கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பான மர்மம் நீங்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுக்களுடன், இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரபணு ஒத்துப் பேவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சேயா சிறுமியின் தந்தை மற்றும் சமன் ஜயலத் ஆகியோரின் மரபணுக்கள் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கொண்டயா எனப்படும் துனேஸ் பிரியசாந்த என்பவரின் சகோதரரே இந்த சமன் ஜயலத் என்பவராவார்.
துனேஸ் பிரியசாந்தவின் மரபணு...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
சம உரிமை இயக்கத்தினாரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இப்போதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு! , இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! என அந்த சுவரோட்டியில் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதனால் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நிதவானிடம் கோரியிருந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, நவம்பர்...
காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 7.00 மணி
இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நுhலகத்திற்கு அருகாமை)
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்த்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. அது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு.
ஊடக அறிக்கை
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள...
அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
Thinappuyal -
அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயாஸ்தானிகர் ரிம் ஹிக்கிஸ் தலைமையிலான பிரதிநிதிகள்இ பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியை சந்தித்துள்ளனர்.
இரு தரப்பு உறவுகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
முன்னாள் படைத்தளபதிகளிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த முக்கிய படைத் தளபதிகள் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராஜதந்திர சேவையில் ஈடுபட்டிருந்த போது, மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் காலங்களில் இவ்வாறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சாந்த கோட்டேகொட, முன்னாள் விமானப்படைத்...
அஜித்தின் கட் அவுட்டிற்கு மாலை அணிவிப்பது போன்றும், பால் அபிஷேகம் செய்வது போன்றும் இதுவரை நிறைய படங்களில் பார்த்திருப்போம்.
தற்போது முதன்முறையாக மலையாளத்தில் பிருத்விராஜ்நடித்துவரும் பாவாடை படத்திற்கு அந்த நிகழ்வு நடத்துள்ளது.
இந்த படத்தில் பிரித்விராஜ் இளையதளபதி விஜய் ரசிகராக நடித்து வருவதாகவும், விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் முதல்நாள் முதல் காட்சியின்போது திரையரங்கில் பிரித்விராஜ் விஜய்யின் கட் அவுட்டிற்கு மாலை அணிவிப்பது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் செய்திகள்...
அஜீத்தின் வேதாளம் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் கடந்த வாரம் வெளியானது.
இந்த இரண்டுமே சமூக வலைதளங்கள் அனைத்திலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று இந்த படத்தின் பாடல் டீசர் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை இப்படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
தெறிக்க விடலாமா டீசருக்கு பின்னர் தரலோக்கல் பாடல் டீசரை கேட்டு மகிழுங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் பெரும் மகிழ்ச்சியில் உள்ள...
தன்னால் இப்படியும் கூட சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும் என நிரூபித்தி அசத்தியவர், காக்கா முட்டையில் சிறுவர்களுக்கு தாயாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது குஷ்புவின் தயாரிப்பில் ஹலோ நான் பேய் பேசுகிறேன்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து உதயநிதிதயாரிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக, நடித்து வருகிறார்.
அதன் பின்னர் ஆறாது சினம் என்னும் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இரண்டு படங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்து...
கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியான விஜய்யின் புலி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வந்தது. இது ஒரு புறம் இருக்க குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் புலி படத்தை கொண்டாடி வந்தனர்.தற்போது இப்படம் 100 கோடி வசூலை தாண்டி விட்டதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. இது பற்றி அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.