லண்டனில் மிகவும் பிரமாண்டமாக வோல்தம்ஸ்டோ பிள்ளையார் ஆலய தேர் திருவிழா இன்று இடம்பெற்றது.
லண்டனின் பல மாகாணங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டதுடன், தாயகத்தின் நினைவுகளை மீட்டுபார்க்கும் அளவில் அங்கிருந்த புறச்சூழல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பறவைக் காவடி, அங்குள்ள அனைவரையும் கவனித்து ஈர்க்கும் வகையில் இருந்ததுடன், பலரும் பக்தி பரவசத்துடன், தேர்த்திருவிழா உற்சவத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் புதிதாக பனம் யோகட் அறிகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குறித்த யோகட் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
40 ரூபா விலையுள்ள 80 கிராம் நிறையுடைய இந்தப் பனம் யோகட்டை , இயற்கை உணவை விரும்பும் பலரும் ஆர்வமுடன் வாங்கிச் சுவைத்து வருவதை...
பிரித்தானிய இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக பரபரப்பு தகவல்
Thinappuyal -
பிரித்தானிய இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் திருமணம் செய்துக்கொண்ட நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் அவர்களது செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இதுமட்டுமில்லாமல், இருவரும் அடிக்கடி ஒருவரைக்கொருவர் குறைக் கூறிக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவில்லை என்றும் செய்திகள் வெளியானது.
இச்செய்திகளை தொடர்ந்து...
இந்தியாவின் காட்டுமன்னார் கோவில் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர் என தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
இவர்கள் மாநிலம் முழுவதும் 107 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில் ஆகிய முகாம்களில்...
நம்மில் பெரும்பாலானோருக்கு விமானம் என்பதே அத்தனை சிலிர்ப்பை கொடுக்க கூடியது.
பள்ளி நாட்களில் ஆசிரியர் மும்முரமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது.விமான சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்தவர்கள் நிறைய பேர் இருப்போம்.
இன்றைய திகதியில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் எவை என தெரியுமா?
மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஏ என் - 225 மிரியா பற்றியும் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ்-380 பற்றியும் சில தகவல்கள்.
அன்டனோவ் ஏ.என்225 மிரியா
சோவியத் கூட்டமைப்பில்...
திருகோணமலையிலிருந்து கொழும்புபை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான சிவஞான வடிவேல் அனோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் 2009 கொடூரம்: அரசபயங்கரவாதம்-தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை
Thinappuyal News -
1810ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து 320கி.மீட்டர் தொலைவிலுள்ள டாஸ்மேனியா தீவின் கரையில் நாடுபிடிக்கும் ஆசையில் நுழைந்த இரண்டு வெள்ளையர் கப்பல்கள் அங்கிருந்த 5000க்கும் மேற்பட்ட அம்மண்ணின் பூர்வ குடியினர்களை கொன்று குவித்தனர். தாங்கள் எதற்காகச் சாகிறோம் என்பதே தெரியாமல் அந்த இனம் கொல்லப்பட்டது.
1828ம் ஆண்டு 5000பேராக இருந்தவர்கள் வெறும் 75 பேராக மிஞ்சியிருந்தார்கள். அதில் மூன்றுபேர் மட்டும் பெண்கள். டாஸ்மேனிய இன அழிப்புக்கு எதிராக உலகம் குரல் எழுப்பியது. எனவே...
ஒலிம்பிக்கில் போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு நேர்ந்த அவலம்…! அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு
Thinappuyal -
ஒலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிம்பாப்வே நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 31 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். எனினும், எவ்வித பதக்கமும் பெற்றுக்கொள்ளவில்லை.
அத்துடன், எந்த வீரரும்...
தன்னை கொன்றவர்களை வருகிற அமாவாசை அன்று பழிவாங்க போகிறேன் என சுவாதியின் ஆவி தன்னிடம் கூறியதாக ஆவி அமுதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாதியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன, தற்போது லேட்டஸ்டாக கிளம்பியுள்ள தகவல் "சுவாதியின் ஆவி".
ஆவி அமுதன் என்பவர், கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஜெயலலிதாதான் முதல்வர் என்று எம்.ஜி.ஆர் ஆவி தன்னிடம் கூறியதாக பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அதேபோல், ஆப்ரஹாம் லிங்கன்,...
சென்னையில் குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டி பொலிஸ் வாகனம் மீது விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண்விஜய் பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாகியுள்ளார்.
நடிகர் அருண் விஜய் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகை ராதிகாவின் மகள், கிரிக்கெட் வீரர் மிதுன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவி ஆர்த்தியுடன் கலந்து கொண்டுள்ளார்.
இதில் அருண்விஜய் அதிகமாக குடித்துவிட்டு செம போதையில் அதிகாலை, 3:00 மணிக்கு, தன் மனைவி...