லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் எக்நெலிகொட கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடத்திச் செல்லப்பட்ட எக்நெலிகொட வெலிகந்த மனம்பிட்டி என்னும் இடத்தில் காணப்பட்ட இடைக்கால இராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட எக்நெலிகொடவின் சடலம், திருகோணமலை கடற்பரப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்களை இதனைக் குறிப்பிட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட எக்நெலிகொட முன்னதாக சொரிவில பிரதேச சகதி குழியொன்றில் புதைக்கப்பட்டதாகவும்...
போதைப் பொருள் வர்த்தகர் முஹமட் சித்திக் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது பற்றி கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் அறிவித்துள்ளனர். சித்திக்கின் மனைவியினது கணக்கில் சிலர் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும் இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இன்டர்போலும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனைவியின் கணக்குகளை சித்திக்கே முதலில் பயன்படுத்தி வந்ததாகவும் பின்னர் மனைவி பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பாகிஸ்தானில் வைத்து சித்திக்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் குக் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 523 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதில் 5 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த மாலிக் இரட்டை சதம் அடித்தார். அவர் 24...
டோனி, கோஹ்லி உள்ளிட்ட இந்திய வீரர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் புஜாரா. இந்தூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 18ம் திகதி ராஜ்கோட்டில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி ராஜ்கோட் சென்றுள்ளது. அங்கு தான் புஜாராவின் வீடும் உள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 251 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 2 விக்கெட்டுக்கு 250 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 135 ஓட்டங்களுடனும், சந்திமால் 72 ஓட்டங்களுடனும் களத்தில்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கு சச்சின், டோனி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஜாகீர் கான். தொடர்ந்து காயத்தில் சிக்கித் தவித்த அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. இந்நிலையில் நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜாகீர்கான் மும்பையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஜாகீர்கானுக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங்...
  பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களே சுதந்திரமாக சுற்றும் பொழுது அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை! பொன்சேகா பங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே வெளியில் சுதந்திரமாக நடமாடும் பொழுது வெறுமனே சாதாரண கைதிகளை அரசியல் கைதிகள் என்று அடைத்து வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை  தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நீண்டகாலமாக சிறைகளில் வாடும் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றைனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும்...
    இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அங்கு நடைபெற்று வந்த உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்ட சுமார் 10 ஆண்டுகளாக சமாதானத் தூதுவராக செயல்பட்டவர், நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹெயிம் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டி   சமீபத்தில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றி உங்கள் கருத்து என்ன ?   இது,இலங்கைக்கு சாதகமான நடவடிக்கை என நான் நம்புகிறேன்.அந்தத்...
    இது எங்கள் ஏரியா, நீங்கள் இங்கு கால்வைக்க கூடாது என ரெலோ அமைப்பினரை விடுதலைப்புலிகள் எச்சரித்த சம்பவம் ஒன்று கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில் சம்பந்தப்பட்ட பல தரப்பையும் தொடர்பு கொண்டு முழுமையான தகவலை இங்கே வெளியிடுகிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா வந்திருந்த ரெலோ அமைப்பை சேர்ந்த...
  பல ஆண்டுகளாக சிறையில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தற்பொழுது தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வரும் நிலையில அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அவர்களின் விடுதலை செய்யக்கோரி இன்று கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சிறையில் உள்ள கைதிகளின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இதில் மனித உரிமை ஆர்வலர்கள் மதகுருக்கள் கைதிகளின் உறவுகள் காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் பிரமுகர்கள்...