ஈழப் போராளி டேவிட் அய்யா காலமாகியது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்கள் எவையும் செய்தி வெளியிடாதது மிகவும் அதிருப்தி தரும் விடயமாகும் இவ்வாறு உலகத் தமிழ் வானொலி GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குளோபல் தமிழ் குழுமத்தின் உலகத் தமிழ் வானொலியான GTBC.FMஇல் வார நாட்களில் இடம்பெறும் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் நாளிதழ்கள் குறித்த பார்வை இடம்பெறுகின்றது. அதன் இன்றைய நிகழ்ச்சியிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டது பின்வருமாறு: அண்மையில்...
என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறிப்பிட்டார். முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம்...
வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தலவாக்கலை லிந்துலை நகர சபை செயலாளர் அஜித் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தலவாக்கலை லிந்துலை நகர சபையில் வரிசெலுத்துபவர்களுக்கு இம்மாதம் 19ம் திகதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. குறித்த திகதிக்குள் வரிசெலுத்த தவறும் பட்சத்தில் வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் மற்றும் பொருட்கள் நகரசபை ஊடாக பறிமுதல் செய்யப்படும். ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 31ம் திகதி வரை நகர சபைக்கு வரி...
  அம்மா, வருவார் வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றேன். அம்மா வருவதாக இல்லை. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள் என வவுனியாவைச் சேர்ந்த யுவதியான சசிதரன் யதிந்தினி கதறியழுதமை அரசியல் கைதிகளது உறவுகளின் கதறல்களுக்கு மத்தியில் நெஞ்சை உலுக்கியது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு – கோட்டையில் உறவினர்கள், அரசியல் வாதிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே இந்த யுவதி கதறியழுத வண்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரியும் , சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிஸ லெனினிசக் கட்சியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்து. இந்த போராட்டத்தில் அக் கட்சியினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , அரசியல் கைதிகளின்...
எவரினாலும் தம்மைக் கைது செய்ய முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தம்மைக் கைது செய்யும் என்ற அச்சம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் அண்மையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தாம் எந்தவொரு குற்றச்...
அவன்ட் கார்ட் தொடர்பான விசாரகைள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் காலி கடற்பரப்பில் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பதில் காவல்துறை மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பலிலிருந்து பெருந்தொகை துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னதாக இந்த சமூகத்தை தூக்கிலிட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு கயிறு தேடுவதனை விடவும், சமூகத்தை தூக்கிலிடவே வலுவான கயிறு தேட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறான குற்றவாளிகளை உருவாக்கும் சமூகமே தண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபர்களை தூக்கிலிடுவதன் மூலம் சமூகத்தில் நிலவி வரும் குற்றச்செயல்களை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களை தடுக்க...
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி கைதிகளுக்கு இந்த ஆண்டு நிறைவிற்குள் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வு வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகளை பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தங்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்தப் போராட்டத்தை கைதிகள்...
வவுனியாவில் இன்று மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. வவுனியா இறம்பைக்குளம் அருந்ததி மண்டபத்தில் இன்று ( 15.10.2015 ) காலை 10.30 மணி அளவில் மீனவர் சங்க ஊடகசந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. எஸ். சிவமோகன், திரு. சிவசக்தி ஆனந்தன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. சாள்ஸ், திரு. மாவை சேனாதிராஜா  , திரு கே.கே மஸ்தான் மற்றும் யாழ் மாவட்ட...