தல அஜித் எப்போதும் தன் முடிவிலேயே உறுதியாக இருப்பார். அவரை சுற்றி பல முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கட்டி நிற்க, அவரோ சிவாவிற்கு கால்ஷிட் கொடுத்தார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியாவில் நடந்து முடிந்தது. இதில் காஜல் அகர்வாலும் கலந்துக்கொண்டார், இப்படத்தின் படப்பிடிப்பு இத்தனை வேகமாக நடக்க அஜித் தான் காரணமாம். இரவு-பகல் என்றில்லாமல் அஜித் பணியாற்ற சொன்ன தேதிக்கு முன்பே முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது,...
  இளைய தளபதி நடித்த தெறி படம் செம்ம வசூல் சாதனை படைத்தது. அதனாலேயே, இவரின் பைரவா படத்தை வெளியிட கடும் போட்டி நடந்தது. தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Sri Green Productions நிறுவனம் பிரமாண்ட தொகை கொடுத்து வாங்கியுள்ளது. தெறியை விட அதிக தொகை கொடுத்துள்ளதாக தெரிகிறது, இதற்கு முன் இந்த நிறுவனம் தங்கமகன் படத்தை வெளியிட்டது.
  தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுவது ரஜினிகாந்தை தான். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என வரிசைக்கட்டி உள்ளனர். இந்நிலையில் இதுவரை வந்த தமிழ் படத்திலேயே முதல் வார வசூலில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படம் எது என்பதை பார்ப்போம்.. 1) கபாலி- ரூ 335 கோடி 2) ஐ- ரூ 137 கோடி 3) எந்திரன்- ரூ 117 கோடி 4) தெறி- ரூ...
  தனுஷ் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் தொடரி படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம், எப்படி ஒரே நேரத்தில் இத்தனை படங்களில் நடிக்கிறீர்கள். தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளீர்கள் எப்படி? என்று கேட்க, ‘எனது வேலையை நான் காதலிக்கிறேன், கொண்டாடுகிறேன். அதனால் நான் சோர்வடைதில்லை’ என கூறியுள்ளார். மேலும், தன் அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியத்தால்...
  இரத்தினபுரி மஹா சமன் ஆலயத்தின் பெரஹெரவில் பங்கேற்ற யானை ஒன்று வெருண்டு குழம்பியதில் பெண் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற பெரஹெர ஊர்வலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் சமன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கெட்டபெர விகாரையின்...
  மாணவிகளுக்கான உடல்-உள ரீதியான பாதுகாப்பான சூழல் உருவாகும் வரை பெற்றோர் தமதுபெண்பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும் என உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கம் வெளியிட்டுள்ள நீண்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் குறித்த சங்கத்தின் தலைவர் கிறிஸ்ரி அலெக்ஸிஸ் தயாபரன் மற்றும்செயலாளர் கனகநாயகம் வேல் தஞ்சன் ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ளஅந்த அறிக்கையின் முழுமையான விபரம் வருமாறு, மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாகவும், அதன் போதுநடைபெற்றுள்ள நேர்மையற்ற...
  கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்று மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து சென்ற இவர்கள் தொடர்பாக கடும் நிலைப்பாட்டில் இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அவர்களை...
  தம்பி விக்னேஷ்.. வேதனையுடன் ஈழத்து அண்ணா எழுதுகின்றேன்... தம்பி விக்னேஷ்.. நீ போய்விட்டாய் உன் முடிவை சொல்ல வேறு வழிகள் இருந்தது. அவ்வாறு இருக்க நீ இறந்து போனது முட்டாள்தனம். நீ என் தம்பி என்பதற்காக உன் முடிவை ஆமோதிக்க முடியாது. நீ நெருப்பு. நீ இருந்திருக்க வேண்டியவன் இறந்திருக்க வேண்டியவன் அல்ல. நீ கட்சியின் தொண்டன் அல்ல நீ தமிழர்களின் தொண்டன் நீ இருந்திருக்கவேண்டியவன். நீ உண்மையானவன் நீ இறந்திருக்க வேண்டியவன் அல்ல...
  பதுளை - ஹாலி - எல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 16 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வந்து தனது தாயை தாக்கியதன் காரணமாக ஆத்திரமடைந்த மகன் தந்தையை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த 41 வயதான தந்தை, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதுடன் வீட்டுக்கு அருகில் விழுந்து இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. சந்தேக நபரான மகன் இன்று...
  அனுராதபுரம் சந்தஹிரு சேய தாதுகோபுரத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அனுமதியின்றி தனியார் வீட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக இராணுவ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் நகர எல்லைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீடு ஒன்றின் கூரையின் நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இராணுவத்தில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு சந்தஹிரு சேய தாதுகோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த...