உலகில் மிக சிறந்த மக்கள் வாழ்வதற்கான நகரங்கள், மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
Economist Intelligence Unit என்ற அமைப்பு உலகில் எந்த நகரத்தில் மக்கள் நிம்மதியுடன் சந்தோஷமாக வாழலாம் என்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது.
நகரத்தின் சுற்றுச்சூழல், கல்வி, கலாச்சாரம், உள்கட்டமைப்பு, ஸ்திரத்தன்மை உட்பட 30க்கும் மேற்பட்ட காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
இதுமட்டுமின்றி உள்நாட்டு போர், தீவிரவாதம், குற்றங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின்...
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தது சொக்லேட், இது எப்படி உருவானது என்ற கதை உங்களுக்கு தெரியுமா?
சொக்கலேட் தயாரிக்கப் பயன்படும் கோகோ மரமானது முதன்முதலில் லத்தீன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.
ஆனால் சொக்லேட்டை தற்போது தென்கிழக்கு மெக்ஸிக்கோவில் இருக்கும் Olmec மக்கள் தான் முதன்முதலில் பயன்படுத்தினர்.
மாயா இனத்தை சேர்ந்த மக்கள் கோகோ விதையினை பணத்திற்கு பதிலாக பயன்படுத்தி வந்தனர்.
இதுபோன்று பல்வேறு பரிமாணங்கள் அடைந்த சொக்லேட் வளர்ந்த கதை,
ரஷ்யாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்து போன கணவனை மந்திரங்கள், புனித நீரின் மூலம் மனைவி, மீண்டும் உயிர்கொடுக்க முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த 76 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரே இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவருடைய கணவர் இறந்து போய் விட்டார்.
வீட்டில் உள்ள ஷோபாவில் சடலத்தை போட்டதுடன் தொடர்ச்சியான பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.
மீண்டும் கணவர் உயிர்பிழைத்து வருவார்...
உலகின் மிகப்பெரிய விமானமான Airlander 10 முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து அசத்தியுள்ளது.
Hybrid Air Vehicles எனும் நிறுவனம் 35.6 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கியுள்ள Airlander 10, 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது.
விமானம், ஹெலிகொப்டர் மற்றும் விண்கலம் என மூன்றையும் கலந்து செய்த கலவையான Airlander 10, நேற்று மாலை Bedfordshire உள்ள Cardington விமானத்தளத்திலிருந்து முதல் பயணத்தை...
இலங்கைக்கு அமெரிக்க முதலீடுகளை வரவழைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம்தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக இலங்கையின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர்ச டிசில்வா, அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவர் தென்னாசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலைசந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.
அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் பிந்திய நிலைகளையும் அவர்எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, ஜனநாயகத்துக்கான தென்னாசிய பிரதி செயலர் மற்றும்வர்த்தகத் துறைக்கான பிரதி செயலர் அருண்குமார் உட்பட்ட பல அதிகாரிகளையும்சந்தித்த...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடு த்த மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் 71 ஆவது அமர்வு செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் உரையாற்றுவதற்காகவே ஜனாதிபதி நியூயோர்க் பயணமாகிறார்.
அதேவேளை அடுத்த வருடம் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பதவியிலிருந்து வெளியேறவுள்ள நிலையில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2010 முதல் 2014 வரை 5 வருடங்கள் தனது சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில் அவருக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரியவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பமாகி ஒரு வருடமாகிவிட்ட நிலையில் இந்த நல்லாட்சியை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சீமெந்து பக்கட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (17) நேற்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ந்து...
காணாமல் போனோரின் உறவினர்கள் முல்லைத்தீவு நகரில் இருந்து சென்று, வடமாகண சபை உறுப்பினர் து.ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தை இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர்.
காணாமல் போனோரை இதுவரை தேடித்தரவில்லை என்றும் காணாமல் போனோரை தேடும் அலுவலக செயலகத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் காணமல் போனோர் தொடர்பான செயற்பாடுகளை கண்டித்தும் கொழும்பில் செயலகம் திறப்பதை நிராகரித்தும் மாகண சபை உறுப்பினரிடம் மகஜர்...
இரட்டை பிரஜாவுரிமையும் அதன் பின்னாலுள்ள சதியும்! புலம்பெயர்ந்தவர்களுக்கான உளவியல் போர்!!
Thinappuyal -
இலங்கையில் நீண்ட காலம் நிலவிய கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
யுத்தம், குண்டுவெடிப்பு, ஷெல் வீச்சு, உயிரிழப்புகளின் கணப்பீடுகள் என்ற சொற்பிரயோகங்கள் மாறி, நல்லிணக்கம், சமாதானம் என்ற வார்த்தைகள் உயிர் பெற்றுள்ளன.
இரத்தம் தோய்ந்த நிலங்களில் வசந்தங்கள் வீசுவதாக மாயை. பிணக்குவியல்களின் மீது கொண்டாட்டாங்கள், சிறுவர்களின் சடலங்கள் மீது நல்லிணக்க பூங்காங்கள். அங்கு போர் நடைபெற்றதற்கான எந்தவித தடயமும் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல்...