சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
Thinappuyal News -0
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் உத்தரவாதம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என உறுதியாகத் தெரிவித்திருந்த நிலையிலேயே வடக்கு முதல்வர் மேற்படி அவசர கடிதத்தை நேற்று...
சம்பந்தனும்,மாவையும் துரோகிகள் தானே என்னைமட்டும் ஏன்கேள்வி கேட்கிறீர்கள்! ஜனா கேள்வி
Thinappuyal News -
நான் மட்டு மா? துரோகம் செய்தேன் சம்பந்தன், மாவை போன்றோரும் செய்தனர் ,செய்கின்றனர் இவர்களை விட்டு விட்டு என்னிடம் மட்டும் ஏன்கேள்வியைஎழுப்புகிறீர்கள்"
இவ்வாறுவினாவினார்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்கோவிந்தன்கருணாகரன்ஜனாஎன்றுஅறியப்படும்இவர். இன்று அரசதரப்பு உறுப்பினராக மாறியுள்ள செல்வம்அடைக்கலநாதன், வடமாகாணசபைஉறுப்பினர்எம் . கே .சிவாஜிலிங்கம், அம்பாறை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் சகிதம் பிரான்சின் லாச்சப்பல் என்ற இடத்தில் கலந்துரையாடல் ஒன்றுக்குச் சென்றார்.
அங்கு இவரைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த தமிழர்களைக் குறிப்பாக மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர்களைப் பார்த்தே இவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 9ம்...
டந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற பொலிஸ் அதிகாரிகள் கடுமையான மனவருத்தமடைந்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரையில் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு கிடைத்துள்ள 5000 முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலான அதிகாரிகள் மாத்திரமே உள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மொத்தமாக கிடைத்துள்ள 7400 முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு முழு திணைக்களத்திலும் 652 அதிகாரிகள் மாத்திரமே செயற்படுவதாகவும், அவர்களில் 200 பேர் தினமும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக முன் நின்று செயற்படுகின்ற கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதிக்கு நெருங்கிய ஒருவரின் தலையீட்டில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கொழும்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச் சந்திப்பு 30 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில்...
கண்டி, கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கட்டுகஸ்தொட்ட பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொள்கின்றனர்.
புலம்பெயர்ந்து வாழும் ஈழக் தமிழர்களில் கணிசமான ஈழத் தமிழர்கள் கனடிய தேசத்தில் வசிப்பது யாவரும் அறிந்ததே. வசிக்கின்ற நாம் அமைதியாகவும் முடியுமானவரை சந்தோசமாகவும் வாழும் நிலை உள்ளதென்பதை எம்மால் உணரப்படுகின்றது.
1956ம் ஆண்டு தொடக்கம் இன்று வரையிலான கடந்த இவ்வளவு ஆண்டுகளும் தமிழர்கள் தமக்கான உரிமைக்காக போராடிய / போராடிக்கொண்டிருக்கின்ற வழிமுறைகளை யாவரும் நன்கறிவர். இன்றைய நிலையில் தமிழரிடம் பணபலம் இருந்தாலும் விஸ்திரமான பொருளாதார தன்மையானது கேள்விக்குறியான தன்மையிலேயே உள்ளது.
புலம்பெயந்து...
35 பேரின் உடல்நிலை மோசம்! உண்ணாவிரதம் தொடர்கிறது! கூட்டமைப்பு பா.உறுப்பினர்களிடம் கைதிகள் கோரிக்கை
Thinappuyal -
எமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதாக இந்த நாட்டின் தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக அறிவிப்பைச் செய்யவேண்டுமென நாம் கோரியுள்ள போதும் இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கவில்லையென உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமது விடுதலை தொடர்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தி உத்தியோக பூர்வமான முடிவொன்றை அறிவிக்க...
அளுத்கம பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் முற்று முழுதாக வெளியேறியுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இராணுவத்தினர் அளுத்கம பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த பதினாறு மாதங்களாக படையினர் அளுத்கம பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலவரத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டடங்களை புனரமைக்கும் பொறுப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலம் நிலைகொண்டிருந்த படையினர் பகுதியை விட்டு வெளியேறுவதனை முன்னிட்டு பிரதேச மக்களும் அலுத்தகம...
யாழ்.சாவகச்சேரி பகுதியில் களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் சாவகச்சேரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு இராணுவ தரப்பினால் கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், தெரியவருகின்றது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி பிரதேசத்தில் கண்டி வீதியின் இரு மருங்கிலும் விளம்பர பதாகைகள் நடப்பட்டுள்ளன.
அவற்றின் இரும்பு குழாய்களை அண்மை நாட்களாக இரவு வேளைகளில் வெட்டி களவாடப்பட்டு வந்தன.
அது குறித்து விளம்பர பதாகைகளுக்கு உரிய நிறுவனங்கள்...
நண்பர்கள் – உறவினர்களிற்கு உதவும் சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு வரை..
Thinappuyal -
நண்பர்கள் மற்றும் உறவினர்களிற்கு உதவும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை வெளிவிவகார அமைச்சு வரை பரவ ஆரம்பித்துள்ளது.
படுகொலைசெய்யப்பட்ட சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க சிட்னிக்கான துணைதூதராக நியமிக்கப்பட்டார்.பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகரும்,கிழக்கு மாகாண ஆளுநருமான ஓஸ்டின் பெர்ணாண்டோவின் மருமகன் மேஜர் வர்ணபால பிரிட்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு நியமிக்கப்பட்டார், அவர் பிரிட்டிஸ் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தவர்கள் மற்றும் நெருங்கிய...