இலங்கை செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் விபரம் வெளியாகி உள்ளது

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார். மற்றும் லயனல் பிரனாந்து, சாலிய பிரணாந்து, சாலிய பீரிஸ், கசாலி குசேன் மற்றும் அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அங்கத்தவர்களாக...

யுத்தக் குற்றச் செயல் பொறிமுறைமை குறித்து ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம்

யுத்தக் குற்றச் செயல் பொறிமுறைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சிக் கூட்டமொன்று இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணைப் பொறிமுறைமையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து அனைத்து...

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – உதய கம்மன்பில

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் சட்ட வல்லுனராக டெஸ்மன் டி சில்வா, மஹிந்த...

யுத்தம் மீண்டும் தலைதூக்குவதனை தடுக்க பேனையை பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி

யுத்தம் மீண்டும் நாட்டில் தலைதூக்குவதனை தடுக்க கலைஞர்கள் இலக்கியவாதிகள் பேனையை பயன்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தம் எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையை நிராகரித்து மனிதாபிமானத்தை சிதைத்து விடுவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் எந்த நேரத்திலும்...

மரணங்களும் அஞ்சலிகளும் – தேவஅபிரா

சில  நாட்களுக்கு  முன்பு  எக்ஸ் கதிர்ப்  பரிசோதனைக்காக (Computer  tomography) ஒருவர் வந்திருந்தார். உதைபந்தாட்டக்காரன் ஒருவனின் கம்பீரத்தோடு இருந்த அவரின் சிறு நீர்ப்பையில்  இருந்து சிறுநீர் வழி ஆரம்பிக்கும் பகுதியைச்  சுற்றி இருக்கும்...

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் – ஐ.நா

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதல்கள் உறுதி செய்யப்பட...

பிரபாகரன் ஆயுதங்களுடன் நாட்டை பிரிக்க முயற்சித்தார் விமல் அதனை வார்த்தைகளின் ஊடாக செய்கின்றார்:

வேலுப்பிள்ளை பிரபாகரன் படையணி மற்றும் ஆயுதங்களைக் கொண்டு நாட்டை பிளவுபடுத்த முயற்சித்தார் எனவும், அதே காரியத்தை வார்த்தைகளின் ஊடாகவும் பிரச்சாரங்களின் ஊடாகவும் ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஹரிசன்...

யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டில் சட்டங்கள் எதுவும் இல்லை

இலங்கையில் யுத்தகுற்றவிசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் உள்நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும் என கருத்துதெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம இறுதி யுத்தத்தில் 40000பேர்கொல்லப்படவில்லை என தங்களது ஆணைக்குழு கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவரது...

பிரகித் கடத்தல் சம்பவத்தில் கிடைத்துள்ள தகவல்களை உறுதி செய்வதற்கு தொடரும் விசாரணைகள்

ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்திற்கு பின்னால் செயற்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் பல தகவல்களை சேகரித்துள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேருக்கு,...

இந்திய அமைதிப் படையால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுகூரல்

இந்திய  அமைதிகாக்கும் படையினால் கடந்த 1987ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் காலை போதனா வைத்தியசாலையில் நினைவுகூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 9...