நியூசிலாந்தின் சமூக ஆர்வலர், செயற்பாட்டாளர், தமிழ் பற்றாளர்  ஆறுமுகம் தேவராஜன் காலம் ஆனார்.  நியூஸிலாந்து தமிழ் மூத்த பிரசைகள் சங்கத் தலைவராக இருந்த ஆறுமுகம்  தேவராஜன் தமிழ் புலம்பெயர் அகதிகள் தொடர்பாக குரல் கொடுத்து வந்தவர். தமது தள்ளாத வயதிலும் தமிழர் உரிமை பற்றியும் புலம் பெயர் தமிழரின் வதிவிடக் கோரிக்கை தொடர்பாகவும் குறிப்பாக அகதி அந்தஸ்து கோரிக்கை விடுப்பவர்கள் விடயங்களில் நியூ சீலந்து அரசு முதல் சர்வதேச மனித...
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதில் சிக்கல் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநான் சுதந்திரமாக இருக்க முடியுமானால் ஏன் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நெத்தலிகளை பிடிப்பதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனவே அவர்களுக்கு நியாயம்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சம உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னாள் ஜனாதிபதி மாளிகை வரையில் நடைபயணமாக சென்றனர். இதில் கலந்துகொண்ட சிலருக்கு மாத்திரம் ஜனாதிபதியின்...
தம்மை விடுவிக்கக் கோரி, வெலிகடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகளில் ஆறு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது. தமது விடுதலை குறித்த கோரிக்கையை முன்வைத்தே இவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதன்படி கொழும்பு மெகசின் சிறைச்சாலை, அனுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் களுத்துறை ஆகிய சிறைகளில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம்  குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் காலை 9.00 மணிக்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார விளம்பரங்களுக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் வாக்கு மூலமொன்றை பதிவு செய்ய ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக முன்னாள்...
முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்றம் நடைபெற்று வரும் நிலையில் அதனை பார்வையிடச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் குடியேற்றவாசிகளாால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களே இவ்வாறு அச்சுறுப்பட்டுள்ளனர். முல்லைத்தீவுப் பகுதியில் காடுகளை அழித்து அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் குடியேற்றம் இடம்பெற்றுவருகின்றது. இங்கு குடியேற்றமும் காடழிப்பும் சட்ட வரம்புகளை மீறி நடைபெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொத்தம்பியா கும்பம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தேக்குமரக்காட்டினை அழித்து குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக...
  2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக உழைத்தனர். தமது உறவுகளுடன் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என தமிழ் மக்கள் நம்பினர். பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தில் விடுவிக்கப்படாதத்திற்கு பொது தேர்தலை காரணம் காட்டினர் இந்த நல்லாட்சி அரசினர். இன்று அரியணையில் ஏறிய பின் அவர்கள் தங்கள் பழைய மேலாதிக்க சிந்தனையை உறுதிப்படுத்தும் முகமாக  செயல்பட்டு வருவது கவலைக்குரியதாகும். இன்று ஐ.நா மன்றத்தையும்...
  நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, எதிர்வரும் 16.10.2015 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ அறிவித்துள்ளது. காலை 7.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை நடத்தப்படவுள்ள குறித்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் பிரஜைகள்...
  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் இவர் செய்த படு கொலைகள் கடத்தல்கள் கப்பம் பெறல் தொடர்பில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறும் விசாரணையாளர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்த...