வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் 14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயதான இளைஞனை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் - மாம்புரி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாணவியின் மூத்த சகோதரி செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். முறைப்பாடு செய்த 21 வயதான தனது மூத்த சகோதரியுடன் 14 வயதான பாடசாலை மாணவி...
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயதுடைய பிரேம்குமார் டனுஜன் எனும் சிறுவன் தலையில் நரம்பியல் நோயினால் பீடிக்கப்பட்டு பொரளை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான். இச்சிறுவனுக்கு அவசரமாக தலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூபா 1,500,000 (பதினைந்து இலட்சம்) தேவைப்படுவதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஏழ்மைப்பட்ட இச்சிறுவனது குடும்பத்தார் பரோபகாரிகளிடமிருந்து சத்திர சிகிச்சைக்கான பணத்தினை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க...
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி (Brand) தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கியுள்ளது. இதனடிப்படையில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக ஒரு வருடத்திற்கு இவர் ஆக்கக்குறி தூதுவராக பணியாற்றுவார் என அமைச்சு கூறியுள்ளது. ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி இந்த பதவி வழங்கப்பட உள்ளது. இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 2017 ஆகஸ்ட் 19ஆம்...
பலமுறை கண்டித்தும், கள்ளக்காதலை கைவிட மறுத்த, தனது கணவனை, அவரது மனைவியே கத்தியால கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் சென்னை மண்ணடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்ணடி பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருபவர் அக்பர் (49). அவரது மனைவி பாத்தாமுத்து (35). அவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகள் மற்றும் பாடசாலையில் படிக்கும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். அவர்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3...
‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு தளத்தில் கெளதமியுடன் கருத்து வேறுபாடு குறித்த செய்திக்கு ஸ்ருதி ஹாசன் தப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியது. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பை கமலே...
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், தற்போது தங்களிடம் பிடிபடும் கைதிகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்த ஐ.எஸ், தற்போது ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிக்கும் நபர்களை மனிதாபிமானமின்றி கொதித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தார் டேங்கில் தூக்கிப் போட்டு கொல்லும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் ஷரியா நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னர், ஈராக்கின், மொசூல் நகரில் 6...
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரியுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் சூழலில் சிங்கள மக்களோ அல்லது பௌத்த மத்த்தினைப் பின்பற்றுபவர்களோ யாரும் அற்ற பிரதேசத்தில் தமிழ் மக்கள் பரம்பரையாகக் கொண்ட பகுதியை ஆக்கிரமித்து பிரமாண்ட பௌத்த விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரை கடந்த சிவராத்ரிரி தினத்தன்று இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்காக 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது....
சர்வதேச போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 12.8 கோடி பெறுமதியான ஹரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இவர் படகு மூலம் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு...
நீங்கள் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லையா? வீட்டில் சந்தோஷமே இருப்பதில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கக்கூடாத சிலவற்றை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். இங்கு வீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் அவை இருந்தால், உடனே அவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போம். துளசி செடி துளசி ஓர் புனிதமான செடி. இது வீட்டில் அமைதியையும்,...
இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது அரங்கேறுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு விநாயகர் பால் குடித்தது, சமீபத்தில் அம்மன் கண் திறந்து பார்த்ததால் பரவசத்தில் மூழ்கிய மக்கள்... இவையெல்லாம் நிச்சயம் நமது நம்பிக்கைக்கு மீறியதாகும். தற்போது நீங்கள் காணும் காட்சியும் அப்படிப்பட்ட ஒன்றாயிருக்கிறது. பாம்பு ஒன்று 17 ஆண்டுகளாக சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும்...