இலங்கையில் 30வருட காலப் போராட்டம் 18.05.2009 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் இன்று போர் முடிந்துவிட்டது. போர்க்குற்ற விசாரணைகள் துரித கதியில் விசாரிக்கப்படவேண்டும் எனக்கூறிக்கொள்ளும் அமெரிக்கா, போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக பின்னணியில் செயற்பட்டதும், காலத்திற்குக்காலம் தனது அரசியல் நகர்வுகளை மாற்றியமைத்தும் வருகின்றது என்பதே உண்மை. சீனாவின் தலையீடின்றி இலங்கை தேசத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும்...
உலத்தமிழர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) அவர்களுக்கு நாடுகடந்த தழிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத்தமிழர் தேசத்தின் விடுதலையின் குரலாக, களப்போராளியாக பன்முக ஆளுமை நிறைந்தவராக தமிழினி அவர்கள் விளங்கியிருந்தார். பாடசாலை காலங்களிலேயே இனத்தின் மீதான, மொழியின் மீதான...
சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.சிங்கப்பூருக்குச் சென்றிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த நாட்டில் இருந்து வெளியாகும், Straits Times நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது. கேள்வி:சிங்கப்பூர் பயணம் குறித்து? பதில்: நான் சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினேன். பிரதி பிரதமர்...
 பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடாபிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்வது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சட்டத்தரணிகள் இது குறித்த ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆணைக்குழுவில் நான்கு உயர் நீதிமன்ற நீதவான்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை,...
 இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலூனய்வுப் பிரிவு பணிப்பாளர்ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா எக்நெலிகொட, நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அட்கொனர்வு மனு விசாரைணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 2010ம்...
சூர்யா தற்போது ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் வெளிவரவிருக்கும் பசங்க-2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய சூர்யா ‘இந்த படம் என் வாழ்வில் மிகவும் ஸ்பெஷலான படம், 36 வ யதினிலே படத்திற்கு பிறகு நான் தயாரிக்கும் ஒரு படம். இப்படத்தில் பாண்டிராஜ் என்னை இயக்கும் போது நான் ஏன் நாகேஷ், ஜிம்கேரி, ராபின் வில்லியம்ஸ் போல்...
 இந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும்முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர். அந்த வகையில் இவர் தற்போது அகிரா என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா முக்கியமாக கதாபாத்திரத்தில் நடிக்க, அடுத்து முருகதாஸ் தெலுங்கு படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் ஹீரோவாக மகேஷ் பாபு நடிக்க, ஹீரோயினாகஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளார்களாம். ஸ்ருதி ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் நடிப்பில் வெளிவந்த மாரி எதிர்ப்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. இதனால் தன் வெற்றிக்கூட்டணியான விஐபி டீமுடம் இணைந்து உருவாக்கியுள்ள தங்கமகன் படத்தை எப்படியாவது ஹிட் அடித்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்த நிலையில் டீசர் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படம் டிசம்பர் 18ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதே நாளில் தான் உதயநிதி நடித்த கெத்து படமும் வரவிருப்பதாக கோலிவுட்டில்...
நடிகர் சங்க தேர்தல் நடந்த முடிவதற்குள் பல நடிகர், நடிகைகளுக்கு இடையே பிரச்சனை வந்து விட்டது. இந்நிலையில் பாண்டவர் அணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தவர் ராதிகா சரத்குமார். நேற்று சரத்குமார் அணி தோல்வியடைய ராதாரவி, சிம்பு, ராதிகா என அந்த அணியை சார்ந்த பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், ராதிகா தன் டுவிட்டர் பக்கத்தில் அனைத்தையும் மறந்து பாண்டவர் அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர்பாத்திமா பாபு. இவர் ஒரு சில படங்களிலும் தலையை காட்டியுள்ளார். சமீபத்தில் ஆளுங்கட்சியை சார்ந்த நடிகர், நடிகைகள் தங்கள் விருப்பப்பட்ட அணிக்கு வாக்களிக்கலாம், ஆனால், வாக்கு சேகரிக்க எங்கும் செல்லகூடாது என கட்சி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் வேலைப்பார்க்கும் இவர்சரத்குமார் அணியுடன் ஓட்டு சேகரிக்க சென்றது பெரும் அதிருப்தியை ஏற்பத்தியுள்ளதாம். இதனால், அந்த தொலைக்காட்சியில் இருந்து இவரை நீக்கி விட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.