நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிஸாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும் இந்த விசாரணைக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்படவுள்ளது. இந்த விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது....
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை விளக்க மறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார். பிள்ளையானை விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதிமன்ற முதன்மை நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். (மேலதிக இணைப்பு) சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் இரு...
தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச விசாரணைகளை தமிழர் தரப்பு அழுத்தம் கொடுத்து வந்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் உள்ளக விசாரணை நம்பகத் தன்மை அற்றதென OISL விசாரணை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தார். கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தொடர்ச்சியான தீர்மானங்கள் போன்று அல்லாது இம்முறை அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பு எதுவுமின்றி ஏகமனதாக இத்தீர்மானம்...
கடந்த 1995ம் ஆண்டில் இருந்தே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர் என்ற காரணத்தை கூறி ஈழத்தமிழர் ஒருவரை கனடா அரசு நாடு கடத்த முயன்று வருகிறது. மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரையே கனடா அரசு நாடு கடத்த முயன்று வருகின்றது. இந்த நிலையில், இதுகுறித்து குடியுரிமை மற்றும் அகதிகளுக்கான ஆணையம் கருத்து கூற மறுத்துள்ளது. ஆனால் கடந்த 5-ம் திகதி சுரேஷ் அளித்துள்ள மனுவில், குடியுரிமை மற்றும் அகதிகளுக்கான ஆணையம் குறிப்பிட்டுள்ள கருத்தை திரும்ப பெற...
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரமாக இருக்க முடியும் என்றால், சிறைகளில் இருக்கும் விடுதலை புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள தனது கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். கே.பி. வெளியில் இருப்பது சிறந்தது என்றால், விடுதலைப்...
தமிழர்களின் குரலாக சுவிஸ் பாராளுமன்றிலே ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தர்ஷிக்கா கிருஷ்ணானந்தன் வென் மாநிலத்திலே எஸ்.பீ கட்சியில் போட்டியிடுகின்றார். புலம் பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் தங்களுடைய எதிர்கால சந்ததியை அரசியலை நிலை நிறுத்துவதற்காக அவருக்கு வாக்களித்து, தமிழ் குரலாக பாராளுமன்றம் செல்ல வைக்க வேண்டும் என அவரை ஆதரித்து பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகளின் போராட்டம் இன்று மாலை 3.00 மணியளவில் முடிவுக்கு வந்தது. திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்பாக தொடர்ந்து 15 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டிருந்த அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளுக்கும் அரசமட்ட உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தது இப்போராட்டமானது கைவிடப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, பாராளுமன்ற...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை பகிரப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டத்திற்கு 56 லட்சம் ரூபா செலவிடப்படுகிறது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பதால், அமர்வுகளில் கலந்துகொள்ளும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அமைப்பு யோசனை முன்வைத்துள்ளது. இதனடிப்படையில், ஒரு மாதத்தில், மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில் மற்றும் ஒரு வருடத்தில் சபை...
தமிழீழ விடுதலைப் புலி உறப்பினரை நாடுகடத்துமாறு கனடா உத்தரவிட்டுள்ளதாக கனேடிய கனேடிய செய்திகள்  தெரிவிக்கின்றன. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாணிக்காவசம் சுரேஸ் என்ற நபரையே இவ்வாறு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கனேடிய மத்திய நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பத்துள்ளது. 1995ம் ஆண்டு முதல் கனேடிய அரசாங்கம் சுரேஸை நாடு கடத்த முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கனேடிய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஸை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டு...
முன்னணி போதைப் பொருள் வர்த்தகராக கருதப்படும் வெலே சுதாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வெலே சுதாவிற்கு மரண தண்டனை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதவான் பீரித் பத்மன் சூரசேனவினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7.06 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெலேசுதாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஜனாதிபதி உத்தரவிடும் திகதியில் உத்தரவிடும் நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்கிலிட்டு வெலேசுதாவிற்கு மரண தண்டனை...