குறித்த வாகனம்...