சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு விஸ்கி ரக மதுபானம் உற்பத்தி செய்த சிவில் பொறியியலாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதிஉயர் ரக வெளிநாட்டு விஸ்கி ரகம் என்ற போர்வையில் போலியாக தயாரிக்கப்பட்ட இந்த கலப்பட கள்ளச் சாரயம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கந்தானை பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் இந்தபோலி கள்ளச் சாராய உற்பத்திசாலை நடத்தப்பட்டுள்ளது.
போலியாக உற்பத்தி செய்யப்பட்ட மதுபானம் அடங்கிய 200 போத்தல் மதுபானம் மற்றும்...
வடமாகாணத்தின் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் போருக்குப் பின்னரான வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் பாதைகளின் அபிவிருத்தி முக்கிய அம்சமாக இடம்பெற்றிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் பாதைகள் அபிவிருத்தி செயற்திட்டமொன்றை உள்ளூராட்சி,மாகாண சபைகள் அமைச்சு முன்னெடுத்திருந்தது.
இச்செயற்திட்டத்தின் கீழ் இதுவரை 3363 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக தற்போது அமைச்சின் புள்ளிவிபரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
வடமாகாணத்தில் உள்ள...
இன்றைக்கு 26ஆண்டுகளுக்கு முன்னர் 1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் செப்டம்பர் ஒக்டோபர் மாதங்கள் என்பது கிழக்கில் இரத்த ஆறு ஓடிய காலப்பகுதியாகும்.
இந்த படுகொலைகளை செய்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரும், விடேச அதிரடிப்படையினரும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும், இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்தியங்கிய புளொட் போன்ற தமிழ் குழுக்களும் தான்.
சில தமிழ் கிராமங்களின் மீது ஆயுதம் தரித்த முஸ்லீம்களும் இத்தாக்குதல்களில் ஈடுபட்டனர். காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் விடுதலைப்புலிகள் தாக்குதல்...
எதிர்வரும் 2017ம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இது தொடர்பிலான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற மஹாவலி அபிவிருத்தி அமைச்சு அபிவிருத்திக் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
அரசாங்கத்துறை, தனியார்துறை, அரச சார்பற்ற அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து இந்த நோக்கத்தை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
வறுமை ஒழிப்பு பற்றி பேசும் போது சமூர்த்தி மற்றும் திவிநெகும...
பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த ஞாயிறு (28.08.2016) அன்று மதியம் 12 மணியிலிருந்து 4 மணிவரை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்திருக்கும் No10, Downing Streetஇல் நடைபெற்றது. அதில்,
☆ புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 105 போராளிகளது சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
☆ ஏழு ஆண்டுகள் கடந்தும் காணாமல் போனோர் பற்றிய ஆரோக்கியமான நம்பகத்தன்மையுடைய விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
☆...
இலங்கை பிரஜைகள் அனைவரும் நாட்டில் தமக்கு விரும்பிய எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கும், வாழ்வதற்குமான உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சில இனவாதிகளின் இனவாத கருத்துகளுக்கு பதில் தர வேண்டியது அவசியம் இல்லை என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில் தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.
வெளிமாவட்டங்களில் இருந்து வடக்கில் குடியேறுபவர்களுக்கு தாம் எதிர்ப்பினை...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை (29.09.2016) தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்பே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய மக்கள்...
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகள் என்றவிடயம் ஆராயப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இந்த நீதிவிசாரணைகள் உள்ளக முறையிலேயே மேற்கொள்ளப்படும்.
எனினும் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்கள் சிலரை நேற்று தமது அமைச்சில் சந்தித்த அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
இந்த முயற்சிகளுக்கு இந்தியா அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என்றும்...
பலவந்தமான முறையில் 260 பயணிகளை அழைத்து செல்ல ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானி முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் ஜேர்மன் பிராங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமாக சென்றடைந்தது.
குறித்த விமானத்தை செலுத்த தயாராக இருந்த விமானி கடும் குடிபோதையில் இருந்தமையால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குடிபோதையில் இருந்த...
நல்லெண்ண விஜயமாக அமெரிக்க கடற்படை கப்பல் "யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்" இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதன் போது அமெரிக்க கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
இதனையடுத்து "யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்' கப்பலின் கேப்டன் ட்ரூ செயின்ட் ஜான் மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.
இதேவேளை, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள "யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்" எதிர்வரும்...